HAAPPY HAPPY CHRISTMAS....FRIEND'S
எபிரேய--அரமேய மொழியில்
மெசியா(மீட்பர்,, இரட்சகர்)
எனும் நாமகரணம் பெற்று
கன்னி மரியாவின்
திரு வயிற்றில் உதித்து
துருவ நட்சத்திரம் வழிகாட்ட
இடையர்கள் புகழ் தழைக்க
மாட்டுக் கொட்டகை
தேடிப் போய்
வைக்கோல் மெத்தையில்
அவதரித்த திருமகனே
உலகை ரட்சிக்க
பிறந்த ஒளியே....
கடவுளே மனிதனாய்
அவதரித்தாலும்
கல்லால் அடித்து
முள்கீரீடம் சூட்டி
உதிரம் வழிய வழிய
சிலுவை அறைவர்
அற்ப மானிடங்கள்
என்பதை அழகாய்
அறிவுறுத்துகிறதய்யா
உன் அவதாரம்
கருணையும் அன்புமே
உன் சமதர்மங்கள்
எதிர்பார்பில்லாமல்
ஏழைக்கு உணவிடுபவன்,,,
பொய் பொறாமை களைபவன்...
புறம் பேசாதவன்....
ஒழுக்க நெறி தவறாதவன்..
அறியாது செய்யும் பாவங்களுக்கு
தவறாது மன்னிப்பு கேட்பவன்
எல்லா உயிர்களையும்
தன் போல் பாவிப்பவன்
எனும் உன் அதிகாரங்களை
அகங்காரங்களாய்
அறிவில் ஏற்றாமல்
அன்பில் ஏற்றி
உன் காலடித் தடம்
பின் பற்றும்
ஒவ்வரு மனிததுள்ளும்
மதங்களை களைந்து
தினம் தினம் நீ உயிர்த்தெழுகிறாய்
அய்யா..கருணை தெய்வமாய்......
புனித மேய்ப்பானை
வரவேற்று புகழ் பாடி
கீதம் இசைக்கும்
கிறித்துவப் பெருமக்களுக்கு
வாருங்கள்
மகிழ்ச்சி நிறைந்த
வாழ்த்துகள் பகிர்வோம்...
எபிரேய--அரமேய மொழியில்
மெசியா(மீட்பர்,, இரட்சகர்)
எனும் நாமகரணம் பெற்று
கன்னி மரியாவின்
திரு வயிற்றில் உதித்து
துருவ நட்சத்திரம் வழிகாட்ட
இடையர்கள் புகழ் தழைக்க
மாட்டுக் கொட்டகை
தேடிப் போய்
வைக்கோல் மெத்தையில்
அவதரித்த திருமகனே
உலகை ரட்சிக்க
பிறந்த ஒளியே....
கடவுளே மனிதனாய்
அவதரித்தாலும்
கல்லால் அடித்து
முள்கீரீடம் சூட்டி
உதிரம் வழிய வழிய
சிலுவை அறைவர்
அற்ப மானிடங்கள்
என்பதை அழகாய்
அறிவுறுத்துகிறதய்யா
உன் அவதாரம்
கருணையும் அன்புமே
உன் சமதர்மங்கள்
எதிர்பார்பில்லாமல்
ஏழைக்கு உணவிடுபவன்,,,
பொய் பொறாமை களைபவன்...
புறம் பேசாதவன்....
ஒழுக்க நெறி தவறாதவன்..
அறியாது செய்யும் பாவங்களுக்கு
தவறாது மன்னிப்பு கேட்பவன்
எல்லா உயிர்களையும்
தன் போல் பாவிப்பவன்
எனும் உன் அதிகாரங்களை
அகங்காரங்களாய்
அறிவில் ஏற்றாமல்
அன்பில் ஏற்றி
உன் காலடித் தடம்
பின் பற்றும்
ஒவ்வரு மனிததுள்ளும்
மதங்களை களைந்து
தினம் தினம் நீ உயிர்த்தெழுகிறாய்
அய்யா..கருணை தெய்வமாய்......
புனித மேய்ப்பானை
வரவேற்று புகழ் பாடி
கீதம் இசைக்கும்
கிறித்துவப் பெருமக்களுக்கு
வாருங்கள்
மகிழ்ச்சி நிறைந்த
வாழ்த்துகள் பகிர்வோம்...

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..