Saturday, 15 November 2014

சித்திரையில் சீராடி

சித்திரையில் சீராடி

வைகாசி வாசல் திறந்து

ஆனிப் பொன் எடுத்து

ஆடிப் பட்டம் தேடி

ஆவணியில் அடியெடுத்து

புரட்டாசி ஊஞ்சல் கட்டி

ஐப்பசி மழை கோர்த்து

கார்த்திகை விளக்கு ஏற்ற

மார்கழிப் பனி குளித்து

தை தை என நடந்து

மாசி மஞ்சள் அரைச்சுப் பூசி

பங்குனிக் கோலமிட

பொன்மாங்கல்யம் சூடி

இழுத்துச் சொருகிய முந்தானையுடன்

மெட்டி ஓசைக்கு
வளையல் குலுங்க

தீட்டிய அழகுகள்
சிவந்து கரைய

அசைந்து ஆடி ஆடி

எனைத் தேடி தேடி
ஓடி வாடி

பன்னிரு மாதங்களாய்

என் ஆண்டுகளை ஆளும்

நளின நாணப் பெண்மையே!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..