Showing posts with label பெண்மை. Show all posts
Showing posts with label பெண்மை. Show all posts

Wednesday, 12 October 2016

தனித்திமிராய்

தன் கவலையேதுமின்றி
தனித்திமிராய்
பெண்மை
சோபித்திருப்பது

#தந்தை தோள்களிலே

Saturday, 3 October 2015

பிரம்மனுக்கு நன்றி.....

பிடறி தட்டி
வீழ்கிறேன்

உன்...பின்
வளை பேரெழிலில்

:
:
:
ஓவியமெனினும்
உணர்வுக்குப்பை கிளறிவிடும் கிளியழகே.....

உனதழகில் மோட்சம் தர
பிறவிக்குருடனாய்
படைக்காதிருந்த
பிரம்மனுக்கு நன்றி.....

Friday, 4 September 2015

கண்ணம்மா

என்றும்
பருவப் பேரழகி

பாரதியின்
செல்லம்மாவை விட

கண்ணம்மா

அவள் ஓரு பெயரில்லா அபூர்வ பறவை

ஆளற்ற
ஆகாயப் பெருவெளியில்

சிறகின்றி..
இலக்கு பறக்கும்

அவள் ஓரு
பெயரில்லா

அபூர்வ பறவை

Monday, 31 August 2015

உணர்கிறேன் நானும்

உரசி செல்கிறாய்
உணர்கிறேன்

நானும்
பெண்ணென்று

Sunday, 30 August 2015

வெளுத்த வானமாய்

அடை மழை
கொட்டித் தீர்த்து

வெளுத்த வானமாய்

உதிர நாளில் பெண்

பொய்கால் குதிரை

சிலிர்ப்பு சிணுங்கி
சிரித்துவேகமெடுத்து

அழகு கொணட்டி
ஆடுகிறது....

பெண்மை வந்தமரும்
பொய்கால் குதிரை

Sunday, 23 August 2015

திராவிட தமிழச்சி

இயல்பின்
சிரிப்பணியும்

இணையில்லா
பேரழகி

மெருகேறும்
பொன்னை மிஞ்சும்

எம்
திராவிட தமிழச்சி

Monday, 6 July 2015

பிடரி ஆண்மை

திருத்த விழிகளால்
உறுத்து பார்ப்பது

பெண்மை
ஓவியமென்றால்

ஒரு நொடி
திணறிப் போகும்

சிலிர்க்கும் ..
பிடரி ஆண்மை

Sunday, 21 June 2015

சுவர்ப் பெண்மை

சிறகொடிந்த
சுவர்ப் பெண்மை

எப்போதும் வரைகிறது

இறகுடனே பறவை

Friday, 12 June 2015


அம்மாவின் ஆளுமை


வட்டப் பொட்டு
பேசரி மூக்குத்தி
எட்டுக்கல் தோடு

முதுகு மறைக்கும் ரவிக்கை
முந்தானை வாசனை சேலை

நிமிரா அமைதி
நிமிர்ந்த மனதீரம்

நிகழ்வை..நினைவாய்
அம்மாவின் ஆளுமையாய்

தூரிகை வரையும்

துணைக் காரணிகள்

யாரிங்கே இவள்??

சுவாசம் கெஞ்சியே
மூச்சுகுழல் திறக்கிறது
அவளின்
முதுமைக்கும் இளமைக்கும்
இடைப்பட்ட..இடஒதுக்கீடு வாழ்வு

சேயானாள்..
மங்கை...மனைவியானாள்
தாயானாள்....பாசசிறை வீழ்ந்து
தனியே அவள் யாரென்பதே
அவளுள் அடிக்கடி எழும்
விடையில்லா கேள்வி

தியாகம் அவளின் மேன்மை
நேர்மை அரும்பெரும் அணிகலன்
எல்லோரிலும் அவள் நிறைந்திருந்தாலும்
எதனாலும் அவளை பூரணம் செய்ய முடியாது

உவமைஆயிரம் செப்பி
ஒய்யாரக் கோபுரம் ஏற்றினாலும்

உள்மூச்சு பொசுங்கி
தான் யாரென்று தெரியாது
தனக்கெதுவேண்டுமென்று புரியாது
வெறுமைவாழ்வு சப்பிபோட்ட
மாங்கொட்டையாய்....

விதையூன்ற தனித்திரணியற்று

இன்னும் போராடிக் கொண்டிருக்கும்
33 சதவீத பெண்மைகளில்
அவளும் ஒருத்தியே

விடுதலை கிடைத்தும்
விடைதெரியா இவ் வீரப் போராளிக்கு

பெரும்நிம்மதி நிறைவென்பது
செய்யும் செயலுக்கு கிடைக்கும்

மெச்சுதல் அங்கீகாரம் தானே