Showing posts with label வாழ்வியல். Show all posts
Showing posts with label வாழ்வியல். Show all posts

Sunday, 14 May 2017

கருணையின் கதவுகள்




தட்டுங்கள் திறக்கப்படும் 
என்றனர்
தட்ட தட்ட
திறக்கப்பட்டது 
திறந்த வழியெங்கும் 
கருணை பரவி கிடந்தது 
செல்ல செல்ல நம்பிக்கை துளிரும் விட்டது
பரமபத கால விளையாட்டில்.........
முடிவடைந்த பாதையின் வாயிலில்
பழைய சாத்தான் நின்று 
கெக்கரித்துக் கொண்டிருந்தான் 
கை தந்த தேவனோ 
கழுமரத்தில்
கருணையின் எல்லா வழிகளும் 
எப்போதும் முடிவடைவதில்லை
சொர்க்கத்தில்


Saturday, 18 March 2017







எவரையும் எதிர்பாராமல்
ஓடிக்கொண்டிருந்தது நிமிடம்.
யார் பேச்சையும் கேட்காமல் 
இலையசைத்துக் கொண்டிருந்தது 
காற்று 
நடுவான் நகர்ந்து அந்தி நோக்கி
பயணித்திருந்தான் பகலவன்....
பசி மறந்து 
கடல்நோக்கி காத்திருந்தன
கன்னியப்பன் வளர்புறாக்கள்
தூரத்து வெடியோசை
பட்டாசாய் கேட்டது
வேகமாக ஓடி வந்த பேரலையில்
ஒப்பாரி நுரை கசிந்திருந்தது

சேதியறியாத கன்னியம்மா
கை தவறி
நிலங் கவிழ்ந்தது
நெத்திக் குங்குமம்

Monday, 17 October 2016

தேக மா காலம்

பிடி கஞ்சியும் 
கடி மிளகாயும்
எரி உள்ளியும்

தேனென இனித்து
உரமானது
#தேக மா காலம்




மனசுக்கு ஏதுடா வயசு


கீழே விழுந்திடாதே
மெல்ல நட
ஏனிந்த வேலையுனக்கு.
சும்மாயிரு
சொன்னத கேட்காம
எதையும் இழுத்து வைச்சுகாத
எரிச்சலோடு 
குறைபடும் சொந்தங்களை 

அடேய் மேதாவி கிறுக்குகளா....
மனசுக்கு ஏதுடா வயசு....
தெம்பிருக்கும் வரை
கிடை அடைஞ்சது சாகுமா

சுருங்கும் விழி பார்வையில்
சூட்சமாம சொல்லி நகர்றா
சூதான அப்பத்தா

Thursday, 13 October 2016

உடுக்கை இழந்தான்

காப்பிப்பொடி தேடும் முன் 
பால் பொங்கி தீய்ந்தது
தோசை, கல்லோடு ஒட்டி 
வர மறுத்தது
குக்கரில் விசில் வராமல்
தண்ணீர் வெளியேறி
சாதம் அடிப்பிடிக்க
வாஷிங்மிசினும் நுரையோடு
அடம் பிடித்தது

காய்நறுக்கி கீறி
கை சுட்டு அவஸ்தைப்பட்டு
ஆயிரத்து ஓராவது முறையாக
எரிச்சலோடு திட்டி ஓய்ந்தான்

இத்தனைக்கும் காரணமான
அம்மாவீட்டிற்கு போயிருக்கும்
மனைவியை

Saturday, 3 October 2015

#சோதனை

ஒவ்வொரு முறையும்

வேரோடு தூக்கி
வேகமாய் கீழ் எறியும்

இயந்திரமாய் ஓடிஓடி


அதிகாலை பேப்பருடன் அப்பா.....
அன்றாட தோட்டவேலையில் தாத்தா
அடுப்படியில் வீட்டையாளும் அம்மா
பூஜையறையில் புண்ணியம் தேடும் பாட்டி

அமைதியாய் நிம்மதி வாழ்ந்த அனைவரும்

பட்டணத்து நாகரீகத்தில்
பதட்டத்துடன் 
இயந்திரமாய் ஓடிஓடி

இயல்பு மறந்து
தொலைந்து போனார்கள்

நேரமின்மையால்

சாமக்கோடாங்கி

சாதரண 
வேட்டி சட்டையில்
சத்தமில்லாமல் வந்தாலும்

சற்று பயமுறுத்தியே
செல்வார்

வறுமை தைக்க

வலை தைக்க 
அறிந்து

வறுமை தைக்க
அறியாதவன்

வாழ்தலின் நிமிடங்கள்

எதற்கெடுத்தாலும் 
குறை சொல்லும்
உன்னிடம்

என்ன சொல்வது
எப்படிச் சொல்வது

என்ற 
நினைவுக் குழப்பத்திலேயே
கழிகிறது

நமக்கான
வாழ்தலின் நிமிடங்கள்

வறுமை கரங்கள்

வள்ளல் கரம்

நோக்கியே
நீளூம்

வறுமை கரங்கள்

நிழல் உயிராய்

அவருக்கான 
நாற்காலியில்
கம்பீரம்
அமர்ந்திருக்கிறார்

இறந்ததாய் சொல்லும்
தாத்தா...

நிழல் உயிராய்

பைத்தியமென்று


உன்னைத்தவிர
வேறு நினைப்பின்றி 
அலைய

நீ உட்பட
அனைவரும் 
சொல்லினர்

பைத்தியமென்று

நம்பிக்கை ஊசலாடும் மகவு

ஒய்யாரக் கழியில்
பிள்ளை ஏற்றி
ஒரு சாண் வயிற்றுக்கு
வீதியெங்கும்
வித்தை காட்டினான்

பாவமென்று
பல பார்வை பரிதாபம்
பேசிய போதும்

பயமென்பது அறியாது

காப்பான் தகப்பனென்று
நம்பிக்கை ஊசலாடும் மகவு

காலப் பூனை

ஆத்திகவாதி முன் 
அடிக்கடி குறுக்கே போய்

ஆயுள்திட்டு வாங்கும்

அதுவரை அமைதியமர்ந்த
காலப் பூனை

பிணந்தின்னி பேரரசு

குழந்தையை
பெண்களை
வயசாளியை

கொன்று குவித்தே

வீரப் புறமுதுகில்
வெற்றிமுரசு கொட்டும்


விவசாயி ஆவி

ஏர் கூர் முனையில்
உறி தொங்குது

மழையை நம்பி
மண்ணை பதம் பார்த்து

சாவியா போன
விவசாயி ஆவி

Thursday, 1 October 2015

கேட்டேனா பாதகத்தி...


அடித்து பெய்த
அந்த மழை இரவில்

ஊர் உறவுக் கதையெல்லாம்
சொலவடை செப்பி பேசியதில்

அர்த்தசாமத்தில்
சண்டை வந்தது
அப்புச்சிக்கும் அய்யமைக்கும்

எப்போதும் 
பேசாத அப்புச்சி
அன்னைக்குனு பார்த்து 
பதிலுக்கு எகிற

ஓங்கி ஒப்பாரி வைச்சா
பத்துபிள்ளை பெத்து
இருவதுபேரன்பேத்தி எடுத்த 
அய்யம்மை

””அப்பவே அப்பாரு சொன்னாரு
இந்தாளு உனக்கு சோடியில்லை ஆத்தானு
கேட்டேனா பாதகத்தி.........

ஆன்ம யோகம்

உச்சிமுதல் பாதம் வரை
உள்ளோடும் உணர்வுகளை

தள்ளி வைத்து கவனித்து
தனதல்ல என்று 
கடப்பதே

ஆன்ம யோகம்

மகிழ் நிம்மதி

தெருவோடு
உண்டு உறங்கி
உறவாடி
வாழ்தலும்

போதுமென்ற
பொன்மனசின்
மகிழ் நிம்மதி