Showing posts with label பொய்மை. Show all posts
Showing posts with label பொய்மை. Show all posts

Monday, 17 October 2016

சிற்றின்ப ஈசலாய்

அஸ்திவாரமின்றி
கோபுரம் கட்டியேறும்
பொய்மை
:
:
:
தலைகுப்பற தானழிவோம்
ஒரு நாளனெத்தெரிந்தும்

#சிற்றின்ப ஈசலாய்




Thursday, 1 October 2015

உணர்வு அனாதை

புகழிசை விரும்பி 
அவள்

வாசிக்கும் விரல்களில் 
வளர்ச்சியிருப்பதாய் ..நம்பி 
மொழி நடனமிடுவாள்

ரசிக்கும் கூட்டமும்
உச்சாதியில் வெறியூட்டும்

பொய்யென தெரிந்து
மெய் விரிப்பாள்
கைதட்டலுக்கு

ஆடல் அவளுக்கின்பம்
ஆட்டுவித்தல் 
கூத்தாடிக்கு மகிழ்வு

நரம்புகள் அறுந்து
நாடி தளர்ந்து
ஓயும் போது

ஒருவரும் தேடாத
நிதர்சன பாதையில்

அவள்

உதாசீன 
உணர்வு அனாதை

Saturday, 29 August 2015

பச்சப்புள்ளையென

மனிதர்களை புரிவதில்
மாறுகண் உடையவள் நீ

விக்கி திக்கி
திணறிய போது
திசையும் காட்டினேன்

வாசல்தட்டிய பிரியங்களை
வரவேற்கத்தெரியாமல்

வந்தமர்ந்த சொந்தங்களை
ஆராதிக்க புரியாமல்

அலங்கார குலுங்களில்
ஆதர்ச வேசத்தில்
வண்ணம்தீட்டிய பொய்களில்
வார்த்தைபுரட்டி வாயாடி

ஏளனத் திமிராய்
ஏற்றிய ஏணி
தவறவிட்டு

தவிப்பாய்
மொழிக் கொக்கியிடுகிறாய்

எப்போதும் பழிபோட
எதிராய் எவராவது உனக்கு
அமர்ந்து விடுவார்கள்

இம்முறை நான்

குயவன் கை மண்பாண்டமாய்
கூத்தாடி உடைத்து விட்டு
ஊர் ஒப்பாரி வைப்பதால்
உடைந்தது ஒட்டிவிடுமா

ஓடி ஓடி மறைத்தாலும்
ஓங்கிய ஆதவவிழி ஒளி தான்
மறைக்க முடியுமா

கோபங்களை விட
கொழுந்தெழுகிரது...

நானாகி நேசித்த பிரியம்....
நெம்புகிறது

பாவம் நீ இன்னும்
பச்சப்புள்ளையென

Friday, 20 February 2015

நம்பிக்கை வேரற்று

உண்மையான நேசிப்பு
போலி உருக்களிடம்

சிக்கி
கொல்லும் போது

மனிதப் பிறவி மீதான
நம்பிக்கை
வேரற்று போகிறது

Thursday, 12 February 2015

மன விகாரங்கள்..

என்ன தான்
தன் பொய்மை அரிதாரத்தை
தானாக அழிக்க

சிலர் முயற்சித்தாலும்

அவரறியாமல்
செய்யும் செயல் மேல்
ஓடிவந்து அப்பிக் கொள்கிறது

அவர் தம் இயல்பு
மன விகாரங்கள்.....

ஹாஹா......

Wednesday, 11 February 2015

பிராந்தன் அடையாளமே

பொய்மை சலசலப்புகளும்
போலி சத்தமிடல்களும்

முக்காடு போட்டு
உரு மறைக்கும்
மந்தையாட்டு கூட்டத்தில்

முகம் காட்டும் உண்மை
பிராந்தன் அடையாளமே

Sunday, 8 February 2015

கழட்டி எறியும் முகமுடி

கழட்டி எறியும்
முகமுடி

பெயர்த்தெடுத்து
வந்துவிடுகிறது

கொஞ்சம்
முகச்சாயலையும்

Sunday, 1 February 2015

நட்பின் அஸ்தமனம்

பொய் சொல்கிறாய்
மெய் நிரூபிப்பாய்

காத்திருந்தேன்

திரும்பி வராத
திருட்டு வழியில்
எட்டி நடை வேகம் போடுகிறாய்

கொஞ்சம் நஞ்சம் ஒட்டிய
நேர்மை உதிர்த்து.........

சலசலப்போடு அலங்காரம் பூட்டிய
இழவு சங்கீதமான உன்னின்
ஆத்மசாந்திக்காய்....ஓர் நிமிடம்
இறுதிப் பிரார்த்தனை செய்து

திரும்பி பார்க்காமல்
கடக்கிறேனடி

சாவில் கூட சேர முடியா
எதிர் திசை நோக்கி

கரும்புள்ளி குத்தி

கிட்ட நெருங்கி
கச்சிதமாய் கண்டு
கரும்புள்ளி குத்தி

கருணை விலக்கி விரட்டப்பட்ட
கருப்பாடு கூட்டம் ஒன்று

கூடி நின்று
குள்ளநரித் தம்பட்டம்
அடிக்கிறதாம்

எட்டாக் கனியை நினைத்து
சீ..சீ ..
இஃது புளிக்குமென்று

Monday, 26 January 2015

மனக்குருடுகள்

நித்தம் பேசுவதிலும்
நெருங்கி கட்டி
சிரிப்பதிலும்

உயிரெனும்
அங்க உறுப்பாய்
உருமாறும் வார்த்தையிலுமே

நேர்மையெனும் அன்பு
நங்கூரமிடுவதாய்

நம்பிக்கையாடுகிறது

கிடைத்து தொலைத்து
தேடிச் சலிப்பதாய்
விலகித்தெறிக்கும்

சில
மனக்குருடுகள்

Monday, 29 December 2014

தீரா பேய்

சுழட்டியடிக்க சுத்தும்
காத்து கருப்பு விலக்கி

கண்ணேறுகளுடன்
பொறமை பாசாங்காய்...

எழுத்தென நடிப்பென
வரும் ...நயவஞ்சகபச்சோந்தி
விரட்ட....

மனம் முன்னும்

அறிவு ஆணியடித்து

மாட்ட வேண்டியுள்ளது....

தீரா பேய் அண்டாமல்விரட்டி
துவம்சம் செய்யும்

திருத்த தெளிவு
திருஷ்டி பொம்மைகள்..!!!!

Tuesday, 23 December 2014

உண்மை உளி

உன்னை எனக்குள்
உண்மை உளி
இறக்காமல்

நம்மை பிறருக்கு
பதியவைக்கவே

பெருமளவு
முயற்சிஎடுக்கிறது

ப்ரிய வேரில்
வென்னீரூற்றும்

உன் பேரன்பு
சோக அரிதாரங்கள்

Friday, 12 December 2014

நட்பு கண்ணாடி

நட்பு கண்ணாடியை
தெரிந்தே
கீழே போட்டு
உடைத்து விட்டாய்..

உன்னை
மன்னிக்கவும் முடியாமல்
மறக்கவும் நினைக்காமல்
தவிக்கிறது

பாசக் குருதியில்
உன்னை பச்சை குத்தி
கொண்ட மனசு

காரணங்கள் கூறாது
நட்புக்கு மரண ஓலை எழுதி
மெளனமாய் விலகிய
உன்னை மறுபடி பார்த்து

ஒண்றே ஒன்று மட்டும் கேட்கத் தோணுகிறது...???????
""இவ்வளவு தானா நீ"" என்று

Wednesday, 10 December 2014

பொய்மையின் அகராதி

பொய்மையின்
அகராதி ஆகிவிட்டாய்

உண்மையென நீ
கதறியபோதும்

வெறுப்பு மண்டிய
என்னில் இன்னும்

உனக்காக
மிச்சமிருப்பது

என் நேசிப்புகள் வடிந்த

உன் நலம்விரும்பும்
சில பிரார்த்தனைகள் மட்டுமே

Saturday, 22 November 2014

சில்லறைப் பொய்கள்

தீப்பந்தமெடுத்து
தன் தலை
கொளுத்திக் கொள்கிறது

அன்பு ஏங்குவதாய்
அப்பாவி வேஷமிடும்

சிருங்கார
சில்லறைப் பொய்கள்