Saturday, 15 November 2014

வேரோடிப் போன நீ

நினைக்க கூடாதுஎன்று பலமுறை

எனக்குள் நான் ஸ்லோகம்
சொன்ன போதும்

கண்ணாடியில்
என்னை நான்
பார்க்கும் போதெல்லாம்

எனையறியாமல்
பின்புறம் வந்து

ஒளிந்து தெரிந்து
சிரிக்கிராய்........

வேறாகிப் போன
பின்னும்

இன்னமும் என்னை
ஆழம் பார்த்துக் கொண்டே
தான் உள்ளாய்.....

பருவ வாசலில்
இடுக்கில் முதலாய்
வேரோடிப் போன நீ


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..