Tuesday, 16 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-9

நீ வரும் வழியெங்கும்
தோரணமாய்..........
பூத்துக்கிடக்கிறது
என் காதல்.

உறங்கவிடாமல்
செய்கிறது
திரும்பி பார்க்காமல் சென்ற
முதுகு மறைத்த உன் முகம்.

காதலின் கைவளைக்குள்
அவள் நினைவுகளின்
கழுத்துச் சூட்டில்
இதமாய் உறக்கம் கொள்கிறது
என் கனவுகள்.....


என்னில் இலைகளோடு
கனவுகளாய் தொலைந்து
போன உன்னை..........
வேரோடும் நினைவுகளில்
தேடித் தேடித் தவிக்கிறது
என் காதல்


கரத்தோடு கரம் இணைத்து
காதல் தரும்.....
பரிசான பாதங்கள்......
வழிநடத்துகிறது
நம் வாழ்க்கையை.......வம்சமாய்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..