Sunday 8 February 2015

அரைநெல்லி ஆயுள் நேசமே

நினைக்கையில்
எச்சிலூறி
கடிக்கையில் புளித்து

மெல்ல மெல்ல
மென்மையாகி

உள்முழுங்கி
நீரிறக்க

மதுரமாடும்
அவளும்....

பழுக்காத காய்பருவ
அரைநெல்லி ஆயுள்நேசமே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..