Showing posts with label முதுமை. Show all posts
Showing posts with label முதுமை. Show all posts

Monday, 17 October 2016

தேக மா காலம்

பிடி கஞ்சியும் 
கடி மிளகாயும்
எரி உள்ளியும்

தேனென இனித்து
உரமானது
#தேக மா காலம்




மனசுக்கு ஏதுடா வயசு


கீழே விழுந்திடாதே
மெல்ல நட
ஏனிந்த வேலையுனக்கு.
சும்மாயிரு
சொன்னத கேட்காம
எதையும் இழுத்து வைச்சுகாத
எரிச்சலோடு 
குறைபடும் சொந்தங்களை 

அடேய் மேதாவி கிறுக்குகளா....
மனசுக்கு ஏதுடா வயசு....
தெம்பிருக்கும் வரை
கிடை அடைஞ்சது சாகுமா

சுருங்கும் விழி பார்வையில்
சூட்சமாம சொல்லி நகர்றா
சூதான அப்பத்தா

Saturday, 3 October 2015

அன் பூ கண்டு

ஒத்தைப் பூ
கொடுக்கும் போதெல்லாம்
மறுத்து

கொத்தோடு கொடுக்கும் போது
வாங்கிக் கொள்கிறாய்

சூடும் வயது கடந்து

இளமை 
மலர்கள் சிரிக்குதடி

பழுத்த நேசத்தில்

பருவங் கனியும்
அன் பூ கண்டு

Thursday, 1 October 2015

திமிர் வேறுபாடில்லை


அவளென்று
நானென்று

திமிர் வேறுபாடில்லை

ஆயுள் மூப்பு
உயிர்மையில்

முதியோர் இல்ல பயத்துடன்

மகன் மருமகள்
வேலைக்கு போகும்
வீட்டில்

பேரன் பேத்தி
காவலுக்கு

அனைத்து வேலையும் செய்து
ஆனந்தமாய்
அடிமையிருக்கிறாள்

முதியோர் இல்ல
பயத்துடன்
அம்மா

Wednesday, 30 September 2015

பழம் பருவம்

அவளை
நானாய் .......

பார்க்கும்
பழம் பருவம்

முதுமை

Tuesday, 29 September 2015

அந்தோ பரிதாபங்கள்

தெய்வத்தை
விடுதிக்கு அனுப்பிவிட்டு

தெருதெருவாய்
கோயில் அலையும்

அந்தோ பரிதாபங்கள்

ரத்தம் சுண்டிய முதுமை

ஏய்யா சாப்பிடு

வேணாம்டி

இந்தாய்யா
சாப்பிட்டு தொலை

அபத்தானே
நானும் நாலு பருக்கை
வாயிலே போட முடியுமென

வைது வைது வாயில
ஊட்டுவ
நான் பசியாறிய பின்னு
தான் உணவுண்ணும்
தாய்க் கிழவி

ஆண்டவனும்
ஆத்தாளும்

அவ உருவத்தில்
ஆவிபுகுந்து
வெகுநாளாச்சு போல

வேகப்போற காலத்துல தான்
வெட்டிபுழப்பு கட்டைக்கு புரியுது

பொண்டாட்டி அருமைய
உணர்ந்து மனம் கதறும்
பொன்னுசாமியா..

பாரினில் பல
ரத்தம் சுண்டிய முதுமை

Friday, 4 September 2015

கூட்டாஞ்சோற்று குறும்பு ருசிகள்

குழந்தையும்
முதுமையும்

கூட்டாஞ்சோற்று
குறும்பு ருசிகள்

சற்றே கடினம்

சமாளிப்பது

Sunday, 30 August 2015

அப்புச்சியும் அம்மாயியும்

வயசான பின்
வாய் ஓயாமல் பேச

ஆயிரம் கதைகள்
சேர்த்து வைத்திருக்கும்

அப்புச்சியும் அம்மாயியும்
பணங்காசு பதட்டமில்லாமல்

இனிவாழ்வை
இலகுவாய் வாழ்ந்தவர்கள்

Saturday, 29 August 2015

வலித் தனிமை

கடிவாளம் போடாத
ஒழுக்க மீறல்....ஆசைகள்

கட்டாயம் தரும்
அவமான
வலித் தனிமை

அற்புத வாழ்வு

அதிகம் பேசாத
அப்பாவும் அம்மையும்

அந்நியோநியமாய்
குடும்பம் நடத்தினர்

ஆயிரம் பிறைகண்டு
அற்புத வாழ்வு

Saturday, 22 August 2015

பாட்டையா வெந்தாடி

பழுத்த அன்பில்

பஞ்சு மெத்தைய விட

பாட்டிக்கு
சுகமாகியிருக்குது

பாட்டையா வெந்தாடி

Sunday, 2 August 2015

அனுபவ பல்கலைகழகம்

இளமைக்கு
முதுமை

நம்பிக் கை
நடமாடும்

அனுபவ
பல்கலைகழகம்

தெய்வப் பேராண்மை

பேரன் கதற கதற
மகன் வந்து
விட்டுப் போகிறான்

திட்டவும் மனசில்லாமல்
வசைபாடிய மருமகளையும்

வேற
வழி அறியாத மகனையும்

நலம் வாழ வாழ்த்தியே
ஆதங்கம் தேடும்

முதிய இல்லக்
கோவில் உறையும்

பெத்தவர்கள் எனும்
தெய்வப் பேராண்மை

மன வைராக்கியம்



வளைந்த கூனிலும்
வளையாது

வயசாளி மன
வைராக்கியம்

நினைவு சேமிப்பாய்

பழுப்பேறிய காகிதத்தில்
பக்கம் பக்கமாய்
பாதிபுரியாத
கல்வெட்டு எழுத்துக்கள்

ஓடி சேகரித்த
கரையோர சோவிகள்

கடல் மூச்சு வாங்கும் வலம்பொரி சங்கு

விடியல் வெளிச்சம் தரும்
தூண்டி சிம்னி....

இறந்த பின் உடைக்கப்பட்ட
தாத்தனின் பெட்டியில்

அடக்கமாய்
துயிலுறங்கினாள்

அவரின் 75 வயது
காதல் கிழத்தி

நினைவு சேமிப்பாய்

Thursday, 9 July 2015

இணை நேச அடையாள ஆவியாய்

இணை பிடித்து
நடந்தாலும்
ஈரெட்டு பின்னே வருவா

ஆயிரம் வசவிலும்
அழகாய் அன்பு
ஒளிச்சு வைப்பா

திட்டி ஓய்ந்தாலும்
தின்ன வட்டி கழுவ விடமாட்டா

உறங்கிய பின் உறங்கி
விழிக்கும் முன் எழுவா

அதிக பச்ச அழைப்பே
இந்தாருமய்யா என்பது தான்

பொத்தி பொத்தி
தாத்தன பாதுகாத்த
பேச்சி அப்பத்தா
அடைமழை பொழுது ல
பொசுக்குன்னு ஒரு நா
போயிட்டா

கத்தல கதறல

இத்துபோன உடம்புல
ஈரம் தாங்காம
கிழவி போயிட்டா நு
செவனேனு செவரு சாஞ்சவரு தான்
செங்கப்பன்

எடுத்து இழுத்துவிட்ட மூச்சு
திரும்பாலே போயிடுச்சு
கிழவியோடவே

சரிஜோடி..சமதையா
இறந்த த ..ஊரு பேச

நெஞ்சுகுழி நேசத்தோடு
இன்னும் வீதி வழி
நடந்துகிட்டே தான்
இருக்காவுங்க

இருவரும்
இணை நேச
அடையாள ஆவியாய்

Monday, 6 July 2015


கைவிடும் போது

பிள்ளைப்பேறில்லா
ஜென்மமும்

பிறவி புண்ணியமென்றே

தோன்றிப் போகிறது

இடுகாடு வரை
வரவேண்டிய மகன்

இடையிலேயே
கைவிடும் போது