Tuesday 24 February 2015

இணைந்து நின்று ஆசீர்வதியுங்கள் ஆசானே..


கலைமகளின் அவதாரமாய்..
திருமகளின் அரிதாரமாய்...
மலைமகளின் வடிதாரமாய்....
எங்கள் ஆசானின்( இரா. குமார் எழில் தாரமாய் வந்து ...
இடமோடு நின்று..வலம் சூழ்ந்து ...
வளம் நிறை வாழ்வு வாழும் எங்கள் அண்ணியாருக்கு...கலைசெல்வி குமார்

இவர் போல் யாருண்டு...இவர் நிகர் எவருண்டு ...
என்று கொள்கைதிமிர் நிறைவாழ்வு வாழும்
எங்கள் சாரின் ..கருத்திணைந்து கரம் கோர்த்து ..
அவர்தம் நிமிர்நடைக்கு அடக்க இலக்கணமாகி....
முதல் பெண் மூத்த பெண் என்றே
குழந்தையாடும்...கலைநிறை செல்வ மகளுக்கு.....

வசந்த சோலையாய் வாழ்வு விதைந்த கருநிறை முல்லைசெல்வனிடம்...
குறும்புகளாடும் ...தாய்மையாய் வந்த
முதல் தோழிக்கு......
வளம் நிறைந்த வாழ்த்துக்கள்...

அன்பின் கூடு கட்டி ஆனந்த நேசமாடி...
ஆணிவேராய் மையச் சக்கரமிட்டு...
அச்சாணியாய்...பிரியமாடும் அண்ணியாரே...
உண்ணும் போதும் உறங்கும் போதும்...
எங்கள் ஆசானை இறைவனாய் இமையணைத்த...
இனிய பொன் மகளே...

வாழ்க நீவிர் நிறைவாய் பல்லாண்டு..

திரு ஆயுள் விருத்தி திருக்கடையூர்
அமிர்தக்கடேஸ்வரர் சமேத அபிராமியம்மன்
ஆலயத்தில் தாழ் பணிந்த ..அன்று போல் இன்றும்...பணிகிறோம்...தம்பதி சமேதியராய்..

இணைந்து நின்று ஆசீர்வதியுங்கள் ஆசானே..


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..