Showing posts with label தேசியம். Show all posts
Showing posts with label தேசியம். Show all posts

Monday, 17 October 2016

அறி விண்கலமொன்று அவனியிறங்கிய நாள்

அக்னி சிறகு விரித்து 
அறி விண்கலமொன்று
அவனியிறங்கிய நாள் 

எளிமை சுடரே
எழுச்சி வழியே 
தன்னம்பிக்கை நாட்காட்டியே
தன்னலமற்ற தவப்புதல்வனே
அன்பாலும் அரவணைப்பாலும்
உலக உயிர் புதுப்பித்து
புதுவழி காட்டும் நம்பிக்கை ஆசானே

நீ வாழ்ந்த காலத்தில் 
வாழ்ந்தோம் நாங்களென்பது
வாழ்நாள் பெருமை எங்களுக்கு

வாழ்தல் தேடும் உயிர்களுக்கு
இருப்பிட உயர்விடமாய்
நீர்நிலைக் கோளமாய்
என்றும் நீர் 
ஈரம் கோர்த்து 
வியப்பித்திருக்கிறாய்
விண்வெளியுல்...

Saturday, 3 October 2015

பிணந்தின்னி பேரரசு

குழந்தையை
பெண்களை
வயசாளியை

கொன்று குவித்தே

வீரப் புறமுதுகில்
வெற்றிமுரசு கொட்டும்


Sunday, 30 August 2015

சுதந்திர பா ”ரதம்” 69

கும்மியடிக்குது
கூத்தாடுது
குதுகலமாகுது
குழந்தைகள் கொஞ்சி இழுக்குது....

சுதந்திர பா “ரதம்” 69

நேருவாய் காந்தியாய்...
நேதாஜியாய்..இந்திராவாய்
கப்பலோட்டியாய்
எம் மீசைத்திமிரோனாய்

பாரதமாதாவாய்..பார்கொடிகாத்த குமரனாய்

கதிரெழுந்த...குருத்தோலை
பிள்ளைகள் பிரிய மடலணிய

பட்டாசு சந்தோஷங்களுடன்
பால் இனிப்பு பொங்க

பட்டொளிவீசி பறக்கும் எம் சுவாசக் கொடியுடன்

செழுமை..தியாக உதிரமாக
பசுமை..மன செழுமை எழ
வெண்மை...பசும் உள்ளம் தர

சுழல்வாழ்வு சாட்சியாய்
சுற்றும் அசோக சக்கரம் அமைதியணைக்க

உயிர்காற்றாடுகிறாள் எம் தியாக திமிர் மாதா
மாராப்பு கொடியாய் மானஒளிவீசி

நேர்மையாடி..நேர் உண்மையாடி
வேற்றுமொழி பேசினும்,,வேரென பிரியமணைத்து

ஒற்றுமையாய்..ஓங்குதிமிர் நிறைந்து

இந்தியனெனும் இளங்குருதி கொப்பளிக்க
என்நாடு..என் மக்கள் ..என் சொந்தமென
இன்றும் நின்று ..இயற்கை சுழல் தாங்கி

எல்லை காக்கும் ..
எம்குல மறவீர சிப்பாய்களுக்கு
சீரெழுந்து வணக்கம் செய்து

வந்தே மாதரம் ....

கூன் நிமிர்ந்த குலங்களை உயிர் நிமிர்த்தி
சுவாசம் தந்த தியாகபிரமங்களை

மண நிறை மலர்தூவி உயர் வணங்கி

வாருங்கள் ..வாழ்த்துப் பண் பாடி

விளையாட்டாய் ..விளையாட்டில் தோன்றும் உணர்வை
விவேகநெஞ்சில் உரமணைத்து

இந்தியனெனும் திமிர் நிமிர

நித்தம் புத்தம் விடியல் காணும்

தாய்மை போற்றி..ஆடிப்பாடி.... குழந்தைகளாகி
தொடர்பிரியம் தொட்டிழுப்போம்

ஆனந்த தெப்ப...சுதந்திர பா””ரதம் “”69

இனிய வாழ்த்துக்கள்...தோழமைகளே

ஜெய்ஹிந்த்
 —

Saturday, 29 August 2015

காவல் அரண்...

காட்டாற்று வெள்ளம்
கட்டணை மீற

தன்னுயிர் தந்து
மண்ணுயிர் காக்கும்

சவால் சாவை...வீரமாய்
சுவாசிப்பான்

காவல் அரண்...

ஜெய் ஜவான்

Monday, 6 July 2015

திமிரெழுந்த தியாக திருமகன்

காக்கி உடுப்பேந்தி
கவசகுண்டல விழி சிவப்புடன்
ஆச பாச ஈரம் துடைத்து

ஊசியென உடல் குத்தும்
வெயில் பனி கொடுமை
வெந்து உருகி தனிந்து

வீறு கொண்டு
நெஞ்சு நிமிர்த்தி
வியர்வை வழிய வலிநின்று

ருசி மறந்து பசி உண்டு
கிடைத்த இடம் படுத்து

உறக்கம் மறந்து காத்து
குடும்ப நினைவு புறந்தள்ளி

உயிர் நிம்மதி தரும்

சக்தியெழு மலைமகளின்
வீர வழி மறவனாகி

திமிரெழுந்த தியாக திருமகன்களையே

வான் வெள்ளை காகித
எங்கோ ஒர் கரும்புள்ளி
ஊழல்மேகங்களையே உற்றுநோக்கி
உவகைகேலியிட்டு
உள்ளம் மகிழும் சிறுமையாகிறோம்

அரண் எழுந்த காவல்துறை
அருமை பெருமை போற்ற மறந்த
பேதையான நாம்

Tuesday, 17 February 2015

தேசிய திருமகன்

தெருவோடு தொடங்கி
தெருவோடு உறங்கி
தெருவோடே முடியும்
நாடோடி வாழ்வில்

தன் தலைமுறைக்கும்
பரந்த பூமியையே
உரிமை சொந்தமாக்கி
செல்கிறான்

ரேஷன் கார்டு இல்லாத
தேசிய திருமகன்

Sunday, 1 February 2015

தீரவைராக்கிய மனசு






வெற்றி வருகுது..வேல் வருகுது
சூற்றி சூழும் பகையே விலகு

வீரன் வருகிறான் வேந்தன் வருகிறான்
எதிர் நிற்கும் கோழையே ஓடு

பரி வருகுது வேகம் வருகுது
தெறித்து வழிவிடு பாவமே

சூரன் வருகிறான் தீரன் வருகிறான்
சுதந்திரம் காக்க என் மறவன் வருகிறான்

சூல் கொண்ட வெள்ளையனே
விடியல் காண விலகி ஓடு
பிச்சையிடுகிறோம் உயிரை
பிடித்தெடுத்து ஓடுடா கயவனே

தினவெடுத்த தோள்திமிராய்
நிமிர் மீசை முறுக்கு

எம் கட்டபொம்மு வருகிறான்

கப்பம் கேட்ட கழனித்திருடனே

இனி
கனவில் கூட என் தேசம் நினையாதே

என்றே ...

வாழ்ந்த சரித்திர ஓவியங்களை.....
வரலாறாய்....விழியணைக்கையில்

சூழ் முரசு கொட்டுகிறது
எம் நாடெனும்
பெருமிதமாய் விம்மித்தணியும்

மறத்தமிழச்சியின்
தீரவைராக்கிய மனசு



Monday, 26 January 2015

பாரத்மாதா ஹி...ஜே....


செங்கதிரோன் மண்ணுதிக்க
செழுமை வேள்வியாய்
குவிந்தோங்கிய பொன் பூமியில்
முடியாட்சி தலையெடுத்து
முதுமை தொன்மையாய்...முகிழ்வு ஆள

மானுட சுழற்சி கால அச்சேறி
மனிதப் பகை மேலோங்க
மன்னராட்சி ஆட்டம் கண்டு
மாற்றான் உள்நுழைந்து
அடிமைச்சங்கிலி கொண்டு எம் மனிதன் கையிறுக்க

தன் மக்கள் துயர் கண்டு தான் ஓலமிடும்
பாரத தாய்மையை...வெட்ட வந்தவன் வேள் தடுக்க
தீபகற்பமெங்கும் ..தீக்கனல் முளைத்து

செங்குருதி சாய்த்து தன் தாயவள் மானம் காக்க

இருள் விலகிய ஒரு நாளில்..இந்தா எனக் கொடுத்து
ஓடி...நரிக்கூட்டம் விலகித்தெறிக்க

செம்பவள முந்தானையில்..வெண் உப்புவியர்வை துடைத்து
கருநீல சக்கரத்துடன்...பசுமை சேலை கட்டி

பாங்காய் கொடியேறினாள் ..எம் அரங்கேற்றத்தாய்மை

நீயே மக்கள்..நீயே மன்னன்..இஃதே உன் இந்தியா
என..இடம் பிரித்தும் கொடுத்தாள்..
சட்டமாய் திட்டம் வகுத்து....

தாய் தந்த வழியை..பின்பற்றி மூத்த தலைமகனாம்
முதல் குடிமகனார்...........

இன்று முதலாய் அவளுக்கு அலங்காரஆடைகட்டி
வானுயரம் ஏற்ற...

நாடெங்கும்..பட்டொளி வீசி பறக்கிறது ஆனந்த சந்தோஷமாய்

ரத்தம் சிந்தைய பெருமகன்களின்..நிம்மதி சுவாசம்

எவரையும் எதிர்த்து கேள்வி கேட்கும்
கூன் நிமிர்த்திய சுதந்திரமாய்...

பொய்மை போட்டி பகைவிலக்கி...தாய்மையாய் அவளை
வேற்றுமை கையிணைத்து..ஒத்த மன சிந்தனையுடன்

மனிதம் மாட்சிமை சக்தியாய்..கொண்டாடி கூத்தாடி
சாத்வீகம் காப்போம்..வீரத் தோழமைகளே.....

பாரத்மாதா ஹி...ஜே...........ஜெய்ஹிந்த்...!!!!!!!!!!!!!!!!!!!! —

எங்கள் மீசைத் திமிரோன்

விதைநெல்லாய் வந்து
விடுதலையை
அறுவடை செய்த
வீரவிளைநிலம்...

அணுக் குஞ்சுக்குள்
அக்னி வளர்த்து

பாதக மனிதரை
மோதி மிதித்து..காறி உமிழ
பாப்பா பாட்டு
சொல்லி கொடுத்த

எங்கள் மீசைத் திமிரோன்

Sunday, 11 January 2015

சவக்காட்டு ஈழ பதுங்கு குழி

சவக்காட்டு ஈழ
பதுங்கு குழிகளில்

பிணவாடை தாங்காமல்

பிள்ளைகளோடு
பத்திரமாய்
புதைந்துள்ளான்

பெளத்த
சித்தார்த்தன்

Wednesday, 7 January 2015

கர்ண சுவாசம்

நிமிடந்தோறும் போராடி
மரண நொடி
வெல்லும்
எல்லை வீரனின்

துணிவிலேயே

கவச
நிம்மதியுறங்கிறது

கவுரவ நாட்டின்
கர்ண சுவாசம்


Thursday, 18 December 2014

தாய்மையின் கருப்பை சத்தியம்


மிருக வெறியின் .......மீளா வேதனை

என்ன வேண்டும் இவர்களுக்கு....ஏனிந்த ரத்தவெறி
குருதி ருசிப்பில் இத்தனை பேரின்பமா....

மனக் கருணையின்றி மனைவியை கொல்பவன் கூட
குழந்தை சாக துடிப்பானே....

எப்படி இப்படியோர் பிறவிகளை....மனிதன் என்று
இன்னும் விழுங்காமல் விட்டு வைத்திருக்கிறது...
பூமி

தாயில் பிறந்தானா...பேயில் பிறந்தானா
அவனியில் இன்னும் அரக்கர்கள் வாழ்கிறார்கள்
என்பதற்கு...இவர்களே உதாரணமோ

உன் கொள்கை..உன் வெறி...உன் செயல்
உன் பிடிவாதமாய்..வந்த முடவாதத்திற்கு பலி
அப்பாவி பிஞ்சுகளா

செய்தி கேள்விப்படும் தாய்மைகளுக்கே
உயிருக்குள் கத்தி பாய்ச்சி
ஓசையில்லாமல்..கலங்கி கத்துகிறதே கருப்பை
பறிகொடுத்தவள் எப்படி கதறியிருப்பாள்..??

பயமறியா பிஞ்சுகளை....சிறு சொல் கொண்டு நெம்பினாலே
வதங்கும் குருத்துகளை ..கொல்லவா
ஆயுதம் ஏந்தி வந்தீர்கள் அற்பர்களே....
இந்த பேடித்தனமா உன் திமிர் வீரம்

வகுப்பு வகுப்பாய் சென்று...
குண்டிபாய்ச்சி குருதி ருசித்த கூட்டமே
எவர்கவனம் திருப்ப...எந்த வெற்றி நாட்ட
கண்ணை குத்தி கெக்கலிக்கிறீர்கள்....

ஆண்மையிழந்த ஆளுமை தீவிரவாதமே

ஒழுக்கம் போதித்து ஒருநிலைப்படுத்தி
கோட்பாடு வகுத்து கொள்கை பிறப்பிக்கும்
மதமெல்லாம்...மனிதம் மேம்படவே....
உன் மதமும்..என் மதமும் அதைத்தானே சொல்கிறது

கனிவும் அன்பும் கருணையின் வழியென வகுத்த
மேன்மக்கள் தான்....அதை தவறும் மிருகங்களுக்கு

உங்கள் மதத்திலேயே..மதம் பிடிப்பவர்களுக்கு
இரக்கமில்லாமல்..........வெட்டிச் சாய்க்க
கண்ணுக்கு ...கண்...பல்லுக்கு பல் என
தண்டணைகளையும் கடுமையாய்..நிர்ணயித்துள்ளனர்

கூர்தீட்டிய கத்தி பதம் பார்த்திருக்கிறது
என் பிஞ்சுகளை என்பது தான் இங்கு கண்ணீர் உதிர வேதனை

ஆண்டவன் இல்லையென்பது இது போன்ற செயலால்
உறுதியானாலும்...அவனிச்சுழற்ச்சி கட்டாயம் இருக்கிறது

அலைகடலாய்..எரிமலைக்குழம்பாய்..பெரும் மழையாய்
நில நடுக்கமாய்......மனிதனை விழுங்கி ஏப்பம் விட்டுத்தான்
கொண்டிருக்கிறது இன்னும் இயற்கை

பத்து மாதம் சுமந்து..பார்த்து பார்த்து பொத்தி வளர்த்து
விழி கசிய...உயிர் விடும் தாய்மை....
இன்று படுகுழியிலிட்டு..பதறிக் கதறுகிறதே.....

விலங்கினப் பிறவியே...நீ உயிரினமாய் பிறக்கும்
எப் பிறவியிலும்...உனக்கு எப்போதும் மன்னிப்பு இல்லை

அத் தாய்மையின் ஒரு பிடி சாபம்......உன்னை..மண்ணில்
பிறக்கவைத்து...வலிக்க சித்ரவதை செய்தே....
அழுகி வாழவைத்து....சாம்பலாக்கும் என்பது

எங்கள் தாய்மையின் கருப்பை சத்தியம்


Tuesday, 16 December 2014

பிணம் தின்னும் கழுகுகள்


பிணம் தின்னும் கழுகுகள்
மிச்சம் விட்டுச் சென்ற
எச்சம்....இங்கு அகதிகளாய்

ஒவ்வரு துளி உதிரத்திலும்
உயிர் ஜனிக்கிறது
ஓர் மனிதவெடிகுண்டு.......

தன் மானம் காக்க....
தமிழ் மானம் காக்க
தனியே ஒர் மூன்றாம் உலகப்போர்.....

உறவுகள் இழந்து.....
உறுப்புகள் இழந்து
பதுங்குகுழியில்
செத்து செத்து பிழைத்து
மரணங்களிடம் மானம் இழந்த பிச்சைகாரர்கள் நாங்கள்.........

கண்ணீருடன் கவலைகள்
உண்ணும் எங்களிடம்
தயவு செய்து
கருணையை எதிர்பாராதீர்கள்.....

எந்த தேசத்தில்....
எந்த இடத்தில்
எங்கெங்கெல்லாம்
இடம் மாறி ..மொழிமாறி
சிறகுகள் இழந்து
நாங்கள் வாழ்ந்த போதும்.....

எங்களுக்குள் ஒயாமல்
ஓடிக்கொணடே தான் இருக்கிறது....

கற்பிழந்த பெண்ணின்
கண்ணீர்,,,,,,

பைத்தியமாகிப்போன
சகோதரனின் புலம்பல்......

சிரிப்பு மறந்த குழந்தை முகம்

ரத்தம் சொட்ட சொட்ட
உயிர் காக்க ஓடி வந்த ரெளத்திரம்.........

விழிகளில் எரிந்து கொண்டிருக்கிறது
அனலாய்............

மீண்டும் வருவோம்
ஈழமே........கட்டாயம்
மீண்டு வருவோம் ஈழமே......

தயாராயிரு,,,,,,,,,
சிங்களன் எனும் முற்றிலும்
அழிக்க.............
மாயான பூமியில் உறங்கும்
உறவுகள் கோயில் எழுப்ப

பிணம் தின்னும் கழுகுகள்
கொல்லும் வல்லூறுகளாய்
மீண்டும் வருவோம்
கட்டாயம் மீண்டு வருவோம்

கடைசி ஈழத்தமிழன் இருக்கும் வரை...சிஙகளனுக்கில்லை
நிம்மதிச் சாவு

கை கட்டி வேடிக்கை பார்த்த
தமிழ் இனத் துரோகியே
நீயும் தயாராயிரு........
எஙகள் தமிழ் ஈழத்தை
உன் இந்தியாவுடன் இணைக்க..

Monday, 15 December 2014

வல்லரசின் வறுமைச் சாபக்கேடு

அரைவயித்து கஞ்சிக்கும்
அண்ணாச்சி கடை
கமர்கட்டுக்குமே

அப்பன் ஆத்தா
சொன்னபடி

வலி தாங்கி
கம்பிக்குள் வளையுது

வல்லரசின்
வறுமைச் சாபக்கேடு

Sunday, 14 December 2014

காந்தி ஜெயந்தி


வரலாறாய் வாழ்ந்த மனிதர்கள்
மக்கள் மனதில்......
வயதாகிப் போன
வருடங்களில்
இடம்பிடிகிறார்களோ இல்லையோ...

அன்றாட தினத்தில்
அரசு விடுமுறையாய்
கட்டாயம் இடம் பிடிகின்றனர்

மாகாத்மாக்களை பற்றி
தன் விழி வழியில்
புறம் பேசுவதே ஒரு
புகழ் தேடும் முயற்ச்சியாகிவிட்டது
இன்று சில மனித ஆத்மாக்களுக்கு........

பூத உடலில்வாழும் போது கூட அனுபவிக்காத
பல சத்திய சோதனைகளை
புகழுடலிலும் அனுபவிக்கும்
மகத்தான ஜீவன் காந்தி

அமைதியையும்
அகிம்சையையும்
மாபெரும் ஆயுதமாய்
எடுத்துக் கொண்டு
உலகை நடுநடுங்க வைத்தவர்

இறந்த பின்னும்
வாழ ..இப்போதே
உடல் உறுப்பு தானம்
பண்ணும் நல்ல மனங்களிடையேயும்....

நேர்மையையை
உயிர் மூச்சாய் கொண்டு
சுய நல மறந்து
கடமையாற்றும்
அரசு அதிகாரிகளிடையேயும்

பசித்தவனுக்கு
தன் பசியை பங்கிட்டு
உணவு கொடுக்கும்
ஏழைகளிடமும்

உப்பிட்டவரை
இறக்கும்வரை
மறக்காத
நன்றி உள்ளவர்களிடம்.....



இடதுகை அறியாமல்
வலது கையால்
உதவி செய்யும் உத்தமர்களிடம்

தவறு செயும் சந்தர்பங்களில் கூட..சரியாக செய்யும்
வார்த்தைகள் பிறழாத
வல்லுஞர்களிடம்


என

மானுடம் பொய்த்து
மனிதம் வாழும்
மகான்களிடம்
எல்லாம் இன்னமும்
குடிகொண்டுதான் உள்ளது..இந்த மனித ஆத்மா....

ஒரு வீட்டுக்குள்
உடன் பிறந்த ரத்தங்களையே
ஒன்றினைக்க முடியாமல்
தனித்தனி தீவு தேடும் நமக்கு

ஒற்றுமொத்தமாய் லட்சக்கணக்கான
தொண்டர்களை ஒருங்கிணைத்து
ஒருமித்த குரலில்

இந்திய சுதந்திரத்தை
அகிம்சாவழியில்
அறப்போர் நடத்தி
வெற்றி வாகை சூடிய

அன்னலை...
வாழ்த்த வயதில்லை
வாருங்கள் வணங்குவோம்

Friday, 12 December 2014

தனிமனித தீவிரவாதமாய்


சுய நலங்கள் மிதித்து
நசுக்கும் சமுதாயத்தில்

மனிதம் மக்கிப் போய்

காலக் கல்லறையில்
புரட்சியாளன் தொலைந்து
போனாலும்.........

புரட்சிகள்......
வெடித்துக் கொண்டு
தான் உள்ளது

ஒவ்வரு தனி மனிதனுக்குள்ளும்

திரி பற்றி எரிந்து
உலகை அழிக்க துடிக்கும்

தனிமனித தீவிரவாதமாய்

Saturday, 29 November 2014

சுதந்திரத்தின் தேவாமிர்த ருசி

உயிரோடு
உறவுகள்...
உணர்வுகள் தொலைத்து

சப்தங்களில்
திடுக்கிட்டு
நடுக்கி...

மரண நொடி தப்பி

நடைபிணமாகும்
அகதி அறிவாள்

சுதந்திரத்தின்
தேவாமிர்த ருசியை..

Thursday, 13 November 2014

நதிகள் இணைப்பு



தாகம்..தாகம்....தாகம்
ஒருகுவளை தண்ணீர் இல்லாமல் ஒடிந்த விழுகிறது மனித இனம் ....

குடங்களை வரிசையடுக்கி வீதியெங்கும் போராட்டம்

வெடித்தபாளமாய் பாசபசையற்ற வயல்வெளி

விளையாத வயலுக்கு... பணம் கொட்டி கொடுத்ததால் விளைநிலம் எங்கும் இன்று அடுக்குமாடி

மரம் இழந்த கடுகளால்...மழை பொய்த்து நிலத்தடி நீர் வறள

ஆண்டுக்கொரு முறை..வேதனை கூட்டி விழுகிறது..விவசாய தற்கொலை

வானம் பொய்த்தாலும்..வருசமழை தப்பாமல் புயல் கூட்டி பெருந்தீனியாய் பொங்கி

பூமிச் சோழியை சுழட்டிப் போட்டு நதியென நடனமிட்டு...கடல் சேர்கிறது

ஒரே நாளில் பொங்கிப் பொழியும் வான் பிரியம்

ஆங்காங்கே..அணிதிரளும் நதிகளை ஓரிணைத்து ஒருங்கிணைத்தால்

ஆயுள் முழுதும்....

வறண்ட கோடையிலும் கொடை பெற்று வசந்தமாய் வாழும் நம் பூமி
சீவிச்சிங்காரித்து பச்சைப் பட்டுடுத்தி ஆறுமாதம் ஒருமுறை..கழனியெங்கும் கர்ப்பம் தரித்து

பிரசவமெடுப்பாள்..கதிர்பிள்ளை பெற்று என் நிலமகள்

தண்ணீர் பாட்டில் விலை கொடுத்து வாங்கும் அவல நிலை மீள....

பசியால் பரலோகம் போகும் என் மானிடன் மாண்புற

கண் ருசிக்கும் விருந்தாய்..என் பாரத தாய் பசுமைப் போர்த்தி சிலுசிலுக்க

மாநிலமெங்கும்..அண்டை நாட்டுச் சண்டைபோல் சேறுகலந்திருக்கும்....நீர்ச் சண்டைகள் ஓய

ஆளும் சுதந்திர சாம்ராஜ்யங்களே...

ஓடும் நதிகளை ஒன்றிணைத்து

மழைக்கால நீர் சேமித்து நம் அவனி சிறக்க ஆனந்தமுடிவு எடுப்பீரோ....

வாழும் மானிட கூட்டங்களே..தாகமின்றி நாம் வாழ ஓங்கி குரல் கொடுத்து

ஓர் அணி திரள வாரீர்.........வாரீர்

வாழ்க ஜனநாயகம்..ஜெய்ஹிந்த்...