Saturday 3 October 2015
#மதம்பிடித்து
சிவன் வணங்கியே
சீதை தேடினான்
ராமன்
என்பதறிந்தே
சண்டையிட்டுக் கொள்கிறது
சைவமும் வைணவமும்
பிரியமாடும் கலைமகள்
கலையும் எழிலும்
காதலுடன் போட்டியிட்டு
கிறங்கவைக்கும்
தாய்மொழிவளமையை
தன்னிகர் பெயரென கொண்டு
பிரியமாடும் கலைமகள்
கவிதாவிற்கு Kavitha Pillai
இனிய வாழ்த்துக்கள்
செம்மொழியை நித்தம் தொட்டு
நிகழ்வுபண்பேந்தி அமுதூட்டும்
ஆசிரியையான
தாங்கள்.....
அத்திருமொழிபோல்..அவனிவென்று
வாழ்க வாழிய பல்லாண்டு பல்லாண்டு
இனிய வாழ்த்துக்கள் தோழி.
புஷ்பாஞ்சலி
பக்திநிறை அருளுக்கு பவித்திர துளசி
சக்தி முன்னேற்றத்திற்கு மஞ்சள்செவ்வந்தி
செல்வம் தரும் வளமைக்கு நாகலிங்க பூ
மணம்நிறை வாழ்வுக்கு கனகாம்பரம்
தெய்வ சித்தம் தர வெண்தாமரை பூ
அவதார மேன்மைக்கு செந்தாமரைப் பூ
நீடித்த வாழ்விற்கு வாடாமல்லி
மனதின் தெம்பு வழங்க துலுக்க சாமந்தி
மனநிறை அமைதிக்கு வெண் செவ்வந்தி
தவறை நேர்செய்ய செவ்வரளி
சரணாகதி பிரியத்திற்கு இளஞ்சிவப்பு ரோஜா
அன்னைஉன் மலரடிகளில்
ஆனந்த சமர்ப்பணம்
மா ....சரணம்
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே..!!!!!!!!!!
காத்தருள்க தாய்மைகளே....
அன்புவேத ஆகம வளமையே
பண்பு குணநலன் வழங்கும்
வல்லமையே
பாச பொருள்நிறை பவித்திர தூய்மையே
சுத்த மனம்தரும் சுகந்த நேர்மையே
காரியசித்தி வழங்கும்
கனிமன பிரள்யமே
பிரபஞ்சங்கள் காக்க வந்த
பிரதான விந்தையே
சுபிட்ச தினத்தில் சுடரேற்றி
ஸ்ரீஅன்னைஅரவிந்த மடி சரணடைகிறோம்
காத்தருள்க தாய்மைகளே....
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..
அன்புநிறை பொற்பதமே
தாமிர ஒளி சுடரே போற்றி
தன்னாளுமை யோக வழியே போற்றி
விடியலாய் வந்த வேதமே போற்றி
அமைதி தரும் ஆனந்தமே போற்றி
அன்புநிறை பொற்பதமே
அழைக்க ஓடி வந்து அணைத்து காக்கும் தாய்மைகளே
தேவையானதை ...தேவைப்படும் நிமிடங்களில் தரும் விடியலே.....
தன்னிகரில்லா
தனித்துவ மேன்மைகளே
சரணம் சரணம் கமலபொற்பாதங்கள் ஆனந்த சரணம்
ஓம் மாத்ரேய நமஹ ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!
Subscribe to:
Posts (Atom)