Showing posts with label தலைவர்கள். Show all posts
Showing posts with label தலைவர்கள். Show all posts

Monday, 17 October 2016

அறி விண்கலமொன்று அவனியிறங்கிய நாள்

அக்னி சிறகு விரித்து 
அறி விண்கலமொன்று
அவனியிறங்கிய நாள் 

எளிமை சுடரே
எழுச்சி வழியே 
தன்னம்பிக்கை நாட்காட்டியே
தன்னலமற்ற தவப்புதல்வனே
அன்பாலும் அரவணைப்பாலும்
உலக உயிர் புதுப்பித்து
புதுவழி காட்டும் நம்பிக்கை ஆசானே

நீ வாழ்ந்த காலத்தில் 
வாழ்ந்தோம் நாங்களென்பது
வாழ்நாள் பெருமை எங்களுக்கு

வாழ்தல் தேடும் உயிர்களுக்கு
இருப்பிட உயர்விடமாய்
நீர்நிலைக் கோளமாய்
என்றும் நீர் 
ஈரம் கோர்த்து 
வியப்பித்திருக்கிறாய்
விண்வெளியுல்...

Tuesday, 29 September 2015

சரித்திர போர்மறவனுக்கு

சம எதிரி
மட்டுமில்லை

சமன் களமும்
முக்கியம்

சரித்திர
போர்மறவனுக்கு

செந்நீர் எழுத்தின்

மாவோ

புரட்சி மண்ணின்
வீரக் குருதி

"சே" எனும்
செந்நீர் எழுத்தின்

துணைக்கால் விகுதி

















Sunday, 30 August 2015

சுதந்திர பா ”ரதம்” 69

கும்மியடிக்குது
கூத்தாடுது
குதுகலமாகுது
குழந்தைகள் கொஞ்சி இழுக்குது....

சுதந்திர பா “ரதம்” 69

நேருவாய் காந்தியாய்...
நேதாஜியாய்..இந்திராவாய்
கப்பலோட்டியாய்
எம் மீசைத்திமிரோனாய்

பாரதமாதாவாய்..பார்கொடிகாத்த குமரனாய்

கதிரெழுந்த...குருத்தோலை
பிள்ளைகள் பிரிய மடலணிய

பட்டாசு சந்தோஷங்களுடன்
பால் இனிப்பு பொங்க

பட்டொளிவீசி பறக்கும் எம் சுவாசக் கொடியுடன்

செழுமை..தியாக உதிரமாக
பசுமை..மன செழுமை எழ
வெண்மை...பசும் உள்ளம் தர

சுழல்வாழ்வு சாட்சியாய்
சுற்றும் அசோக சக்கரம் அமைதியணைக்க

உயிர்காற்றாடுகிறாள் எம் தியாக திமிர் மாதா
மாராப்பு கொடியாய் மானஒளிவீசி

நேர்மையாடி..நேர் உண்மையாடி
வேற்றுமொழி பேசினும்,,வேரென பிரியமணைத்து

ஒற்றுமையாய்..ஓங்குதிமிர் நிறைந்து

இந்தியனெனும் இளங்குருதி கொப்பளிக்க
என்நாடு..என் மக்கள் ..என் சொந்தமென
இன்றும் நின்று ..இயற்கை சுழல் தாங்கி

எல்லை காக்கும் ..
எம்குல மறவீர சிப்பாய்களுக்கு
சீரெழுந்து வணக்கம் செய்து

வந்தே மாதரம் ....

கூன் நிமிர்ந்த குலங்களை உயிர் நிமிர்த்தி
சுவாசம் தந்த தியாகபிரமங்களை

மண நிறை மலர்தூவி உயர் வணங்கி

வாருங்கள் ..வாழ்த்துப் பண் பாடி

விளையாட்டாய் ..விளையாட்டில் தோன்றும் உணர்வை
விவேகநெஞ்சில் உரமணைத்து

இந்தியனெனும் திமிர் நிமிர

நித்தம் புத்தம் விடியல் காணும்

தாய்மை போற்றி..ஆடிப்பாடி.... குழந்தைகளாகி
தொடர்பிரியம் தொட்டிழுப்போம்

ஆனந்த தெப்ப...சுதந்திர பா””ரதம் “”69

இனிய வாழ்த்துக்கள்...தோழமைகளே

ஜெய்ஹிந்த்
 —

Sunday, 23 August 2015

உரு...உருக்குலைகிறது புகையென

உரு...உருக்குலைகிறது
புகையென

பெரிய கூச்சல்
கத்திய ஆர்ப்பாட்ட அழுகை

கன்னம் வழியும் கண்ணீர்சரம்
ஏதுமில்லை

கவலை தோய்த்த
இந்தியமுகமெங்கும்
இருள்சோககுவியல்

தடைபடும் வேகமும்
தடுமாறும் சிந்தையும்

தளர்ச்சியாய்...சோர்வணக்க

எதிர்ப்பையும் இழப்பையும்
எடுத்துச் சொல்லும்

வலிமை ஆயுதமான.....

கனத்த மவுனம்
காட்சியாக்குகிறது

அங்கு
இயற்கையின்....இடப்பிளவை

அண்ணாரின் ஆத்ம விடுதலையும்

ஆயுள் மைல்கல்

Thursday, 30 July 2015

தவறு தான்..............தப்பு இல்லை

தவறு தான்..............தப்பு இல்லை

தீர்ப்பு நியாயமானது எனினும்
தண்டணை யோசிக்க வைக்கிறது

வெளி இருப்பவர்கள் எவரும்
உத்தமரில்லை எனும் போது
தவிர்த்திருக்கலாம் .....
ஓர் சாதனைப் பெண்மைணியின்
அரசியல் முடக்கத்தை....

தனிஒரு மனுசியாய்.....
எதிர்படும் வல்லூறுகள்
எதிர்த்து மோதி தப்பித்து

எஃகின் தன்மையாய் இறுகி
இரும்பு மனிதமாய் உருவான பெண்மை

முதல் வெற்றி போதையில்....

பசித்தவனுக்கு கிடைத்த
அமுத ஆளுமையில்
பதறி உண்டதே......
கீழ் சிந்தி மேல் வழிந்து ....
விலங்கிட்டது...இன்று

எதிரிகளும்..வியக்கும் துணிச்சலில்
எள்ளி நகையாடிய போதும் கலங்காமல்

சீர் கொண்டு வீறு எழுந்த பெண்மை

பிறக்கும் போது அறிந்தோமா..?
வளரும் போது உணர்ந்தோமா..?

வாழ வாழ தானே
அனுபவம் சொல்கிறது வாழ்க்கையை

அம்மு அம்மு என்று
அறிந்தோர் கொஞ்ச

அம்மா அம்மா என்று
தெரிந்தோர் கெஞ்ச....

பெண்சிங்கமாய் தன்னை தானே
சிலை வடித்துக் கொண்ட ..பேரழகு சிற்பி

நடுநிலையாளன் பார்வையில்

விடுதலை என்பது வெற்றியுமில்லை
தண்டனை என்பது வீழ்ச்சியுமில்லை
எனும் பக்குவத்தை ..நிச்சயம்
நிதர்சனம் உணர்ந்திருப்பார்கள்

போராட்ட வாழ்வை விரும்பி
தோள் அணைத்தவர்கள்

துணிவில்..அறிவில்..
அழகில் ..ஆளுமையில்

தனக்கென தனியிடம் எடுத்து
பெண்மையின் முன்னோடியாய்
திகழ்ந்த முதன்மையே

சவாலை சாதனையாக்கும்
சரித்திரமே....

இஃதும்
உம் மானுடப்பிறவியில்
இன்னுமோர் மைல்கல்லே....!!!!!!!!!!

திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி...(தி.மு.க)


திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி...(தி.மு.க)

தங்கத்தமிழ் எடுத்து தன்னைச் செதுக்கிய
முத்துவேலர் தமிழுக்கு..இன்று அகவை 91

அஞ்சுகத்தமிழ் பெற்ற.....அரும் பெரும்
செம்மொழிக்கு..இன்று அகவை 91

தூக்குமேடை நாடகத்தமிழ் மூலம்
கலைஞர் பட்டம் பெற்ற..கலைமகனுக்கு..அகவை 91

கண்ணம்மா தொட்டு...மந்திரிகுமாரி பிடித்து
பூம்புகார் வழியில்,,இளைஞராய் வெற்றிநடைபோடும்

கதைவசனத் தமிழுக்கு..இன்று அகவை 91

சங்கத்தமிழ் எழுதிய தெண்பாண்டி சிங்கத்திற்கு
உரைதொட்டு..குறளோவியம் எழுதிய பொன்னர் சங்கர்க்கு
இன்று அகவை 91

ஐந்துமுறை முதலமைச்சராய்..பன்னிருமுறை
சட்டமன்ற உறுப்பினராய் இருந்த கழகத் தமிழுக்கு.....
இன்று அகவை 91

வளரிலம் பருவத்தில் கவிதை கதை என வாகை சூடி

தாய்மொழி தெலுகு எனும் போது
தமிழ் மொழி பிறந்து...தமிழ்தேனை..தாய்பாலென
அள்ளிப் பருகி ருசித்த முதும்பெரும் தலைவனே

எம் ஏ பி எப் (March Attempt But Fail)..(MABF)படித்த,.,,பெரும் தமிழ்செல்வனே

நீதிக்கட்சி எழுப்பியதோ,,நின் சீர் நடை அரசியல் பயணத்தை
தமிழ் எனும் வேல் உனக்கு உதவியதோ..இடைவரும்
இடர்வரும் களைகளை களைய......

எழுத்தில் எழுந்தாடும் புரட்சியை
பேச்சில் குதித்தாடும் உன்வீச்சு வேகத்தை கண்டு
ஆளுமை செய்ய வந்த ...அந்நிய மொழியாம்
இந்தியும் சென்று பதுங்கியதோ...அடுக்களையில்

தமிழ் என் மானம் என்று தாய்மானம் காத்த தமிழனே

தமிழெனும் மொழி வளைத்து
கவிநடையில்..சொல்லோவியத்தில்..இரட்டைகிளவி தெறிக்க நீ இன்றும் களமாடும்..மொழிநடையில்

உமக்கு
முன்னும் ஒருவரும் பிறந்ததில்லை
இன்னும் ஒருவரும் பிறந்ததில்லை
பின்னும் ஒருவரும் பிறக்கப் போவதுமில்லை...தலைவா

வாழும் தமிழனுக்கும்.....வரப்போகும் தமிழனுக்கும்
நீயே வள்ளுவன்....

உன் அகராதி புரட்டாது...எங்கும் புள்ளி வைக்காது
இன்றைய புதுதமிழ் மழை

அண்ணா எனும் உம் அருமை தலைவனுக்கு
நீ வடித்த..நெஞ்சுருகும் கவிதாஞ்சலியில்

நீர் வாசித்த குரலாஞ்சலியில்...
ஒலிப்பெருக்கியின் மூலம் கேட்டு

கலங்காத வைடூரிய நெஞ்சமும் சட்டென கலங்கியது

’’’’கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்.. இன்று
மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை,

கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்? ’’’

என்றாய்..குரல் உடைந்து..நீர்

தமிழகமே..ஓங்கிக் குரலெடுத்து...
தன் தாய் பிரிவைப் போல உணர்ந்து கதறியது

’’’நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா.. ;’’ என்றாய்

தந்தார் ,,,சென்றார்...தன் இதயம் கோர்த்து இன்றும் காத்து
பேர் பெற்று ..சீர் பெற்று..பட்டொளி வீசுகிறாய்..தமிழே

நீர் தமிழின் ...தேசிய அடையாளம்

உறக்கம் கண்டதில்லை..உம் தமிழ்
சோர்வு கண்டதில்லை..உம் பேனா
சுகம் கண்டதில்லை..உம் இளமை

போராட்டங்களே வாழ்வென எடுக்கும்
சரித்திர துணிச்சல் ..உம் அகவை

எழுமின் விழுமின் இலக்கை அடையும் வரை
ஓயாது உழைமின்...என்பதே உம் வாழ்க்கை...கோட்பாடு

நீர் சந்திக்காத வெற்றியுமில்லை....
உன்னை தோள்தொடாத தோல்வியுமில்லை

எதுவந்த போதிலும்..உம் தமிழ்
இளமை கொஞ்சும் நகைச்சுவை குசும்புகளுடன்

தளராது நடைபோட..தயங்கியதுமில்லை

யாயும் ஞாயும் யாரோ கியரோ? எனும் குறுந்தொகைப் பாடலுக்கு..விளக்க உரைதருவாய்....

கூடல் விழா தொடங்குவதற்கு,
ஊடல்தான் கொடியேற்றி வைக்க வேண்டும்..என்று

மொழிமகளும் நாணி வெட்க ஆடை போர்த்துவாள்
நின் எழுத்தாணி கற்பனையில்..களவு மயங்கி

காதல் அழைக்கிறது,,,கடமை தடுக்கிறது...எனும்
உன் நாவல் 1972 ல்...ராணிமுத்துவில் வெளிவர.......

காதல்சுவையெடுத்த உம் மொழியை ரசித்து ருசித்து
இளமைப்பருவ வாசிப்பில் இன்னும் அதை பொக்கிஷமாய்
பாதுகாக்கும் உள்ளங்கள் ..பல

சாதி மத இனம் கடந்து வாழும் தமிழக சரித்திரமே

கழக வேறுபாடு இல்லாமல்...அனைவரும் ரசிக்கும்
அரும் பெரும் தலைமையே

தமிழ் எனும் சொட்டுத் தேன் ருசி பருக
உன்னை உள்வாங்கி உள்வாங்கி.....ரசிக்கும்..
கோடான கோடி தமிழ்மகன்களின்.....நிகழ்வுத் தேனடையே

பற்றும் பாசமும் .அன்பும் ஆளுமையும்
நிறைந்த.......நேசத் தலைவனே

லட்சக்கணக்கான தொண்டர்களில்...முதலாய்
தானாய் வந்து முன் நிற்க்கும் கழக விசுவாசியே

தமிழையும் தாய்கழகத்தையும்...
தன் உயிரினும் மேலாய்நேசிக்கும் ....உன்னத தலைமகனே

சொல்லம்புகள் பல தாங்கிய போதும்..சோர்வேனா..என
வெற்றி சிறகு விரிக்கும்,.....மணிமகுட மாடப்புறாவே

முக்கடல் சந்திக்கும் ...குமரிக்கடல் நடுவே சென்று
தம் குறள் புலவனுக்கு..சிலை செதுக்கிய ....சீரிளம் தமிழே

சிலேடை மொழியெடுக்கும் இளமை வித்தகமே

நீர் வாழும் காலத்தில்...என் தாய்மடியாம்
தமிழ் மடியில் நான் கருத்தரித்தது..என் பெருமை

நின் வளமையை..எளிமையை...முதன்மையை
மொழிமையை...உள்வாங்கி உயிர் கசிந்து ரசிப்பது...
என் தவப்பயன்

நின்னை எழுத நான் என் பிள்ளைதமிழ் எடுத்தது
என் பிறவி செய்த..புண்ணிய கடமை

தொன்மைத் தமிழின் தெளிவான முகவரி....
எண்..8...கோபாலபுரம் 4வது தெரு....

வரும்தலைமுறைகளுக்கெல்லாம்
வாழும் தலைமுறையாம் தமிழ்மகளின்..கழக கோமகனை

வாழ்த்த வயதில்லை...வணங்கவும் துணிவில்லை
தள்ளி நின்று தனிப்பெரும் சுவாசம் எடுத்து

பெருமூச்சு மறந்து பெருமை பொங்க ரசிக்கிறேன்

தலைவா,,,என்றும் நின் தமிழுக்கு..
நான் அர்ப்பணம்...சமர்ப்பணம்.............கோவே

Monday, 27 July 2015

அக்னி சிறகொன்று .....அவனி விதைந்தது

அக்னி சிறகொன்று .....அவனி விதைந்தது

கடைகோடி இந்தியாவின்
கடல்மாநகரம் பிறந்து

கடையேழுவள்ளல் வழியில்
கலாம் எனும் பெயர் தாங்கி

கனவு காணுங்கள் என்று
கை தட்டி மார்நிமிர்த்தி

அணு அடையாள நிமிர்திமிராய்
அறிவியலின் அணுபிழம்பாய்

உலகெழுந்து நிறைந்தது
உயர் தமிழனின் வீர அடையாளம்

மானம் காத்தாய்..மண் காத்தாய்
எள்ளிநகையாடும் எதிரியவன்
சிந்தை சுருங்க வைத்து
ஏவுகணை நாயகன் ஆனாய்

விமர்ச்சன களைகளை
வீர சகாசங்களால் வேரறுத்து
விருதுகள் கொஞ்சும் வெற்றி வாளானாய்

விலைபோகவில்லை
அடமானம் வைக்கவில்லை
ஆதலால் நீ,,,,,அணு மணம் பெற்றாய்

தனித்து நின்றாய்
தன்மானமாய் நின்றாய்
தமிழனாய் நின்றாய்...இன்றோ
தரணி வென்றாய்

அக்னி சிறகென்று...
வேள்வி சரிதை எழுதினாய்
வெகுண்டெழுங்கள் என்று
தோள் தட்டி கரம் கொடுத்தாய்

முதல் குடிமகனாய்...நாடு உனக்கு
மகுடம் சூட்டி அழகு பார்த்தபோதும்

என்றும் நான் ஆசிரியனே என்றே
ஆச்சிரியப் படவைத்தாய்

பொன்மொழிகள் தந்து
மண்ணாளும் சூத்திர சாத்திரம் வகுத்தாய்

வாழும் விவேகானந்தனாய்
அறிவுத்துறவறம் கண்டு
அகிலமெங்கும் வேர்பரவி
விழுது விதையூன்ற அறிவு பொழிவுகள் தந்தாய்

கவிதைகளின் பிரியனாய்
கர்நாடக இசை ரசிகனாய்

குழந்தைகளின் நேசனாய்
குற்றங்களின் மன்னிப்பாளனாய்
குடியரசு வென்ற மாண்பு மிகு...மண் நிறையே

கண்நிறை வழிந்து உருக
கடலளவு கன மனம் தந்து.....கையாட்டி செல்லும்
கலாம் எனும் சாதனை சவாலே

விஞ்ஞான வெற்றி அடையாளமே
வீர வணக்கம் ...

வந்த பிறவியை...வாழும் பிறவியாய்
நிறுத்தி நிலைநாட்டி ..இன்று..ஆத்ம விடுதலையாகும்

அணு அனல் எரிமலையே

வீர வணக்கம்.............ஜெய் ஹிந்த்

Tuesday, 16 June 2015

நிறைதிமிரே

புரட்சித்திமிர் பூமியெழுந்த
செங்குருதி நாள்

சுமக்கையில் அறிந்தாளா
இல்லை முதலாய் நீ குரலிட்டு
கை நிறைகையில்
உன் தாய்...உணர்ந்தாளா

தான் சுமந்தது..ஒர் வீர வித்தென்று

வலிகள் தாங்கி ஓர் சமுதாய
வலிநீக்க வந்த மருத்துவனே

அடிமட்ட மக்களை தன்னின் பிறப்பாய்
இமையணைத்த வேதனே

மரணத்திற்கு அஞ்சாத மாவீரனே
சே எனும் பெயரின் பொருள் விளக்கமாய்
சேயென அனைவரையும் அரவணைக்கும் நண்பன் நீ

சோசலிசத்தை உயிர் மூச்சாய் சுவாசித்து
சுடரெழுந்த சிம்மசொப்பனமே

பிடல் காஸ்டோரோவின் பிரியத் திமிரே

கவிஞனாய்..மருத்துவனாய்..அரசு அதிகாரியாய்
போராளியாய் எத்தனை அவதாரம் நீர் கொண்ட போது

புரட்சி எனும் உதிர அரிசியிலேயே
இன்றும் உன் பெயர் எழுதி விளைகிறது
எங்கள் போராளி இளைய நாத்துக்கள்

ஏவுகணைகளிலும் ராணுவத்திலும்
தன் திமிர் காட்டிய
வல்லரசுகளை ...கழுதைப் புலியாக்கி

மனிதசக்தியை ..மாபெரும் சக்தியாக்கிய மாவீரே

எழுந்து நின்று நிமிர் மார்காட்டி மரணம்
வரவேற்று மகிழ்ந்த எழுச்சி வேரே

இன்றும் அடக்குமுறை எழும் போதெல்லாம்
உலகு அச்சம் கொள்ளும் ..எங்கு நீ
பெயராய் பேரரறிவு உதிரமாய்
விழித்தெழுவாய் எரிமலையென என்றே

பூமியின் கடைசி ரோஷ மனிதன்
இருக்கும் வரை ....

நீயுமிருப்பாய் நிறைதிமிரே

Tuesday, 26 May 2015

அரியணை ஏறுகிறது ..அரும் சாதனை பெண்மை....

அரியாசனம் ஏறும் அரும் சாதனை....

வந்த தடைகளை தகர்த்தெறிந்து

வாழ்ந்த அனுபவங்களை கற்றுத் தெளிந்து

வாழ்நாள் சாதனையாய்.....
வாழ் நிமிடங்கள் துணிச்சலாய்

வாழ்பிறவி சவாலாய்
வாழ் மக்கள் மனம் குளிர

அரியணை ஏறுகிறது ..அரும் சாதனை பெண்மை....

தமிழ் கற்றோரும் சொல்வளமை பெற்றோரும்
திராவிட வழிப் பாரம்பரியமும்
காளைமாடென கைவிரித்து
தேசியம் ஆண்ட பரம்பரையும்

நாடாள விதியெழுத
நிகழ்வு மாற்றி.....
நிதர்சனம் கண்டு
திரையெழுந்த வெற்றியை
அறிமுகமாக்கி....களமிறங்கியது
அன்றைய....இரு வித்திலை...வெற்றி இலை

மக்கள் திலகம் ஆசியுடன்
மக்கள் தம் ஏகோபித்த ஆதரவுடன்.....

மக்களின் முதல்வராய்
வெகுண்டெழும்

சோதனைகள் பல வென்ற
சாதனை பிழம்பே

சிம்மாசனம் ஏறும் சிம்ம வாகினியே....

கல்லடி சொல்லடி பல பட்டாலும்..காய்த்து கனிந்து
பசிநீக்கும் தாய்மை மரமாய்
தரணி எழுந்த கற்பகத்தருவே

வெற்றியின் பெயரை வேரணைத்த நீர்

வளர்ச்சியின் பாதையில்
வண்ணபூங்காத் தமிழகம் அமைக்க

வாழ்த்தி வணங்கி
வரவேற்று மகிழ்கிறோம்...

சரித்திரம் போற்றும்
சாதனை பெண்மணியே

வரலாறு வெல்லட்டும்
உம் வாழ் நாள் துணிச்சல்
வெற்றி புகழ்....

கல்வெட்டாய் நிலைபெற்று நீடிக்கட்டும் .....
உம் போராட்ட பெரும் காவிய பிறவிப்பயன்

வாழ்க வளர்க தமிழகம்

உம் விழி வழி ஆட்சிப் பாதையில்......!!!!!

வாழ்த்துக்கள் அம்மா..!!!

Tuesday, 12 May 2015

வெற்றியணைக்கிறது

வெற்றியணைக்கிறது.....வெற்றிச்சின்னம்

சிம்மவாகினியின்..சிகர வெற்றி
மைல்கல்லாய்...மையம் குவிக்கும் வெற்றி

பதினெட்டு ஆண்டுகளாக
பங்குகுலைத்த நிம்மதி
பாராளும் வெற்றியாய்

சோதனைகள் இனி இல்லை தலைவி
உம் தம் சாதனைப் பாதையில்

விட்டுவிட்டுத் துடித்த
தமிழக இதயம்...இப்போது
தாளாத சந்தோஷமாய்

அமைதிபாதையில் இன்னும்
உமது பிறவி சாதனைகள்
சிங்க ஆளுமையாய்

சிகரமேறி தொடர

ஆனந்த வாழ்த்துக்கள்

நீதியின் பாதையில்
மற்றுமோர் மாற்றமுடியாத

வரலாற்று சாதனையே

உன் வழக்கும்..வாழ்வும்
வண்ணமிகு தீர்ப்பும்

வாழ்க தமிழகம்...
வளர்க நின் ஆட்சி வளர்ச்சிப் பாதையில்

அமை “தீ”

அனுமதிக்கு காத்திருக்கிறது

ஓர்................அமை “தீ”

பெண் எனும் பேரின்ப பிறவியெடுத்து
நீர் கண்ட போராட்ட களம் தான்
எத்தனை எத்தனை

வாழ்ந்தீரா...வீழ்ந்தீரா என்பதை விட
வாழவிட்டாரா..என்றே தொடர்கிறது
இன்று வரை உம் சாதனை சோதனை பாதை

தவறோ..தப்போ..தன்னதிகாரமோ
பதவி நிலை பாழ்பாடோ

எதுகொண்டு உம்மை கோல் ஆட்டியது
இந்நிலை நீர் படியேற

சூதுகொண்டோர் ..எல்லாம் சூழ்ச்சியாய்
சூட்சம வாழ்வு வாழ

சூதுகவ்விய நீரோ இன்று...சூழ்நிலை பணையமாய்

எதிரிகள் கூட எதிர்வாதிட முடியா
வழக்கே உம் வாழ்க்கையில்

தலைமேல் தொங்கும்
கூர்கத்தி...தூக்கு முடிச்சிடலே
கூப்பாடு போட விடாமல்
இங்கு கழுத்திருக்கிறதோ அவர்களை

கருப்பட்டி பானைக்குள் கைவிட்டவன்..கைதுடைத்து
போகமாட்டான் என்பதே அவர்தம் நிலைமையும்

எல்லோரும் இங்கு குற்றவாளிகளே
எடுத்துச் சொல்லும் சாட்சியமைந்தால்

சட்டங்களும்...தண்டணைகளும் தவறுகள் திருத்தியமையக்கவே தவிர..தண்டித்து ..
துண்டிக்க அல்ல

உள்கட்சி கொலைகள் இல்லை
ஆணவத்திமிர் ஆட்டங்கள் இல்லை
வாரிசு பகிர் வன்ம புகைச்சல் இல்லை
சட்டஒழுங்கு பிரச்சனையுமில்லை

அமைதி பூங்காவாய் அன்னை தமிழகம் மீண்டெடுத்து
மீட்சி காணும் சூழலில்

குறை என்று சுட்டிக்காட்ட ...பாரம்பரிய எதிராளிக்கு
பக்குவ வாதிடல் சுட்டுவிரலில்லை

அமையுமா இதுபோல் ஓர் ஆட்சியமைப்பு என்றே
தம் அமைதியிழந்து தாகம் தவித்த
ஒவ்வொருதுறையினரும்...இன்று ஓர் தன்னிறவமைதியில்

மன்னிப்போமே மனம் மாறிய மனிதரை
தொடரட்டுமே இத்தொப்புள்கொடி இருவித்திலை

ஆயிரம்கோடி வேண்டுதல்கள்.....
அமைதியான பிரார்த்தனைகள்.என
விடாது வேகம் துடிக்கும் ஈர இதயங்களின்
தவப் பலித்தலின்

வெற்றியாய் வெளிக் கொணரட்டும்

சாதனைப் பெண்மையின்
சோதனை மீள்...
அரசியல்.தொடர் ஓட்டங்களை

Tuesday, 31 March 2015

பகுத்தறிவு பகலவன்

பகுத்தறிவு பகலவன்
சாதீய தீ
சமுதாய முன்னேற்ற வேள்வி
பிச்சை புகினும்
பிடித்த கொள்கை விடாதவர்

வைக்கம் சிங்கம்
பெண்ணிய விடுதலை சுவாசம்
என

அடிமை கூன் நிமிர்த்திய
ஆளுமைதேச
தொண்டுகிழவருக்கு
அடைமொழிகள் குமிந்தாலும்

கைம்பெண் அவலம் தடுக்க
மஞ்சநூல் சரடை
முற்போக்காய் எதிர்த்து
கைதட்டி கையெழுத்து
கல்யாணம் செய்வித்தவரே தவிர

கட்டிய தாலி அறுக்க சொல்லும்
மன உணர்வு பாதிப்புகளை
என்றும் பயிர்வித்தவர் அல்ல....

ஆதலாலே
அவர்..என்றும்

பெரியார்...

அவர் வழி வருவதாய்
சொல்லும் நீர் _________....????????

Monday, 26 January 2015

எங்கள் மீசைத் திமிரோன்

விதைநெல்லாய் வந்து
விடுதலையை
அறுவடை செய்த
வீரவிளைநிலம்...

அணுக் குஞ்சுக்குள்
அக்னி வளர்த்து

பாதக மனிதரை
மோதி மிதித்து..காறி உமிழ
பாப்பா பாட்டு
சொல்லி கொடுத்த

எங்கள் மீசைத் திமிரோன்

Monday, 19 January 2015

பொற்காலம் தந்த பொன்மனச் செம்மல்



கண்டியில் பிறந்த காலச்சக்கரமே
காவலானாய் வந்த ஏழைப் பங்காளரே

நடிப்பெனும் மேடையில்
நிதர்சனமாய் வாழ்ந்த மனிதமே

சத்ய பாமா மகனே
சாரங்கபாணி தமையனே
சதிலீலாவதி முதல் நாயகனே

அகவை 95 கடந்த போதும்...
70 ல் மண்ணுடல் நீர்த்த போதும்
இன்றும் அவணி வாழும் அற்புத சரித்திரமே

வள்ளல் உன் குணமே கருணை உன் முகமே

அரிதாரமிட்டு அடையாளமாகி
அகம் நுழைந்து ஜெகம் ஆண்டாய்

இரட்டை இலை பிதாமகனே

இறந்தும் இறவா வள்லலாய் வாழும் சீதக்காதியே

உன் பெயர் சொல்லியே இன்னும் ஜீவிதம் நடத்துகிறார்கள்
உந்தருமை உயிர் நேசிப்பு தொண்டர்கள்

நிழலென வந்து நிஜமான பேரெழிலே
பெருந்தன்மையின் சிகரமே
சுட்டபோதும் .....எதிரியை சுடாத நெருப்பே

அண்ணாவின் அருமைத்தம்பியே
அவரின் இடபாகமாய் கடற்கறை கோயில் உறையும்
மக்களின் இதய தெய்வமே

திலகமிட்ட மங்கையர் முதல்
திமிரும் காளைகள் வரை நரை மீசை முறுக்கி
ரசிக்கும் மன்மத மக்கள் திலகமே

வந்துவிடாத நடனத்தையும்...வாசல்வரை வந்து
கதவடைக்கும் அழுகையையும்....அசாத்தியாமாய் புறந்தள்ளி
அழகிய ஸ்டெயிலாய்....இருவிரல் கொண்டு புது செயல் தொடுத்த இதயக்கனியே

நீர் சிரித்தால் சிரிக்க வைத்து ..அழுதால் ஆவேசப்படவைத்து
ஆவேசப்பட்டால் சிலிர்த்தெழ வைத்து.....
திறமை மீறி ..திரை தாண்டி
திவ்யமாய் வாழ்ந்த பாரத் ரத்னா பெருமகனே

ஏழைப்பங்களானாய் நீர் ஆவியணைத்து உடன்இருக்கிறாய் என்றே
உன்னை உள்ளக் கண்களில் நிறைத்து
இன்னும் நிம்மதியுறங்குகிறது....
எழுந்து நடமாட முடியாமல் கிடையாய் கிடக்கும் கிழவிகள்

பொன்மனச்செம்மாலாய்
பொன்னின் நிறம் கொண்டு
பொன் கழஞ்சு மனமாய்
பொன் செப்பு பாசம் தாங்கி
பொன்மொழிப் பாடல்களின் வழி
பொன் கொற்ற கொடை கீழ்
பொற்கால வாழ்வு தந்த மன்னாதி மன்னரே

பெருந்தன்மை பேரன்புடன்
எங்கள் இமையணைத்த கடையேழு வள்ளலின்
துணைசேரும் மதுரை மீட்ட சுந்தரபாண்டியரே

நினைக்க நினைக்க மகிழ்வு தென்றலாய் அணைத்து
எழுச்சிதரும் புரட்சித்தலைவரே

நன்றியெனும் ..உதவியெனும்..செயலுக்கு
மூச்சு முகவரியான மூன்றெழுத்தே

கோடான கோடி தாய் தந்தைமார்கள்
கருவேந்திய வெற்றிக்கனியே

சகாப்த வாழ்வு கண்ட சரித்திர கலங்கரையே

மண்னில் மானுடம் நன்றி எனும் உணர்வோடு
வாழும் காலம் வரை நீயும்
வாழ்ந்திருப்பாய் வள்லல் திருமகனே...

பெருமை திமிருடன் ..என் மொழி சமர்பிக்கிறேன்
பேரழகு பெருந்தன்மை செம்மலுக்கு

என்றும் வாழும் புதிய பூமியாய்
பிறர் வாழ் வாழும் தெய்வமனிதர் நீர்


Monday, 12 January 2015

வந்தனம் குருவே...!!

தொன்மை மொழியை..
எளிமை ஓவியமாய்

வண்ணம் தீட்டும்
வானவில்லின் தமிழ் முகவரிக்கு

வந்தனம்.....வந்தனம் குருவே...!!!!

Sunday, 11 January 2015

புரட்சியெனும் நேர்மைத் திமிர்

சுயநலமற்று
கொதிக்கும் ரத்தத்தில்

மெத்தனமாய்
சிம்மாசனமிட்டுள்ளது

வெற்றுச் சலசலப்புகளுக்கு
பணிய மறுக்கும்

புரட்சியெனும்
நேர்மைத் திமிர்

Sunday, 28 December 2014

மருது சகோதரர்கள்

தீர்க்கமான கண்கள்
தினவெடுத்த மார்பு

முரட்டு மீசை
முண்டாசு உருவத்தில்

வீரம் விளையும் நிலமாய்
வாழ்ந்து மண்ணாண்டு
சரித்திரம் வென்று

விழுப்புண் தாங்கி
பகை ஒழித்து
வம்சம் காத்து

காவல் தெய்வமாய்
வேரூன்றியுள்ளார்கள்

பெயர் சொன்னாலே
பேயும் நடுங்கும் தீரம் படைத்த

சங்கத்தமிழ் மதுரையின்
தேசவாள்..மருது சகோதரர்கள்