Saturday, 15 November 2014

தவம் கேட்கும் வரங்கள்...

தெய்வ சந்நிதியில்
கண்மூடி தவம் கேட்கும்
வரங்கள்...

உறங்கும் குழந்தையோடு
கொஞ்சும் நிமிடங்கள்

தாமதமாய் வரும் போது
கோபத்துடன் சிணுங்கும்
மனைவியை......

தொட்டணைத்து
செய்யும் சமாதானங்கள்...

நண்பர்களோடு
சிரித்து அழுது

உரிமையாய் நாம்
பகிரும் உணர்வுகள்

பசியோடு வருபவரை
உணவை முழுமையாய் கொடுத்து
கிடக்கும் பட்டினிகள்....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..