Saturday, 15 November 2014

பாச வெளிப்பாடு


அருகில் அழைத்து
தலை தடவி
நெற்றி முத்தமிட்டு
மிருதுவாய்
அணைத்துக் கொள்ளும்

எதிர்பாராத
உன் பாச வெளிப்பாடில்

கண்கள் தளும்பி
வழியும் மழையில்

தலை கவிழ்ந்து
எனக்குள் முளைகின்றன

எனை வெட்கமாய்
தூக்கி சுமக்கும்

வெண்நிற குடை காளான்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..