Saturday, 15 November 2014

தோற்றமயக்கம்

எக்கேடாவது கெட்டுப் போ

என்று உழைப்பு உறிஞ்சி
அனாதையாக்கின

விழுதுகள்

உதிரம் வற்றிப் போய்
வேகம் தளர்ந்த நிலையில்

காலடி இரக்க பசுமையும்
கடந்து செல்லும்
கருணை மேகங்களும்

ஆறுதல் தருகிறது

மரணம் விழுங்க காத்திருக்கும்
மிச்ச சொச்ச காலங்களின்

சந்தோச
தோற்ற மயக்கங்களாய்..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..