Saturday, 15 November 2014

பூனைக் குறும்புகள்

குறுக்கும் நெருக்கும்

அங்குமிங்குமாய்
ஓடி ஓடி

முந்தானை
பற்றி இழுத்து

சட்டென்று மடியில்
தாவி ஏறி

சேலைக்குள்
முகம் புதைத்து

முறைத்துப் பார்த்ததும்

துள்ளி விலகி

துரத்துகிறேனா
என்று
ஒற்றை கண் காட்டி

ஒளிந்து நின்று
பயப்படுவது போல்
பார்க்கிறது

உன் பூனைக் குறும்புகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..