Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Monday, 17 October 2016

வாழ்த்து


எளிமை மனமாய்

இனிமை குணமாய்
வளமை பிரியமாய்

அன்புத் தங்கை சுந்தரியின் Sundari Manalan
ஆருயிர் நேசமாய்

ஆனந்த மகிழேந்தும்
அன்புத் தம்பிக்கு ValliManalan Kadayanallur
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

அக்கா என அன்புக் கரமிணைத்து
உயிராடியவள்
உரிமையுடன் அறிமுகம் செய்ய
அன்றிலிருந்து இன்று வரை
இயல்புதாங்கிய சிரிப்புடன்
உயர்வெழும்பிய குணங்களுடன்
பிரியமாடும் தாங்கள் 
மண்ணுலகில் என் தங்கைக்கு கிடைத்த வரம்
சந்தித்த நாளில்
தினம் பிரியம் பரிமாறும் நாங்கள்
பற்றிய விரல் விடாமல் பேசிக் கொண்டிருக்க
அதே அன்புடன் உடன்பிறப்பாய்
நீங்களும் கதிரும் பேசி அளவாடியது
என்றும் ஆச்சரியமே

வளர்ந்தும் குழந்தையாக
தன்னை தான் பேணாது
தியாக அன்பிம்சை தரும்
எங்கள் சுந்தரி தங்களுக்கு முதல் மழலையே
அவளுக்கு நீங்கள் வர வாழ்வின்பமே

இன்றணைக்கும் இன்பமும் நிம்மதியும்
என்றுமணைத்து
அன்பு குலச்செல்வன் ஆகாஷ் உடனும்
ஆதர்ச மனைவி சுந்தரியுடனும்
இன்பப் பெருவாழ்வு வாழ

இனிய வாழ்த்துகள் தம்பி

அறி விண்கலமொன்று அவனியிறங்கிய நாள்

அக்னி சிறகு விரித்து 
அறி விண்கலமொன்று
அவனியிறங்கிய நாள் 

எளிமை சுடரே
எழுச்சி வழியே 
தன்னம்பிக்கை நாட்காட்டியே
தன்னலமற்ற தவப்புதல்வனே
அன்பாலும் அரவணைப்பாலும்
உலக உயிர் புதுப்பித்து
புதுவழி காட்டும் நம்பிக்கை ஆசானே

நீ வாழ்ந்த காலத்தில் 
வாழ்ந்தோம் நாங்களென்பது
வாழ்நாள் பெருமை எங்களுக்கு

வாழ்தல் தேடும் உயிர்களுக்கு
இருப்பிட உயர்விடமாய்
நீர்நிலைக் கோளமாய்
என்றும் நீர் 
ஈரம் கோர்த்து 
வியப்பித்திருக்கிறாய்
விண்வெளியுல்...

Saturday, 3 October 2015

பிரியமாடும் கலைமகள்

கலையும் எழிலும்
காதலுடன் போட்டியிட்டு
கிறங்கவைக்கும்
தாய்மொழிவளமையை
தன்னிகர் பெயரென கொண்டு

பிரியமாடும் கலைமகள் 
கவிதாவிற்கு Kavitha Pillai

இனிய வாழ்த்துக்கள்

செம்மொழியை நித்தம் தொட்டு
நிகழ்வுபண்பேந்தி அமுதூட்டும் 
ஆசிரியையான 
தாங்கள்.....

அத்திருமொழிபோல்..அவனிவென்று 
வாழ்க வாழிய பல்லாண்டு பல்லாண்டு

இனிய வாழ்த்துக்கள் தோழி.

Friday, 4 September 2015

பவித்திர வாழ்வு கொஞ்சும்

சொக்கரும் மீனாட்சியும்
சொர்க்க வாழ்வு தந்து
சொந்தமணைத்த பந்தங்களாய்

பாசநிம்மதியோடு
பவித்திர வாழ்வு கொஞ்சும்

பாசமிகு சகோதர தம்பதிகளுக்கு
Natarajan Somasundaram & Sivakamasundari Natarajan
இனிய மணநாள் வாழ்த்துக்கள்

அமையவேண்டும் இஃதென வாழ்வென
ஜென்ம தவம் மேற்கொண்டு
இமையணைத்தோர் பலர் இருக்க

தில்லையம்பலத்தார் திருக்கரம் பற்றி
அவனிவெல்ல ..அழகுநேசமேந்தி
சிவகாமசுந்தரியாய்
இனியவரம் பெற்று
இடமணைத்த உமையே

பெயர் பொருத்தம்
உயிர்ப்பொருத்தமாய் உறவிட

தேன்பிரிய தித்திப்புடன்
தேவதை ஆசீர்வாதங்களுடன்
தேன்நிலா மகிழ்வாடும்
அன்பினிய ஆதூரங்களே
தாய்மொழித் தமிழின்
கவித்துவ அடையாளங்களே

இன்றென பொங்கும் இன்பம்
இதய இமைநிறைய
வாரிசு பிரியங்களுடன்

வாழ்க நீவீர் வசந்தபல்லாண்டு
வானவில் சந்தோஷமணைத்து

ஆயிரம்பிறைகண்ட அற்புதப் பெருவாழ்வு

இனிய வாழ்த்துக்கள் சகோ

Monday, 31 August 2015

திருவோண திருநாள் வாழ்த்துக்கள்



தேக்கும் பாக்கும்
தென்னை மரப் பிரியங்களுடன்
கூடிக் களித்து
கும்மாளக் குருத்திட

எழில் கொஞ்சும்
இயற்கைவதன அழகு
நிலநீர் ..நீள் வசந்தமாய்

சேட்டன் சேச்சிகளின்
செந்நிற மேனியோடு
வனப்பு சிலிர்த்து தளிராட

அழகோடு அறிவிலும் முதன்மை சிறந்து
குளுமைகண்டாடும் கேரள மக்களிடை

நடைபெறும் நலம்பெற்ற
கம்யூனிச நல்லாட்சி

கண்டு களித்து ..
தன் தலை வாமனனுக்கு ஓரடியாய்
கொடுத்து பாதாளம் சென்ற
பஞ்சதீர்த்த மன்னனாம் மகாபலி
வரவேற்று

வாசலெங்கும் பூக்கள் கோலமிட்டு

வரவேற்பு பிரியங்கள்யேந்தி
கைகொட்டுக் களியாடி

அழகுடுத்தி
யாணைத்திருவிழா காணும்

அன்புநிறை அண்டைமாநில
சோதர சோதரிகளுக்கு

இனிய திருவோண திருநாள் வாழ்த்துக்கள்

Saturday, 29 August 2015

தமையன் எனும் பேரன்பாகும்



தாயென்று தந்தையென்று
தமையன் எனும் பேரன்பாகும்... இரா. குமார்

தன்னிகரில்லா பெருமைநிமிர் திமிரே

தரணிவெல்ல தனிஅவதாரம் எடுத்த
தாமிரச் சுடரொளியே

தாழம்பூ பிரியங்கள் கொஞ்ச

கனிமனக் கனிவும்
குழைமன குவிவும் கொண்டு
கண்காணும் உயிரணைத்தும்
குறையில்லா நிமிர்வே என

வேற்று மனங்களிலும்
வேற்றுமை காணாது

புகழ்தோள்சேர..புன்னகை செய்து
பதவி நாற்காலியிட பணிவு காட்டி

செய் உதவியை ...
இடக்கையறியாமல்
வலக்கை கொடுத்து

நன்றியெனச்சொல்லி...நன்கை மறப்போர்
மறுமுறை அணுக.....மாற்றுமுகம் காட்டாது
மனதார கரம் நீட்டி

கேட்டோர்க்கு இல்லையெனாமல்
கேட்கும் முன் தேவைபுரிந்து
உதவிடும் உன்மனக் கணிப்பில்

வள்ளல் கர்ணனும் ....வாகையாய் தோற்கிறான்
உம்மைத்தோளணைத்து

நட்புக்கு இரங்கும் நடப்பு நீர்
பணங்களைவிட..மனங்களை சம்பாதிப்பதிலேயே
ஆயுள்நிம்மதி தேடும் ஆழ்நிறை அண்ணலே

சிரிக்கும் முகங்கண்டு சிந்தையெழும்
சீர்வளமை மொழியே

தாய்மொழிப் பெருமையின்
மீசைதிமிர் அடையாளமே

குமார் எனும் வளர்நிறைப் பெயரை
வர்த்தகக்குறியீடாய் மாற்றி இன்று

சிகரமெழுந்து நிற்கும்....சூழ்புகழ் சுயம்புவே

கடை மகளாய் பிறந்து
கவின் செல்லம் கொஞ்சி
உடன்பிறந்தோன் ....சிறகில்...அடைகாத்து
உயிரென வளர்ந்த என்னை

வளர்பருவம் ...வந்தணைத்த இடைவெளியில்
எதுவென்று எவரென்று அறிமுகமில்லா
அடையாளத்தில்...நானும் இங்கே..

இன்னொரு அண்ணனே என்றெனக்காகி
தாய்மொழியை தொப்புள் கொடியாக்கி
விரல்தந்து சிறுமொழி யை .....
வழிநடத்தும் ஆசானே

என்னின் ப்ரியத்திமிர் பிரமாண்டமே

என் வருத்தம் தனதாக்கி..என் விழி கலங்கும் முன்
மனம்கலங்கி மறுதீர்வு தந்து
மாற்றுவழிகாட்டி...
விரல்வழி......
வழிநடத்தும் வேந்தே வேள்வியே

எப்படி நான் உம்மை விட்டுக் கொடுப்பேன்
எவர் முன்னும்...ஆதலாலே
உறுதிமொழிகிறேன்

உம்மை மதிக்காதவர்,,,,உமக்கு தோழமையெனினும்
எனக்கு எதிரியே

நீர் மன்னித்தாலும்...நான் கனலே வீசுவேன்

சில பாசங்களும் ..பவித்திரங்களும்
இன்னதென்று உறவறியாதவை
யோசிப்பு சிக்காதவை.....

அரைநாள்குரல் கேட்கவில்லையெனினும்
ஆயுள் ஆண்டு ஒன்று குறைந்ததோ எனும் துடிக்கும்
நம்மின் ...இப்பிரியத்திற்க்கு...இன்னதென்று
உரைஎழுத......

சொல்லும்..எழுத்தும்

இனிதான் அவனிஎழும்ப வேண்டும்..மொழியாய்

விடையில்லா பாசத்தை விழியணைக்கும்
தமக்கை சொந்தமாய்....

தஞ்சையாண்ட..ராஜ ராஜன்..குந்தவை
ராஜ பிரியமாய் ...

நினைவு செதுக்கி
நிம்மதியாடுகிறேன் எப்போதும்

அகில்நிறைஒளியே
ஆதவ வழி சுடரே

எழுத எழுத எழுத்துக்கள்தளும்பி வழியும்
தனித்துவ தாய்மொழியே

வாழ்த்த வயதின்றி வணங்கி நிமிர்கிரேன்

என்பெருமைநிமிர் திமிரை

ஆயுள்கோடி கொடுத்து...அன்னை உம் பக்கம் நிற்க
ஆனந்தவிழி கசிய ....

அன்புக்கவிபுனைந்து....உயிரேந்துகிறேன்
அண்ணன் உம்மைப் புகழ்போற்றி போற்றியென

ஆசீர்வதியுங்கள்..
இனிய வணக்கங்கள் ஆசானே

Sunday, 23 August 2015

சீர்பெருமை மேன்மகனாரே

நட்பின் இனிமையாய்
நல்மனப் பிரியங்கள்யேந்தி

நல்வாக்குசொல்லும்
செல்வாக்கு பெற்ற..... Bala Chander

இனிய தோழமைக்கு....
ஆனந்த அவனி உதி திருநாள் வாழ்த்துக்கள்

அன்னைமொழி நேசிக்கும்
அனைவரையும் ...தன் தாய்ப்பால் பகிர்
உடன்பிறப்பென்று ..உடன் அணைத்து
வாழ்த்தும் மனம் யாருக்கும்
வாய்த்ததில்லை ...தங்களைப் போல்

இளமை குன்றா என் தமிழ்
இந்தவிசயத்தில் தங்களை
என்றும் பதினாறாய் வைத்திருக்கிறாள்
எனும் பொறாமை ..எப்போதும்..என்னுள் ஓர் ஓரத்தில்

அன்பும் அதிகாரமும் ..
வளமும் வளமையும்
நலமும் நன்மையும்
பணிவும் பாந்தமும்
கனிவும் கருணையும்

ஒருசேர ஒருங்கிணைத்து மொழி துள்ளி
சட்டம் படித்து சாட்டையடி எடுத்து
அரசாளும் மாட்சியையும் ..குடியாட்சி கேள்விகேட்டு
கூண்டில் ஏத்தி குத்திக் கிழிக்கும்
கூர்முனை பேனா ஆயுதம் ஏந்தி

ஆயுத்த வேள்வி செய்யும் துணிச்சலும்

சடசட..படபடவென ....எண்ணியகாரியத்தை
திண்ணியவேகத்தில் முடித்தாளும் திறமையும்

அருளென ..ஒளியென....அவனிநிறைந்த இறையை
பொருளென ..வாழ்வென போற்றி உருகும் தவமும்

குறும்பும் கனிவும் குதித்தோடும் பிள்ளையாய்
குசும்பும் ....குதுகலமும் விளையாடும் பக்குவமாய்

யாரிவர் என்றே யாரறிய சிந்திக்க
நானென்பது இதுதான் என....

செழுமைநிறை..செம்பருத்தி முகம் காட்டி நீவீர் சிரிக்க

அப்பப்பா..பிரமிக்க...ஏராள ஆச்சரிய வளமைகள் நிறை

சிகரப் பொன்னொளி விளக்கே
சீர்பெருமை மேன்மகனாரே
சங்கத்தமிழின் சரித்திர அடையாளமே

தங்கள் அருமைபெருமை திருநாளில்
கவிமலர் கொடுத்து ..கரம் கூப்பி
வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்

ஆசீர்வாதப் பிரியங்கள் வழங்கும் ஆழ்தவ அன்னை
ஒளியருளாய்...ஓங்கிவளர்புகழாய்
என்றும் நிலைத்த தமிழாய்

வாழ்க கல்வெட்டு பெருவாழ்வு ...

இனிய வாழ்த்துக்கள் சார்

நலப்’பூ’...நட்’பூ’...நண்’பூ’

பூப்பூவாய் பூத்த பூ
பூவிலே சிறந்த பூ

புத்துணர்வு தரும் பூ
புதுமுகபொலிவு பூ

பூ மண..பூமனப் பூ
தன்னலமில்லாப் பூ

தாளாது
தவிக்கும் போது
தாவியணைக்கும் பூ

தான் சிரிக்க பார்த்து
தன்னை வருத்தும் பூ

வாடாத பூ வசந்த பூ

சோகமில்லாத பூ
சோதனையிலும்
துணை நிற்க்கும் பூ

பிரிந்தபோதும்
பிரிவில்லாத சொந்தமாய்
நினைவு சேமிக்கும் பூ

தாலாட்டும் பூ
தட்டிக்கொடுத்து தந்தையான பூ
உடன் தோள்கொடுக்கும்
உதிரம் பகிராத பூ

நம்பிக்கை தரும் பூ
தைரியம் வரும் பூ

கண்ணீர் துடைக்கும் பூ
காவல் நிற்கும் பூ
கரமிணைக்கும் பூ

மகிழ்வுப் பூ
மனதினிய பூ

ஐந்திணை ஆவாரம்பூ
ஆறாம்திணை உறவுப்பூ

உயிர் விழிக்கும் விழியெங்கும்
விடியலாய் மலரும் பூ

இடுகாடுவரை வரும்
இணையில்லா உணர்வுப் பூ

என்றும் இளமையாய் மனம் துள்ள
இளந்தோள் சிந்தை தரும் பூ

சிரிக்க ..ரசித்து
சிந்திக்க துணையாகி
வருந்த கரமிணைத்து
வாட ..தைரியமாகி
தோல்வியில் தோளணைக்கும்

உண்மைப் பூ..நேர்மைபூ
நட்பூ எனும்

தொப்புள்கொடியில்லா
தாய் மனப் பூ வை

தாய்வீட்டுக் கூடாகிய
முகமறியாத முகநூலில்

தோழமைப்பூவாய்...தொடுத்து

கரமிணைத்து...கற் பூ எனப் போற்றுவோம்
கனிநிறைபிரிய தோழமைகளே

இன்றென ஒருநாள் என்றில்லாமல்
இமைவிழிக்கும் நாளெல்லாம்

இனிய வாழ்த்துக்கள்...நண் பூக்களே !!!!!!!!!
 — 

Friday, 21 August 2015

நண்பனெனும் நலம் நிறை பிரியங்கள்


நண்பனெனும் நலம் நிறை
பிரியங்கள் தாங்கி
அறி முகமாகி

சகோதரி என்றே பாசமழைக்கும்.......Balamurugan Trichy Bala

திருச்சியின் பாசமிகு
அடையாளத்திற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பையும் பிரியத்தையும்
கண்ணியமாய் கனிவாடி

அனைவரிடமும் ஆனந்த நலமாடி
அவர்தம் வள நாட்களை...
வாழ்த்து மலர்தூவி ப்ரியமாய்
பிச்சிப் பூ மணமாய்..மனம் நிறைதூவி
மகிழ்வு சொந்தமணைக்கும் தாங்கள்

என்றும் பிறர் வாழ...பிள்ளைநேசமாடும்
தங்கள் முகக் கனிவாய்..மனம் போல்

பேராணந்த பெருவாழ்வு வாழ

நான்நேசிக்கும் செம்மொழியில்
செழுமை நிறை கவிப்பூ தொடுத்து கொடுத்து
வாழ்த்தி மகிழ்கிறேன்...சகோ

வாழ்க வாழ்க வாழ்க
வாழும் தமிழ்மொழியாய்...
சிகரமெழுந்து சிங்காரவெற்றி புகழோடு

இனிய வாழ்த்துக்கள் சகோ... smile emoticon smile emoticon

Sunday, 2 August 2015

இனிய முத்த வாழ்த்துக்கள் தங்கமயிலே

ஆதிரை அழகாய்
ஆயுள் தவ வரமாய்

அன்பரசி மொழியாய்
அக்காளின் பேத்தியாய்

அவனி வந்த
அழகு இறை
வண்ண தங்கமயிலுக்கு...ஹன்சிதா..க்கு
வயது நான்கு

வாழ்த்தலாம் வாருங்கள்
நட்பினிமைகளே

தெய்வத்தின் மேன்மைபடைப்பாய்
தேவதை பிரியங்கள் கொஞ்சி
முப்பெரும் தேவிகளும்
முழுநிறை உருவம் ஒன்றாகி

அகம் மகிழும் தமிழாய்
ஜெகம் போற்ற
அறிவுக் களை..அழகு குவளையேந்தி

எங்கள் மகள் Indhumathy Chilamparasan வயிறு உதித்த
அதிர்ஷ்டப் பெரும் திருவே

கொஞ்சல் மொழிக் கனிவே

உற்றுநோக்கும் எதையும்
உடன் செய்யும் தீரமும்

சொல்லும் மொழியை....
மெல்ல கேட்டு...உடன் பதிந்து
இடம் பொருளென இப்போதே
பயன்படுத்தும் அறிவும்

ஆகாசபிரியங்கள் கொஞ்சி
கழுத்து கட்டி உறவாடி
இரும்பையும் இளகவைக்கும்
செல்லச் சிணுங்கல்களும்

அமைதியாய்..ஆளுமையாய்
பிள்ளையென்ற அச்சலாத்தி படுத்தாமல்
பெரும் குமரிப் பக்குவமாய்

இப்போதே இனிமைபிரியமாடும்
உன்னுடன் இருக்கும் நிமிடங்கள்

கேட்குதடி செல்லமே
இன்னும் இன்னும் ஆயுள்கொடு
இமை தட்டா வரம் கொடு இறையே
என் திருமகள் அறிவை அணைத்துக் கொண்டே
நான் முக்தியடைய என்றே ....உருகி

வரம்தர வந்துதிக்கும் கடவுளாய்
எங்கள் வம்சம் கொழிக்க வந்த
வாரிசு பிரியமே

புண்ணியதவம் செய்திருக்கின்றனர்
உன்னை பூமகளாய் தன்னில்
கருவென நிறை தாங்க உன் பெற்றோர்

எழில்கொஞ்சும் வதனமே
ஏகாந்தம் நிறை இயற்கையே
நான் கொஞ்சிய மகளின்
மடி உதித்த மரகதமே
என் பிரிய தங்கமயிலே

என் மூத்த உடன்பிறப்பாய்
தாயெனும் தமக்கையான
வேணி அக்காவின்
அன்புபேத்தி அம்முவே

என்றும்..என்றென்றும் நீ

அன்னை கொஞ்சும் ஆருயிர் பிரியமாய்
அவனி வெல்லும் வாழ்வு வாழ்ந்து

தோள்நிறைமாலைகள் தாங்கி
சந்தனவாசமுடன்..சரக்கொன்றை மணமுடன்
சந்தோஷபெருவாழ்வு வாழ

நான் வணங்கும் அன்னை வணங்கி
என் ஆயுள் சமர்பித்து..உன் ஆயுளுடன் இணைத்து
இன்னும் கோடி ஆண்டுகள் நீ வாழ

பிரியமலர்தூவி வாழ்த்துகிறேன் செல்லமே

வாழ்க வாழியடி...எங்கள்
வாழையடி..வாழையே

இனிய முத்த வாழ்த்துக்கள் தங்கமயிலே

Saturday, 1 August 2015

நலப்’பூ’...நட்’பூ’...நண்’பூ’




நலப்’பூ’...நட்’பூ’...நண்’பூ’
**********************************

பூப்பூவாய் பூத்த பூ
பூவிலே சிறந்த பூ

புத்துணர்வு தரும் பூ
புதுமுகபொலிவு பூ

பூ மண..பூமனப் பூ
தன்னலமில்லாப் பூ

தாளாது
தவிக்கும் போது
தாவியணைக்கும் பூ

தான் சிரிக்க பார்த்து
தன்னை வருத்தும் பூ

வாடாத பூ வசந்த பூ

சோகமில்லாத பூ
சோதனையிலும்
துணை நிற்க்கும் பூ

பிரிந்தபோதும்
பிரிவில்லாத சொந்தமாய்
நினைவு சேமிக்கும் பூ

தாலாட்டும் பூ
தட்டிக்கொடுத்து தந்தையான பூ
உடன் தோள்கொடுக்கும்
உதிரம் பகிராத பூ

நம்பிக்கை தரும் பூ
தைரியம் வரும் பூ

கண்ணீர் துடைக்கும் பூ
காவல் நிற்கும் பூ
கரமிணைக்கும் பூ

மகிழ்வுப் பூ
மனதினிய பூ

ஐந்திணை ஆவாரம்பூ
ஆறாம்திணை உறவுப்பூ

உயிர் விழிக்கும் விழியெங்கும்
விடியலாய் மலரும் பூ

இடுகாடுவரை வரும்
இணையில்லா உணர்வுப் பூ

என்றும் இளமையாய் மனம் துள்ள
இளந்தோள் சிந்தை தரும் பூ

சிரிக்க ..ரசித்து
சிந்திக்க துணையாகி
வருந்த கரமிணைத்து
வாட ..தைரியமாகி
தோல்வியில் தோளணைக்கும்

உண்மைப் பூ..நேர்மைபூ
நட்பூ எனும்

தொப்புள்கொடியில்லா
தாய் மனப் பூ வை

தாய்வீட்டுக் கூடாகிய
முகமறியாத முகநூலில்

தோழமைப்பூவாய்...தொடுத்து

கரமிணைத்து...கற் பூ எனப் போற்றுவோம்
கனிநிறைபிரிய தோழமைகளே

இன்றென ஒருநாள் என்றில்லாமல்
இமைவிழிக்கும் நாளெல்லாம்

இனிய வாழ்த்துக்கள்...நண் பூக்களே !!!!!!!!!

Thursday, 30 July 2015

திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி...(தி.மு.க)


திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி...(தி.மு.க)

தங்கத்தமிழ் எடுத்து தன்னைச் செதுக்கிய
முத்துவேலர் தமிழுக்கு..இன்று அகவை 91

அஞ்சுகத்தமிழ் பெற்ற.....அரும் பெரும்
செம்மொழிக்கு..இன்று அகவை 91

தூக்குமேடை நாடகத்தமிழ் மூலம்
கலைஞர் பட்டம் பெற்ற..கலைமகனுக்கு..அகவை 91

கண்ணம்மா தொட்டு...மந்திரிகுமாரி பிடித்து
பூம்புகார் வழியில்,,இளைஞராய் வெற்றிநடைபோடும்

கதைவசனத் தமிழுக்கு..இன்று அகவை 91

சங்கத்தமிழ் எழுதிய தெண்பாண்டி சிங்கத்திற்கு
உரைதொட்டு..குறளோவியம் எழுதிய பொன்னர் சங்கர்க்கு
இன்று அகவை 91

ஐந்துமுறை முதலமைச்சராய்..பன்னிருமுறை
சட்டமன்ற உறுப்பினராய் இருந்த கழகத் தமிழுக்கு.....
இன்று அகவை 91

வளரிலம் பருவத்தில் கவிதை கதை என வாகை சூடி

தாய்மொழி தெலுகு எனும் போது
தமிழ் மொழி பிறந்து...தமிழ்தேனை..தாய்பாலென
அள்ளிப் பருகி ருசித்த முதும்பெரும் தலைவனே

எம் ஏ பி எப் (March Attempt But Fail)..(MABF)படித்த,.,,பெரும் தமிழ்செல்வனே

நீதிக்கட்சி எழுப்பியதோ,,நின் சீர் நடை அரசியல் பயணத்தை
தமிழ் எனும் வேல் உனக்கு உதவியதோ..இடைவரும்
இடர்வரும் களைகளை களைய......

எழுத்தில் எழுந்தாடும் புரட்சியை
பேச்சில் குதித்தாடும் உன்வீச்சு வேகத்தை கண்டு
ஆளுமை செய்ய வந்த ...அந்நிய மொழியாம்
இந்தியும் சென்று பதுங்கியதோ...அடுக்களையில்

தமிழ் என் மானம் என்று தாய்மானம் காத்த தமிழனே

தமிழெனும் மொழி வளைத்து
கவிநடையில்..சொல்லோவியத்தில்..இரட்டைகிளவி தெறிக்க நீ இன்றும் களமாடும்..மொழிநடையில்

உமக்கு
முன்னும் ஒருவரும் பிறந்ததில்லை
இன்னும் ஒருவரும் பிறந்ததில்லை
பின்னும் ஒருவரும் பிறக்கப் போவதுமில்லை...தலைவா

வாழும் தமிழனுக்கும்.....வரப்போகும் தமிழனுக்கும்
நீயே வள்ளுவன்....

உன் அகராதி புரட்டாது...எங்கும் புள்ளி வைக்காது
இன்றைய புதுதமிழ் மழை

அண்ணா எனும் உம் அருமை தலைவனுக்கு
நீ வடித்த..நெஞ்சுருகும் கவிதாஞ்சலியில்

நீர் வாசித்த குரலாஞ்சலியில்...
ஒலிப்பெருக்கியின் மூலம் கேட்டு

கலங்காத வைடூரிய நெஞ்சமும் சட்டென கலங்கியது

’’’’கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்.. இன்று
மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை,

கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்? ’’’

என்றாய்..குரல் உடைந்து..நீர்

தமிழகமே..ஓங்கிக் குரலெடுத்து...
தன் தாய் பிரிவைப் போல உணர்ந்து கதறியது

’’’நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா.. ;’’ என்றாய்

தந்தார் ,,,சென்றார்...தன் இதயம் கோர்த்து இன்றும் காத்து
பேர் பெற்று ..சீர் பெற்று..பட்டொளி வீசுகிறாய்..தமிழே

நீர் தமிழின் ...தேசிய அடையாளம்

உறக்கம் கண்டதில்லை..உம் தமிழ்
சோர்வு கண்டதில்லை..உம் பேனா
சுகம் கண்டதில்லை..உம் இளமை

போராட்டங்களே வாழ்வென எடுக்கும்
சரித்திர துணிச்சல் ..உம் அகவை

எழுமின் விழுமின் இலக்கை அடையும் வரை
ஓயாது உழைமின்...என்பதே உம் வாழ்க்கை...கோட்பாடு

நீர் சந்திக்காத வெற்றியுமில்லை....
உன்னை தோள்தொடாத தோல்வியுமில்லை

எதுவந்த போதிலும்..உம் தமிழ்
இளமை கொஞ்சும் நகைச்சுவை குசும்புகளுடன்

தளராது நடைபோட..தயங்கியதுமில்லை

யாயும் ஞாயும் யாரோ கியரோ? எனும் குறுந்தொகைப் பாடலுக்கு..விளக்க உரைதருவாய்....

கூடல் விழா தொடங்குவதற்கு,
ஊடல்தான் கொடியேற்றி வைக்க வேண்டும்..என்று

மொழிமகளும் நாணி வெட்க ஆடை போர்த்துவாள்
நின் எழுத்தாணி கற்பனையில்..களவு மயங்கி

காதல் அழைக்கிறது,,,கடமை தடுக்கிறது...எனும்
உன் நாவல் 1972 ல்...ராணிமுத்துவில் வெளிவர.......

காதல்சுவையெடுத்த உம் மொழியை ரசித்து ருசித்து
இளமைப்பருவ வாசிப்பில் இன்னும் அதை பொக்கிஷமாய்
பாதுகாக்கும் உள்ளங்கள் ..பல

சாதி மத இனம் கடந்து வாழும் தமிழக சரித்திரமே

கழக வேறுபாடு இல்லாமல்...அனைவரும் ரசிக்கும்
அரும் பெரும் தலைமையே

தமிழ் எனும் சொட்டுத் தேன் ருசி பருக
உன்னை உள்வாங்கி உள்வாங்கி.....ரசிக்கும்..
கோடான கோடி தமிழ்மகன்களின்.....நிகழ்வுத் தேனடையே

பற்றும் பாசமும் .அன்பும் ஆளுமையும்
நிறைந்த.......நேசத் தலைவனே

லட்சக்கணக்கான தொண்டர்களில்...முதலாய்
தானாய் வந்து முன் நிற்க்கும் கழக விசுவாசியே

தமிழையும் தாய்கழகத்தையும்...
தன் உயிரினும் மேலாய்நேசிக்கும் ....உன்னத தலைமகனே

சொல்லம்புகள் பல தாங்கிய போதும்..சோர்வேனா..என
வெற்றி சிறகு விரிக்கும்,.....மணிமகுட மாடப்புறாவே

முக்கடல் சந்திக்கும் ...குமரிக்கடல் நடுவே சென்று
தம் குறள் புலவனுக்கு..சிலை செதுக்கிய ....சீரிளம் தமிழே

சிலேடை மொழியெடுக்கும் இளமை வித்தகமே

நீர் வாழும் காலத்தில்...என் தாய்மடியாம்
தமிழ் மடியில் நான் கருத்தரித்தது..என் பெருமை

நின் வளமையை..எளிமையை...முதன்மையை
மொழிமையை...உள்வாங்கி உயிர் கசிந்து ரசிப்பது...
என் தவப்பயன்

நின்னை எழுத நான் என் பிள்ளைதமிழ் எடுத்தது
என் பிறவி செய்த..புண்ணிய கடமை

தொன்மைத் தமிழின் தெளிவான முகவரி....
எண்..8...கோபாலபுரம் 4வது தெரு....

வரும்தலைமுறைகளுக்கெல்லாம்
வாழும் தலைமுறையாம் தமிழ்மகளின்..கழக கோமகனை

வாழ்த்த வயதில்லை...வணங்கவும் துணிவில்லை
தள்ளி நின்று தனிப்பெரும் சுவாசம் எடுத்து

பெருமூச்சு மறந்து பெருமை பொங்க ரசிக்கிறேன்

தலைவா,,,என்றும் நின் தமிழுக்கு..
நான் அர்ப்பணம்...சமர்ப்பணம்.............கோவே

Saturday, 25 July 2015

இனிய வாழ்த்துக்கள் தம்பி

ஊன் உருக உயிர் உருக
உயிரென உயிர் மெய் உருக

உறவென வந்து
அக்கா என்றழைத்த போதும்
அம்மா என்றே குரலொலி உணர்வு தந்த
அன்புத் தம்பிக்கு

என்னின் முதல் குழந்தைக்கு Sedhu Raj
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எதிர்பாராமல் இமையணைக்கும்
உதிர சொந்தமாய்....
எந்தப் பிறவியிலோ...
நீ என்னில் பிறந்தாயா..நான் உன்னில் வளர்ந்தேனா

இந்தப் பிறப்பில் நாம் சந்திக்க

மொழிதொட்ட கருத்து கவனமிழுக்க
நண்பனென வந்து...அக்கா என்று
உரிமையழைத்தாய்...

முகம் பார்க்கமலே முன்அன்பை நிறுத்தி
பாசத்தின் ஈரத்தை பிரியங்களில்
காட்டி நெகிழ வைத்தாய்...

என்றும் எனக்கு பெரும் நம்பிக்கையாய்
இருக்கும் பாசம் நீ
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
என்பதும் உனக்கே பொருந்தும்

விழிகலங்கும் முன் வேறு மொழிபேசி
சிரிக்க வைத்து விடுவாய்

சொந்தம் நீ என் மூத்தவள்
என்று உன்னோடு மட்டுமில்லாமல்
உனக்கென உடன்சூழ்ந்த அனைவரிடமும்
அன்பென பகிர்ந்து .சொல்ல வைத்தாய்

பக்குவத்தில் பந்தமாடும் பிரியத்தில்
பார் போற்றும் பாசத்தில்
இமையென காக்கும் கனிவில்
இனிமையான சொந்தமே

விளையாட்டாய் நான் உரிமை கேட்க
உடன்பிறந்தவள் கையினாலே
தாரைவார்த்து வழங்க வைத்தாய்

மாமா மாமா என்று நீ அழைக்கும் போதும்
மாப்ள என்று கதிர் பதில் சொல்லும் போதும்
பெருமிதமாய் விழிகள் குளம் கட்டும்

என் தளபதி என்றே ..என்றும் உன்னை
உரிமையாய் சொல்வார் கதிர்

எத்தனை ஜென்ம ஆயுள் தவம்
உன் பாசம்....

உரிமையாய் கொண்டாடி
தாய்வீட்டு சீராடி..கிளம்பும் போது
அத்தனையும் கூடை நிறைத்து
எங்க அக்காவுக்கு செய்ய நாங்க
கொடுத்து வைச்சிருக்கனும் நு
சொன்ன சொல் இருக்கே

இன்றும் என்னை ஆனந்தமாய்
நினைத்து நினைத்து
அழவைக்கும் சொல் அது

பிள்ளையென என்னில் பிரியமாடி
கருநிறைந்த உறவே
கனிவு நிறை தம்பியே

அன்னை மனமொழியெடுத்து
அருந்தவ வார்த்தைமலர் தொடுத்து
அன்பெனும் மிகுதிவிகுதியால்
ஆயுள்தரும் சொந்தம் உன்னை

ஆசீர்வாதபிரியம் கொஞ்சி
நான் வணங்கும் அன்னைவணங்கி
வாழ்த்துகிறேன் டா

இன்றென மட்டுமில்லாது
நான் நிலமிருக்கும் வரை
என்றும் உம்மை வாழ்த்திக் கொண்டிருக்கும்
என் செல் அணுக்கள்

எங்கள் பரம்பரையின்
பெருமைமிகு வாரிசே...வாழவேண்டுமய்யா

நீ என்றும் என்றென்றும்..
இவ்வானந்த மகிழ்வாய்

இனிய வாழ்த்துக்கள் தம்பி

Thursday, 9 July 2015

அகல்முக தோழிக்கு


அன்பினிமை பிரியங்களை
அமைதி ஆளுமையாய் கொண்டு

அனைவரிடமும் இங்கு
ஆனந்த பிரியமாடும்

அன்னை பிரியமான....
அகல்முக தோழிக்கு... Prema Venkatesh

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தாய்மொழி ரசிக்க
எம் மொழி உமை இழுக்க...

அலுவல் ..அசதியென
ஓடி நான் ஒளிந்தாலும் தேடி என்னை
பிரியமாடி பிடித்திழுக்கும் இன்ப பந்தம் நீர்

ஆச்சரியப்படவைக்கும்
உனதினிமை அன்பாடல்கள்

திடீரென உள்வந்து திகட்டா
அன்னைபடமிடுவாய்
இல்லை...
தித்திக்கும் குழந்தை முகம்காட்டி
அழைப்பாய்

பிரியமானவளே...பிரியங்கள்
அனைத்தும் பொறாமைப்படும்
பிரேமமானவளே

வாழவேண்டும் நீ
வாழ்வினிமை ஆண்டுகள் பல
பொறுமைகொஞ்சும் ...உன் மனக் கனிவாய்

வாழ்த்துகிறேனடி தோழி
உனக்கோர் மொழி எழுதி

தோழியென உன்னைத் தோற்ற உருமகிழ்வாய்
நானும் கண்டு

அன்னை ஆசீர்வாதங்களுடன்....
நிம்மதிபெருவாழ்வணைத்து
நீள் அவணி வாழ் வாழ

கவிமொழிப்பூங்கொத்து கொடுத்து
வாழ்த்துகிறேன் ..

வாழ்க ..வாழியடி தோழி நீ பல்லாண்டு

இனிய வாழ்த்துக்கள் பிரேமா

Wednesday, 1 July 2015

புதுமை ..புகைப்பட பதுமையே


நிழற்பட நிகழ்வு தினம்... 29.06.15

உள் ஒளியும் உயிரொளியை
நகலெடுத்து நம்மின்
முகமென
உருவென உயிர்தந்து

ரசனைப்படுத்திய
அறிமுக அடையாள நாள்

உலகாளும் ஆதவனே
முதல் நிழல் பிம்ப அடையாளி எனினும்

இயற்கையை விஞ்சவே
விளைகிறது ...மனித சிறு மூளை

தன்னை எடுத்தவன்
நிழல்களை எடுக்க

இன்று நிகழ்வு சொல்லும்
ஒரு மாற்ற முடியாத
மனித அங்கமாகிவிட்டது
நிழற்படம்

ஒளியாலும் ஒலி தர முடியும்
என்றே இங்கே
வித்தகர்கள் பலர் பரவி வியப்பிகின்றனர்

விலங்கின பரிணாம மனிதனின்
பாராளும் வித்தைகளில்
படப்பிடிப்பின் பாங்காய்

திரைப்பட முன்னோடியாய்

செய்திதுறை துப்பறிவாளனாய்

குடும்ப அங்க கால அடையாளமாய்

தன்பிம்பம் ரசிக்கும் தன்னழகு கண்ணாடியாய்

புகைவழி நிழலாகி
புகைப்படம் என பெயரெடுத்த
பெருநிலக் கிழத்தியே

ஊன்பசைமுறை உள்ளொளி தத்துவமே

பதினேழாம் நூற்றாண்டின்
பெருமைமிகு பிறப்பே

அறிவு இயலையும்
அறிவியலையும்...அச்சாணி கொண்டு
ஆட்டிப்படைக்கும்

ரசனை..... ரசாயண
அற்புதக் கண்ணடிப்பு கண்டுபிடிப்பே

என்னின் ...கவிமொழி கண்ணே

எந்தருமை நிழற்படமே...

உன்னில் அனைவரும்
அழகாய் உணர்வு ரசிக்க

நான் மொழியாய் துள்ளி எழுகிறேன் நித்தமும்

என் கவி வழிப்பாதையில்
நீயும் என் உயிர் சிநேகிதியே ....

புதுமை ..புகைப்பட பதுமையே

Tuesday, 30 June 2015

இனிய வாழ்த்துக்கள் ..இளம்குருத்துகளே

நேச விதைநெல்லெடுத்து
நெகிழ்ந்த பிரியங்கள் கோர்த்து

நெஞ்சுநிறை அன்பேந்தி
அன்றில்பறவை விருப்பங்களுடன்

காதல் மனமணைத்து

ஆனந்த மணநாள் கண்டு
மகிழ்வுறும் ...அன்பிற்கினிய மணமக்களே

அன்புத்தோழியர் Poomalai Haldoraiஅவர்தம்
இளைய மகன்&மருமகளே

அழகும் அழகும் ஆலிலையில் பிரியமேந்தி
ஆண்டவன் இட்ட உயிர்முடிச்சாய்
அமிர்தவாழ்வு காணும்..நீங்கள்

வாழ்வெனும் வசந்தவான் பிரியத்தில்
வண்ணமிகு வானவில்லாய்...ஒருவருக்கொருவர்
வளைநாண் வளைந்து

விட்டுக் கொடுத்தலில் வீடுபேறு கண்டு
எண்ணம் செயல்சிந்தைகளில்
ஒத்த கருத்தினிமையாய் கைகோர்த்து

மங்கல செழுமைகளை மகிழம்பூ மணமாய்
வரும் வாழ்வுதடமெங்கும் தளிர்பூ பரப்பி

பதினாறுவகை பேறுடன்.....
வாழையடி வம்சக் குருத்துக்கள் கண்டு

வானத்து தெய்வங்கள் போட்டிபோட்டு ஆசீர்வதிக்க
தேவாதி தேவர்கள் பன்னீர் மழைத்தூவ
தேவதைக் கொஞ்சலுடன் ..தித்திக்கும் மனமேந்தி
தெவிட்டாத வசந்தவாழ்வு வாழ

நான் வணங்கும் அன்னை வணங்கி

அல்லிமலர்செண்டெடுத்து..
அறுவகை நறுமண மலர் நிறைத்து
ஆனந்த மனம் கொண்டு

கவிநிறை மொழி தொடுத்து வாழ்த்துகிறேன்

வாழ்க வாழிய மணமக்கள் வாழிய வாழிய

ஆயிரம் பிறைகண்ட ..அற்புத பெருவாழ்வு

இனிய வாழ்த்துக்கள் ..இளம்குருத்துகளே
 — with Poomalai Haldorai.

கலை மிகு குறள்கவியமுதம்

அற்புதம் அற்புதம்
அகர அற்புதத்தில் ஒரு
அமுத சொற்பதம்........

திருக்குறள் தழுவிய

கலை மிகு குறள்கவியமுதம்

வந்த துயர் விலக்கி
வாட்டிய துயர் தவிர்த்து
வசந்த முத்து மொழி தொடுத்து
வாசனை மாலையாய்
அய்யன் வள்ளுவனுகோர்
அடர்செறிவு சொல்கவி சிகரம் அமைத்து

எதுவும் தனதில்லை
எல்லாம் இறைக்கே
என்னுயிர் அய்யனுக்கே
என்னுயர்வும் அய்யனுக்கே

என்றேறி ...இன்று இளைப்பாறும்
அன்னையே .........அன்னைமொழியே

என்னே சொல்லி நின்னை நான் வணங்க....

திரும்பிப் பார்க்கிறேன்
தித்திக்க திகட்டாமல்
தாங்கள் செழுமை செய்தேறிய
சிகரப் பாதையை

முப்பத்தின் மூன்று ஆண்டுக் கனவாய்
மனதில் விதையேறிய விருட்சத்தை
மகிழ்வென பதியமிட....
மருந்தென அடைகாத்து

மா திரு காலம் வர

முளைகட்டிய சொல்லெடுத்து
காத்திருந்த கருநிறையே
எண்ணியசெயலை திண்ணியவாறே
முடித்து நிற்கும் திமிர் உரையே

சுற்றிப் பகை சுற்றமெனவே வந்து
சுற்றியபோதும்

வளர்த்த நன்றியின்றி
உதவிபெற்ற பைரவமே
எட்டி தூரோகம் இழைத்த போதும்

இனப்பிரிவு மாயை
இச்சாதாரியாய் மொழிக்கொடுக்கிட்டு
சீண்டிய போதும்

மனிதன் நெருங்கும்
முப்பெரும் தீமையை
மூவாசைக்கொடுமையை

எல்லாம் எதிர்த்து ...
ஏறி சிம்மாசனமிட்டு
என் அன்னை மொழியே
நீயின்றி எதுவும் என் உயிரில்லை
என்றே நேசித்து,....

உணர்ந்து உருகி
உள்சென்று தொழுது
உவகையாய் எழுந்து
உயர்திரு தருவாக்கிய
உயர்நிறை அறிவே

அண்ணனெனும் ஆசானே

கட்டமைத்த கட்டிடத்தை
எடுத்துரைத்து
தட்டிப் பார்த்து மொழி சொல்ல
சிறுபிள்ளை சொல்லெடுத்து
சித்தாள்கள் பலர் வந்த போதும்

சொல்லும் மொழியும்
சொல்லவந்தோர் கருத்தும்
எனக்கோர் ஆசானே

என்றினும் பொறுமையாய்
நின்றெனத் தாங்கி
நின் பெருமைவராது
நிலப் பொறுமை தாங்கிய தங்க மகனாரே

என்னே தவம் செய்தாள்
தமிழன்னை உன்னை தன் மகனாய் மடிதாங்க

உலகப் பொதுமறைக்கோர்
உவகை கவி மறை எழுதி

சிகரம் எழுந்த சீர் மொழியெ

முப்பாலை அமிழ்தென கரைத்து
ஆயுள்செழிக்க நீர் தர

சொட்டும் தேனை
சொட்டுவிடாமல் பருக முடியாமலே
கருத்து மொழியிடாமல்
திணறி ஆயுள் குறைத்தேன் நான்

ஈரடித் தமிழில்
வாழும் ஆறடித் தமிழாய்
சான்றோன் ....உம்மைக் கண்டேன்

சொல்லும் மொழியும்
உம்மையே கண்முன் நிறுத்தியது
அறம் பொருளென ..அமைச்சு குடிமக்கள்
காக்கும் மன்னன் வளமையில்

கொஞ்சும் மொழியும்
கொழுந்து கனிவும்
சிலேடை வம்பும்
சிணுங்கும் சொல்லும்

இன்னும் இளம் வயதே நீர் என
நின் மொழி
அடையாளமிட்டது

மொழி கண்டவர் வியப்பில் ஆள
மொழி ஆள முடியாதவர் பொறாமை துயில

பொல்லாங்கு செய்தவரையும் பொறுக்கும் நிலமாய்
நிகழ்தாங்கி உருஎழுந்து
உயரம் காட்டிய

உயர்பெருமைதிமிர் மலையே

என் தமையனெனும்
பிரமாண்டபெருந்தன்மையே

என்றும் நின் மொழி விரல் பிடித்து நடந்து
நின்மொழிக் குடை கீழ்
இளைபாறி பெருமிதம் கொள்கிறேன்

நெஞ்சார்ந்த மகிழ்வை
என் சொல் ..என்ன சொல்லெடுத்து
நான் சொல்லினும்

விழியோரம் துளிர்க்கும்
ஆனந்த கண்னீரையும்
மனமெங்கும் நிறையும்
மத்தாப்பு மகிழ்வு நிம்மதியையும்

சொல்ல எனக்கோர் மொழி இங்கேது

கல்வெட்டு சாதனை என் ஆசான் செய்து
காலம் வென்று
இதோ இவ்வள்ளுவர் சிலை இணையாய்
இந்த வள்ளலார் ..சொல் ஆள

ஈராயிரம் ஆண்டு கடந்தும் வாழும்
இன்பக் காட்சி விழி நிறைய

வழியும் கண்ணீர் ...வழிய விட்டு

வணங்குகிறேன் மொழிச் சிகரமே

வாழிய தமிழ் மகனார்...வாழும் உயிரகள் வாழ்வணைத்தும் தனதாக்கி

இனிய வணக்கங்கள் ஆசானே

Sunday, 21 June 2015

தந்தையர் தின வாழ்த்துக்கள்

தேனிமை பிரியங்களுடன்
தேவதையென கொஞ்சி
தேடலில்லா வாழ்வு தரும்

தியாக பிரமமே
அறிவின் ஆசானே

கருவோடு தாய்சுமந்து இறக்கிவிட
கனிவோடு நீர்தானே கடைசிவரை
தோள்கருப்பை சுமக்கிறீர்

என்னில் இல்லா நம்பிக்கையை
என் மீது ஊன்றி ..உம் வியர்வை நீரூற்றி
எனை வளர்த்து காய்த்து
கொழிக்கவைக்கும்

ஆணிவேர் நீர்

பிறந்தஎன்னை தூக்கத்தெரியாமல்
ஒருவிரல் கொடுத்தாய்..முதலாய்
அன்று என் நம்பிக்கை நீயென
இறுகப் பற்றினேன்
இன்றுவரை உன் கைபிடித்தே நகர்கிறது
என் இமைவிடியல்கள்

என் தேவை என் தேடல்
என் இன்பம் என் நிம்மதி

சுயநலபிள்ளை நான் யோசிக்கும் முன்
உன்னைவருத்தி
எல்லாம் கொண்டுவந்து முன்நிறுத்தி
என் முக சந்தோஷத்தில் உம் மனம் மலர்வாய்

துவளும் போதெல்லாம்
சகிப்புதன்மையும் விட்டுக்கொடுத்தலும்
அவமான மீட்டெழலும்..கொடுத்து
தோள்தாங்கும் வலிமையாய்
சொற்கொண்டு என்னை தட்டிஎழுப்புவாய்

விரல்பிடித்து கூட்டி அலைந்து
பருவம்வர பாசம்தள்ளி ரசித்து
பாதுகாப்பு வளையமாய் உடன் சூழ்ந்து

தாரைவார்க்க தன்னையறியாமல்
கண்வழிய நின்று
தாயாக ...தலைதடவி பூரித்து

கட்டியவன் அதிகாரம் காட்ட
எதிர்த்து நின்று எனக்காக குரலுயர்த்தி
போரிட்டு ..அடக்கி

எந்தச்சூழலிலும்...சுழல்
என் வாழ்க்கைதீண்ட விடாத
தடுப்பணை நீர்

போராட்டகுணமும்..நின்று சாதிக்கும் வெற்றியும்
தோல்வியில்லா வாழ்வும்
தொலையாத கல்வியும்

எனக்களித்த என் பிரம்மனே
என் முதல் நண்பனே

தாயுமானவனாய் எனைத்தாங்கும்
நிறை பெருமை தோளே

என்னதவம் இங்கு நான் செய்தேன்
உம்மின் கருவாய் நான் உயிர்நிறைய

நித்தம்உம்பாதம் தொழுதாலும்
நிமிடந்தோறும் உமை வணங்கினாலும்

நான் பட்ட கடன்நன்றி இங்கு தீருமோ

இன்னொரு பிறவி எனக்கிருந்தால்
எம் மகனாய்..வந்து நீர் ..என் மடி நிறை

கருப்பையேந்தி தவமிருக்கிறேன்
கடவுளினும் மூத்தோனே

பேராண்மையாய் பெண்மை முகிழ்த்தி..

மகனாகி ..அண்ணன் தம்பியாகி
கணவனாகி பாசமெடுக்கும்
உழைப்பெனும் உதிரப் பிறவி

பூரணமாகும் தந்தை அவதாரமெடுத்த

என் பெருமைநிமிர் ஆண்மகனெனும்
ஆன்மத் திமிர் தோழமைகள்

அனைவருக்கும்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
 —

Tuesday, 16 June 2015

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆனந்த அன்பின் ஆகாசபிரியங்களை
நட்பெனும் கண்ணியமேந்தி

நண்பனெனும் சிறகுவிரித்த
என் முதல் தோழனுக்கு.... Datchana Mourty

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திக்குதெரியா முகநூல்வனத்தில் ...
சிறுகூட்டுப்புழுவாய் சிறகு முடக்கி
சாளரம்திறந்த எனக்கு..முதல் அறிமுகமாய்
முத்தான நண்பனாய்....

கலையுறங்கிய கவிஆர்வத்
தூண்டுகோலாய்....
தமிழினிமை பிரியங்கள் கோர்த்து
தனிஒருபாதையாய்
புகைப்பட வழியிட்டு..புடம் போட்ட நட்பு நீர்

முகம் பார்த்ததில்லை..முகவரிகேட்டதில்லை
குரல் கேட்டதில்லை அதிகம் அளவாடியதில்லை
இருப்பினும் இருவரிலும் எள்ளளவு மரியாதை குறைவில்லை

உம்மின் தமிழ்கூட்டுப் ப்ரியதோழமைகளில்
நானும் ஓர் மொழியெடுத்து எழுததுவங்கினேன்
ஆயிற்று ஆண்டுகள் ஐந்து ...கடந்தவந்தபாதை
எழுதியனவும் எண்ணிக்கை 5000 மிக

முகமறியா என்னை முன்நிறுத்திய தமிழால்
நட்புவட்டமும் தேடாமல் ஓடிவந்தணைத்தது
ஐந்துஆயிரம் மின்னும் மிகுதியாய்

எழுதவில்லை என்றால் என்னை இங்கு யாருக்கு தெரியும்
அந்த எழுத்தின் பாதையில் ஏணியமைத்த உம்மை
என்றும் மறவாது என் நட்பினிமை பிரியங்கள்

உம் கூட்டில் எனக்கு கிடைத்த உதிரசொந்தமே
அன்னையென என்னை கொண்டாடி
தாய்வீடு தந்த...என் அன்புத்தம்பி Sedhu Raj

அழகிய அன்புததங்ககூட்டில் அற்புததோழமையாய்
என் நண்பெனும் மனிதராய் இணைந்து கைகுலுக்கிய
இனிய தோழமையே

சங்கத்தமிழாய் சந்தனவாசனை மணமாய்
சரக்கொன்றைமலர்ப் புகழாய்..
சந்தோஷ வெற்றிகள் குவிந்து வழிந்து

சரயூ நதியாய் நீர்.... நலம்பலபெற்று

சாதனைச்சிகரமேறி அவனிபோற்ற அரும்பெரும்வாழ்வு வாழ..அன்னைத்தமிழையும்..என்அன்னையையும்
வணங்கி வேண்டி வாழ்த்துகிறேன்

வாழிய வாழிய நீர் வாழையடி வாழ்வு பல்லாண்டு

இனிய வாழ்த்துக்கள் மூர்த்தி

Friday, 12 June 2015

மொழிக் கருத்தாய்வு

ஆயிரம் அன்பின் ப்ரிய மலர்களை
காம்போடு எடுத்து....அட்சதையென
தோழமைகளின் கையில் கொடுத்து

என் மொழிக் கருத்தாய்வின் மூலம்..

https://www.facebook.com/photo.php?fbid=668875529912015&set=a.117588265040747.20225.100003687237942&type=1&theater

என் மீது தூவி வாழ்த்து மழையில்
எனை மூச்சுத் திணற முத்துக்குளிக்க வைத்த
அன்புத் தம்பியே... Maha Suman

என்னவென்று நன்றி சொல்லி நெகிழ்வேன்
உம் தாய்மொழி பற்றையும்..தமக்கைபிரிய அன்பையும்

பேராண்மையும்..பெருந்தன்மை மனமும் கொண்டு
ரசிகனாகி....கலையுலகம் கொண்டாடும் கலைஞனாகி
ஆழ் எழுத்துக்களும் அற்புத சிந்தனைகளின் வழி
இலக்கிய உலகில் தனக்கென தனியிடம் பதித்து

விவாதமேடையாய்..சமூக அக்கறை கொண்டு
இன்னும் பிள்ளையென பணிவு மொழியாடி
பவித்திர கண்ணிய கனிவாடி....

அக்கா என்றே அமுதுற என்னை அழைத்து ....

அனைத்து கவித்தோழமைகளையும்..கருத்தாய்வு மூலம் ..சிகரமேற்றி அழகுபார்க்கும் நீர்

முப்பிறவி மூவேந்தர் பரம்பரையோ
இப்பிறவி இலக்கிய விடிவெள்ளியோ

வாழ்க மகிழம்பூ மணமாய்..மணம் கொண்ட உம் மனம் போல் என்றும் ....சொல்விளைந்தாடும் ஈர நிலமாய்

வாழ்த்துக்கள் வாங்கி தந்தவனை..நன்றி வாழ்த்தி
நானும் நெகிழ்கிறேன் உன் அன்பாடல் பிரியங்களில்
ஆயுள்பிரிய தவம் வரம்..உம்மை நான் இங்கு சந்தித்து பிள்ளை பிரியமாடுவது

மிக்க மகிழ்வுகள் தம்பி