எக்கேடாவது கெட்டுப் போ
என்று உழைப்பு உறிஞ்சி
அனாதையாக்கின
விழுதுகள்
உதிரம் வற்றிப் போய்
வேகம் தளர்ந்த நிலையில்
காலடி இரக்க பசுமையும்
கடந்து செல்லும்
கருணை மேகங்களும்
ஆறுதல் தருகிறது
மரணம் விழுங்க காத்திருக்கும்
மிச்ச சொச்ச காலங்களின்
சந்தோச
தோற்ற மயக்கங்களாய்..
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..