பனிப் பெரும்மலையே
விட்டு சென்ற உன்னை
விழித்த இரவுபகலெங்கும்
விடாமல் தேடி
அலுத்துகளைத்து
அழுது அணைத்த
கோபக் கனல் ...
வியர்த்து
கண் வழிந்த போதும்
உருகும் என்னை உருக்கி
நீ கரைந்துருகாமல்
உயர்தோங்கியே
இருக்கிறாயடா
நினைத்தவுடன்
சிலிர்த்து தழுவும்
என்
பனிப் பெரும்மலையே
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..