Showing posts with label வலி. Show all posts
Showing posts with label வலி. Show all posts

Friday, 14 October 2016

பூ #விடம்

வெளுத்ததை எல்லாம் 
நம்பும் மனதை 
கொத்தி அனுபவம் 
சொல்கிறது




Saturday, 3 October 2015

வறுமை தைக்க

வலை தைக்க 
அறிந்து

வறுமை தைக்க
அறியாதவன்

வலி முடிச்சிடுகிறேன்

ஈடில்லாத நேசத்தை
இணையில்லாது வழங்கி
தாய்மையென 
நினைவுசிலிர்க்க

கடமைக்கு செய் 
போதுமென்றே
செயலுரைக்கிறாய்

துவர்ப்பு புன்னகையுடன்
வலி முடிச்சிடுகிறேன்

நேசக் கருகலைந்து

வாழ்தலின் நிமிடங்கள்

எதற்கெடுத்தாலும் 
குறை சொல்லும்
உன்னிடம்

என்ன சொல்வது
எப்படிச் சொல்வது

என்ற 
நினைவுக் குழப்பத்திலேயே
கழிகிறது

நமக்கான
வாழ்தலின் நிமிடங்கள்

என்றும் பதினாறாய்

என்றும் பதினாறாய்
மனதிலிருப்பாள்

கல்யாணம் செய்து 
கொள்ள முடியாத 

காதலி

வறுமை கரங்கள்

வள்ளல் கரம்

நோக்கியே
நீளூம்

வறுமை கரங்கள்

பைத்தியமென்று


உன்னைத்தவிர
வேறு நினைப்பின்றி 
அலைய

நீ உட்பட
அனைவரும் 
சொல்லினர்

பைத்தியமென்று

நம்பிக்கை ஊசலாடும் மகவு

ஒய்யாரக் கழியில்
பிள்ளை ஏற்றி
ஒரு சாண் வயிற்றுக்கு
வீதியெங்கும்
வித்தை காட்டினான்

பாவமென்று
பல பார்வை பரிதாபம்
பேசிய போதும்

பயமென்பது அறியாது

காப்பான் தகப்பனென்று
நம்பிக்கை ஊசலாடும் மகவு

Thursday, 1 October 2015

கேட்டேனா பாதகத்தி...


அடித்து பெய்த
அந்த மழை இரவில்

ஊர் உறவுக் கதையெல்லாம்
சொலவடை செப்பி பேசியதில்

அர்த்தசாமத்தில்
சண்டை வந்தது
அப்புச்சிக்கும் அய்யமைக்கும்

எப்போதும் 
பேசாத அப்புச்சி
அன்னைக்குனு பார்த்து 
பதிலுக்கு எகிற

ஓங்கி ஒப்பாரி வைச்சா
பத்துபிள்ளை பெத்து
இருவதுபேரன்பேத்தி எடுத்த 
அய்யம்மை

””அப்பவே அப்பாரு சொன்னாரு
இந்தாளு உனக்கு சோடியில்லை ஆத்தானு
கேட்டேனா பாதகத்தி.........

மகிழ் நிம்மதி

தெருவோடு
உண்டு உறங்கி
உறவாடி
வாழ்தலும்

போதுமென்ற
பொன்மனசின்
மகிழ் நிம்மதி

அகதி ஆல்


நிலவெறிக் கழுகு
புசித்து உதறிய

எச்ச விதை

கனல் விருட்சமான
அகதி ஆல்

தற்காப்புடன் கொலை

தற் கொலைக்குள்
துயிலுறங்குது

தற்காப்புடன்
கொலை

நொடிப் பிறழ்வுகள்


உயிர் விடுதல் ஒன்றே
வலி மீறல்

என்றே 
வழிகாட்டும்

மன அழுத்த
நொடிப் பிறழ்வுகள்

ஆழக் கொழுத்து




அடர் வனத்திடையே
ஆழக் கொழுத்து

அச்சமின்றி நிமிர்ந்து

வேடர் அருகிருக்க 
வேங்கையென நடமாடும்
கலைமான்...
:
:
:
ஓவியத்தில்

பாச விரிசல்


அன்பா குடும்பம் நடத்தி
ஆசையா புள்ளைய பெத்து

ஊர் மெச்ச ஊட்டி வளத்து 
நல்லாமட்டுமே இருக்கனும்னு
நாளும் நாயா பாடுபட்டு

ஆஞ்சு ஓஞ்சு
நிமிர்ந்து பார்த்தா

அதது சுயநலக் கிளைவிட்டு
நாலும் நாற்திசைக்கு
வேரிழுக்குது

புயலடிச்சப்ப கூட
கம்பீரம் நின்ன பெத்தமனம்

அசைஞ்சு தான் பதறுது

அடிதடி சொத்து தகராறுன்னு
விழுதுக படுத்தும்

பாச விரிசல்ல

அப்பாவின் சைக்கிள்


காதலிக்கும் போது 
அம்மாவை

கடைவீதி செல்லும் போது
எங்களை
முன்பக்கம் ஏற்றி

உறவினர் யார் வந்தாலும்
பின்பக்கம் அமர....

குரங்கு பெடலிட்டு
கீழே போட்டு போட்டு
நாங்களும் பழக

இல்லாதவரின் 
இருப்பாய்..

துருப்பிடித்து
பரண்மேல் கிடக்கிறது

உழைத்து களைத்த

அப்பாவின் சைக்கிள்

பலூனோடு முடிந்திருக்கும்

குழந்தைகளாகவே
இருந்திருக்கலாம்

பலூனோடு 
முடிந்திருக்கும்

பேராசைகள்

வலியில் வைராக்கியம்

விழி நிறை
எரிமலை சேமித்து 
வைக்கும்

வலியில் 
வைராக்கியம் இறுகும்

மதக்களிறு

பொறுமை ஒப்பாரி



சீர் செனத்தில 
குறையிருக்கு நு 
மவளை அடித்த..மருமவனை
எதிர்த்து அதட்டியதால்

அம்மா பகையானாள்
அந்தவீட்டுக்கு

மாமியா தூண்டிவிட்டு
மறுவீடு மறுக்கப்பட்டு
நாதியத்து போன பொழைப்பில்

அப்புச்சியும் போய்
அண்ணங்காரனும்
பொண்டாட்டி பேச்சு கேட்க
திண்ணை அனாதையான அம்மா

திருட்டுதனமாய் அவ்வப்போது 
வந்து யாருக்கும் தெரியாம

எட்டிப் பார்த்து போகிறாள்

மவளையும் 
பேரப்பிள்ளைகளையும்

கூடவும் போக முடியாம
கூறுகெட்டவன் வீட்டில்
கூட்டியும் வைக்க முடியாம

ஊமைகண்ணீர் வடிக்கிறா
பாதகத்தி வயித்தில வந்த மவ

பொம்பள பொறப்பு
பொறுமை ஒப்பாரி

தப்பிக் கடந்த பின்னும்

தப்பிக் கடந்த பின்னும்
தடமெங்கும்

சாவு சந்தித்தே
நடப்பான்

அகதி