Saturday, 15 November 2014

சிலிர்த்தெழும் உணர்வு

கழுத்தோடு
கரம் மாலையிட்டு

தோளோடு
அடைக்கலமாகி

அன்பு சாயும்
நிமிடங்களில்

வேகவேகமாய் ஒடி வந்து
சிலிர்த்தெழும் உணர்வுகளில்

சிரித்துத் தணிகிறது

நமக்கிடையேயான

வெம்மையான
வாக்குவாதங்கள்.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..