தலைப்புகள்...
Showing posts with label காப்பியம். Show all posts
Showing posts with label காப்பியம். Show all posts
Tuesday, 29 September 2015
Wednesday, 8 April 2015
குணநிறை குந்தவைபிராட்டியார்
செங்காந்தள் விழியாள்
செழுமைநிறை திமிராள்
சொல்வளமை மொழியாள்
செல்வகுண பண்பாள்
அதிமனஅழகாள்
அடக்கநிறை ஒயிலாள்
அறிவிற்சிறந்த மதியூகியாள்
அருள்மொழிவர்ம அன்புத்தமக்கையாள்
ஆயிரம்
அடைமொழி சிலையாய்
கல்கி கலைவடித்தாலும்
வான் நிறை திமிர்வீரன்
வல்லத்துராயன்
காதல் கனிவாகி
தோள் கொஞ்சும் கிளி எழிலிலேயே
ஒய்யாரச் செருக்காகிறாள்
எங்கள்
குணநிறை குந்தவைபிராட்டியார்
செழுமைநிறை திமிராள்
சொல்வளமை மொழியாள்
செல்வகுண பண்பாள்
அதிமனஅழகாள்
அடக்கநிறை ஒயிலாள்
அறிவிற்சிறந்த மதியூகியாள்
அருள்மொழிவர்ம அன்புத்தமக்கையாள்
ஆயிரம்
அடைமொழி சிலையாய்
கல்கி கலைவடித்தாலும்
வான் நிறை திமிர்வீரன்
வல்லத்துராயன்
காதல் கனிவாகி
தோள் கொஞ்சும் கிளி எழிலிலேயே
ஒய்யாரச் செருக்காகிறாள்
எங்கள்
குணநிறை குந்தவைபிராட்டியார்
Monday, 26 January 2015
காப்பியங்களில் மட்டும் கற்பியல் வாழும்...
ஸ்ரீ ராமன் வருவான்
வில் ஒடித்து
மாலையிட்டு
சிந்தையெங்கும்
தனை மட்டுமே நிறைப்பான்
தன் சொல் நாயகன்
ஒருமவுன அமைதியில்
பழிச்சொல் தீண்ட
பாழ்மேனி எரிக்கும்
வரமேந்தும் சீதை தவங்களாய்
ஒழுக்க வேள்வியேந்தி
ஒருத்தி மட்டும் மனதிற்கொண்டு
அன்னைவார்த்தை மதித்து
அடர்ந்த காடுசென்று
அறுவரென குகனோடுஆகி
அணில்பிள்ளை கோடிட்ட
ராம வரங்களாய்
பிறவியெடுக்கும் மானுடம்
திரேதா யுகத்தோடு
தீர்ந்துவிட்டது.....
காப்பியங்களில் மட்டும்
கற்பியல் வாழும்
கலியுகத்தில்..........
வில் ஒடித்து
மாலையிட்டு
சிந்தையெங்கும்
தனை மட்டுமே நிறைப்பான்
தன் சொல் நாயகன்
ஒருமவுன அமைதியில்
பழிச்சொல் தீண்ட
பாழ்மேனி எரிக்கும்
வரமேந்தும் சீதை தவங்களாய்
ஒழுக்க வேள்வியேந்தி
ஒருத்தி மட்டும் மனதிற்கொண்டு
அன்னைவார்த்தை மதித்து
அடர்ந்த காடுசென்று
அறுவரென குகனோடுஆகி
அணில்பிள்ளை கோடிட்ட
ராம வரங்களாய்
பிறவியெடுக்கும் மானுடம்
திரேதா யுகத்தோடு
தீர்ந்துவிட்டது.....
காப்பியங்களில் மட்டும்
கற்பியல் வாழும்
கலியுகத்தில்..........
Sunday, 23 November 2014
அஸ்தினாபுரம் தந்த அங்கதேச அரசன் நான்
அஸ்தினாபுரம் தந்த அங்கதேச அரசன் நான்
பிறப்பறியா பிள்ளையாய்
வளர்ப்பறிய வகைப் படுத்தபட்ட வீரனும் நான்
துர்வாசர் மந்திரம் சோதிக்க
சூரியன் அழைத்த குந்தியின்
காதுவழி கவசகுணடலமேந்தி வந்தது
கர்ணனெனும் என் பிறவி
அன்னையவள் பயம் கவ்வி
ஆற்றோடு சுழலாடி அனாதையானதில்
தேரோட்டி ஒருவன் கை சிக்கி
சீராட்டி ராதே வளர்க்க.......
மீசை முறுக்கேறியது இளமை
சத்திரிய வீரத்தில் ரத்த அணு துடிக்க
பிராமண வேடமேந்தி பரசுராமரிடம் பணிந்து வில் ஆள
வண்டெடுத்து தொடை துளைத்த
இந்திரன் சதியில்...குரு உறங்க அமைதி காக்க
பொய் வினை சாபமாய்
குத்தப் பட்டது என் உயிரின் முதல் அம்பு
சத்தம் கேட்டு இலக்கு தாக்கும் திறனறிய
பார்க்காமல் பசு கொல்ல ...பாப்பன் சாபம்..குத்துகிறது
இரணடாவது அம்பாய்
அழுத சிறுமிக்கு
நெய்பிரித்த மண்ணினால்
கசங்கி துடித்த பூமா தேவி குத்தினாள்
மூன்றாவது அம்பு
பாண்டவ மூத்தோனாய் பாராள பிறந்த
என்னின் வீரவேள்..கூர்தீட்டப்படுகிறது
துரோணாச்சாரிய புறக்கணிப்பில்
குருவின்றி தந்தை அஸ்தமனத்தில் குலவித்தை கற்க.....
கற்ற கலை கையெடுக்க நடுக்கூடத்தில்
வளர்ந்த சாதி அவமானபடுத்த
வீழ்ந்த தலை நிமிர்த்தப்பட்டு
ராஜமகுடம் சூடப்படுகிறது...
தோழனென தோளணைத்த துரியோதனனால்
கேடாய் கெட்டவனாகினும் மானம் காத்து
உப்பிட்ட விசுவாசத்தில்
உடன்பிறந்தோரையும் எதிர்க்க துணிகிறேன்
உயிர் கொடுக்கும் நட்புக்காய்
பிறவி இது எனத் தெரிந்த பின்
உச்சி கொதிக்கும்
என் சூரியபொழுது தர்மத்தில்
தாயவள் வரம் கெஞ்ச....
வேடமிட்ட இந்திரன் கையேந்த
ராஜதந்திரி கண்ணன் சித்து விளையாட
சாபங்கள் அணிவகுக்க....
சல்லியனும் கைவிட.....
அநீதி வென்று நீதி ஜெயிக்க....
தர்மகுருதிகேட்டுவந்த கிருஷ்ண அவதாரம்
கண்டு ரசித்த..படி
பிறப்பிலே அறுத்தவள்
நடு களத்திலே மடியிட்டு
என் மகனே என
ஓலமேந்தி அழ
குருசேத்ர போரில்....பதினேழாம்நாள்
பின் பிறந்தோன்...தம்பியோன்
வில்லாளி அம்பினால் வீரமரணமேந்தி....
படைத்தவன் சொர்க்கமேறுகிறது என் ஜென்மம்..
மண்ணாள பிறந்தேனா..மடிசாய அழுதேனா
தர்மம் நாட்ட வளர்ந்தேனா தாய் குலபெருமை அழித்தேனா
என்னே என்பிறவி........
மா பாரதம் காக்க
மாபெரும்காவியமாய்
கண்ணனவன் லீலை செய்து
தர்மமது ஜெயித்து...
இலக்கியபூமி செழித்தோங்கி
மானிடம் வாழ் காலம்வரை
இவ் இதிகாச வரலாற்றில்..
இருக்கும் வரை
இல்லையென கொடுத்து
நட்புக்கென உயிர் காத்து நின்ற
கற்பு வழுவா என் பிறப்பும்
ஓர் கலப்பில்லா மைல்கல்லே...!!!!
Thursday, 13 November 2014
காவேரி பூம்பட்டின கலையழகி நான்
காவேரி பூம்பட்டின கலையழகி நான்
செழுமையும் வளமையுமாய் தேகம் கொண்ட எனைத் தென்றல் தீண்டினாலும் அச்சமுற்றே மேனி சிலிர்க்கும்
மண்பார்த்த விழிகள் கொண்ட மங்கை நான்
பார்க்க பார்க்க பரவசமூட்டும் என்னழகில் தன்னழகு எழுந்து தவிப்போடுதானாட..ஆசை கர்வமேந்தி மணமுடித்தான் ..கோவலனெனும் என் காவலன்
இரவோடு விடியாத பகல்தேடி இன்பமுற்று களிப்புற.... ஈடு கொடுத்து நடனமாடியது....
எவருக்கும் தெரியாத என் கற்பு ஒழுக்கங்கள்
எடுத்து முன்காட்டி பின் மயக்கும் அழகுகலை தேகசுழிவுபயின்ற ,,ஆடல்குல மாதவி வந்தாள்
மேனி அவளில் பெண்மையெனினும் மேன்மை அவளின் இறைநாயகன் எனினும்
பங்கிட்டதோ பரிதாப சபலங்கள்தான்
அரசன் முதல் ஆண்டியும் வேறுபாடின்றி தேடி அடையும் உயிர்குழியில் சிருங்கார மயக்கத்தில் ...என் மன்னவனும் தான் வீழ்ந்தான்
உன் நிம்மதி என் அமைதி .. உன் மகிழ்வு ..என் நிறைவு
எனவே பசலை வாட்டிய போதும் பாசமேந்தினேன் பதிவிரதையாய்
ஆணின் அன்பு அவன் தேக சுகத்திலோ தேடல் சுகத்திலோ....
என்னின் பேரன்பு .. என் கற்பின் ஒழுக்கத்தில்
என்றொருநாள் என்னவன் வருவான் என்றிருந்தேன் மன்னவனும் வந்தான் மதி மீண்டு
வந்தவன் வந்தானடி வறியவனாய்
வாரியணைத்த என் அன்பில் தன் பிழை உதிர்த்த கண்ணீர் என் மார்பில் ஈரமாக
கலங்கலாமா...வருந்தலாமா..என்றேன் வா ஊர்துறப்போம்..உறவு வேண்டோம்
என கூறி ,,என்அணைத்த தாய்மையில் கட்டுண்டான் மீண்டும் என்னில் கள் உண்டான் என் தலைவன்
எமனவன் எட்டிப்பார்க்க.. கள்வன் என பொய்குற்றம்சுமந்த அவனை மண்ணும் உண்டது
பொறுக்குமா என் கற்பு..அடுக்குமா என் நெஞ்சம்
மாணிக்கபரல் உடைத்து என் தலைவன் பழி நீக்கி மதுரை எரித்தது...என் ஒழுக்கத்திமிர்
கதைகேட்டு காவியம் படைத்த இளவரசு ..இளங்கோவடியே
தன் தலைவன் என உறவு சூடிக்... கூடிய பெண்மை கற்பின் ....
இரவுப்பிரிய அழகு தீர்வுக்கும்
இடர் தவறிய நீதிக்கும்
உன் உளி செதுக்கியதோ எனக்கோர் அதிகாரம் .. சிலம்பின் ஒலியாய்...
நானும் பேர்பெற்றேனே ..மண்னின் மாந்தருக்கு ஓர் ஒழுக்க கோவில் உறையும்.... இறையாய்
மாநாய்கனின் மகள்..மாசாத்துவன் புதல்வனினால் புனிதமடைந்தாள்......கல் உறையும் கடவுளாய்
பெண்மையே நீயும் ஓர் ஆண்மையே உன் கற்பே..என்றும்........உனக்கு ஆளுமையே !!!
செழுமையும் வளமையுமாய் தேகம் கொண்ட எனைத் தென்றல் தீண்டினாலும் அச்சமுற்றே மேனி சிலிர்க்கும்
மண்பார்த்த விழிகள் கொண்ட மங்கை நான்
பார்க்க பார்க்க பரவசமூட்டும் என்னழகில் தன்னழகு எழுந்து தவிப்போடுதானாட..ஆசை கர்வமேந்தி மணமுடித்தான் ..கோவலனெனும் என் காவலன்
இரவோடு விடியாத பகல்தேடி இன்பமுற்று களிப்புற.... ஈடு கொடுத்து நடனமாடியது....
எவருக்கும் தெரியாத என் கற்பு ஒழுக்கங்கள்
எடுத்து முன்காட்டி பின் மயக்கும் அழகுகலை தேகசுழிவுபயின்ற ,,ஆடல்குல மாதவி வந்தாள்
மேனி அவளில் பெண்மையெனினும் மேன்மை அவளின் இறைநாயகன் எனினும்
பங்கிட்டதோ பரிதாப சபலங்கள்தான்
அரசன் முதல் ஆண்டியும் வேறுபாடின்றி தேடி அடையும் உயிர்குழியில் சிருங்கார மயக்கத்தில் ...என் மன்னவனும் தான் வீழ்ந்தான்
உன் நிம்மதி என் அமைதி .. உன் மகிழ்வு ..என் நிறைவு
எனவே பசலை வாட்டிய போதும் பாசமேந்தினேன் பதிவிரதையாய்
ஆணின் அன்பு அவன் தேக சுகத்திலோ தேடல் சுகத்திலோ....
என்னின் பேரன்பு .. என் கற்பின் ஒழுக்கத்தில்
என்றொருநாள் என்னவன் வருவான் என்றிருந்தேன் மன்னவனும் வந்தான் மதி மீண்டு
வந்தவன் வந்தானடி வறியவனாய்
வாரியணைத்த என் அன்பில் தன் பிழை உதிர்த்த கண்ணீர் என் மார்பில் ஈரமாக
கலங்கலாமா...வருந்தலாமா..என்றேன் வா ஊர்துறப்போம்..உறவு வேண்டோம்
என கூறி ,,என்அணைத்த தாய்மையில் கட்டுண்டான் மீண்டும் என்னில் கள் உண்டான் என் தலைவன்
எமனவன் எட்டிப்பார்க்க.. கள்வன் என பொய்குற்றம்சுமந்த அவனை மண்ணும் உண்டது
பொறுக்குமா என் கற்பு..அடுக்குமா என் நெஞ்சம்
மாணிக்கபரல் உடைத்து என் தலைவன் பழி நீக்கி மதுரை எரித்தது...என் ஒழுக்கத்திமிர்
கதைகேட்டு காவியம் படைத்த இளவரசு ..இளங்கோவடியே
தன் தலைவன் என உறவு சூடிக்... கூடிய பெண்மை கற்பின் ....
இரவுப்பிரிய அழகு தீர்வுக்கும்
இடர் தவறிய நீதிக்கும்
உன் உளி செதுக்கியதோ எனக்கோர் அதிகாரம் .. சிலம்பின் ஒலியாய்...
நானும் பேர்பெற்றேனே ..மண்னின் மாந்தருக்கு ஓர் ஒழுக்க கோவில் உறையும்.... இறையாய்
மாநாய்கனின் மகள்..மாசாத்துவன் புதல்வனினால் புனிதமடைந்தாள்......கல் உறையும் கடவுளாய்
பெண்மையே நீயும் ஓர் ஆண்மையே உன் கற்பே..என்றும்........உனக்கு ஆளுமையே !!!
Subscribe to:
Posts (Atom)




