பூனைக் குறும்புகள்
குறுக்கும் நெருக்கும்
அங்குமிங்குமாய்
ஓடி ஓடி
முந்தானை
பற்றி இழுத்து
சட்டென்று மடியில்
தாவி ஏறி
சேலைக்குள்
முகம் புதைத்து
முறைத்துப் பார்த்ததும்
துள்ளி விலகி
துரத்துகிறேனா
என்று
ஒற்றை கண் காட்டி
ஒளிந்து நின்று
பயப்படுவது போல்
பார்க்கிறது
உன் பூனைக் குறும்புகள்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..