Showing posts with label வலி. Show all posts
Showing posts with label வலி. Show all posts
Friday, 14 October 2016
Saturday, 3 October 2015
Thursday, 1 October 2015
கேட்டேனா பாதகத்தி...
அடித்து பெய்த
அந்த மழை இரவில்
ஊர் உறவுக் கதையெல்லாம்
சொலவடை செப்பி பேசியதில்
அர்த்தசாமத்தில்
சண்டை வந்தது
அப்புச்சிக்கும் அய்யமைக்கும்
எப்போதும்
பேசாத அப்புச்சி
அன்னைக்குனு பார்த்து
பதிலுக்கு எகிற
ஓங்கி ஒப்பாரி வைச்சா
பத்துபிள்ளை பெத்து
இருவதுபேரன்பேத்தி எடுத்த
அய்யம்மை
””அப்பவே அப்பாரு சொன்னாரு
இந்தாளு உனக்கு சோடியில்லை ஆத்தானு
கேட்டேனா பாதகத்தி.........
பாச விரிசல்
அன்பா குடும்பம் நடத்தி
ஆசையா புள்ளைய பெத்து
ஊர் மெச்ச ஊட்டி வளத்து
நல்லாமட்டுமே இருக்கனும்னு
நாளும் நாயா பாடுபட்டு
ஆஞ்சு ஓஞ்சு
நிமிர்ந்து பார்த்தா
அதது சுயநலக் கிளைவிட்டு
நாலும் நாற்திசைக்கு
வேரிழுக்குது
புயலடிச்சப்ப கூட
கம்பீரம் நின்ன பெத்தமனம்
அசைஞ்சு தான் பதறுது
அடிதடி சொத்து தகராறுன்னு
விழுதுக படுத்தும்
பாச விரிசல்ல
பொறுமை ஒப்பாரி
சீர் செனத்தில
குறையிருக்கு நு
மவளை அடித்த..மருமவனை
எதிர்த்து அதட்டியதால்
அம்மா பகையானாள்
அந்தவீட்டுக்கு
மாமியா தூண்டிவிட்டு
மறுவீடு மறுக்கப்பட்டு
நாதியத்து போன பொழைப்பில்
அப்புச்சியும் போய்
அண்ணங்காரனும்
பொண்டாட்டி பேச்சு கேட்க
திண்ணை அனாதையான அம்மா
திருட்டுதனமாய் அவ்வப்போது
வந்து யாருக்கும் தெரியாம
எட்டிப் பார்த்து போகிறாள்
மவளையும்
பேரப்பிள்ளைகளையும்
கூடவும் போக முடியாம
கூறுகெட்டவன் வீட்டில்
கூட்டியும் வைக்க முடியாம
ஊமைகண்ணீர் வடிக்கிறா
பாதகத்தி வயித்தில வந்த மவ
பொம்பள பொறப்பு
பொறுமை ஒப்பாரி
Subscribe to:
Posts (Atom)



















