வைகாசி வாசல் திறந்து
ஆனிப் பொன் எடுத்து
ஆடிப் பட்டம் தேடி
ஆவணியில் அடியெடுத்து
புரட்டாசி ஊஞ்சல் கட்டி
ஐப்பசி மழை கோர்த்து
கார்த்திகை விளக்கு ஏற்ற
மார்கழிப் பனி குளித்து
தை தை என நடந்து
மாசி மஞ்சள் அரைச்சுப் பூசி
பங்குனிக் கோலமிட
பொன்மாங்கல்யம் சூடி
இழுத்துச் சொருகிய முந்தானையுடன்
மெட்டி ஓசைக்கு
வளையல் குலுங்க
தீட்டிய அழகுகள்
சிவந்து கரைய
அசைந்து ஆடி ஆடி
எனைத் தேடி தேடி
ஓடி வாடி
பன்னிரு மாதங்களாய்
என் ஆண்டுகளை ஆளும்
நளின நாணப் பெண்மையே!!

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..