Monday 23 February 2015

விழி துடைக்கிறாள் அம்மா

செய் தொழிலில்
தோல்வியடைந்து
கீழ் விழ....

அப்பா பொறுப்பில்லாதவன்
என்று திட்ட

உடன்பிறந்தோர்
உதவி கேட்கும் முன்
வாசலடைக்க

எல்லாம் என் தலைவிதியென
மனைவி அழ

பிள்ளைகள் எப்போதும் போல்
நினைத்தது கேட்க

நொடிக்கு நொடி
மறுகி துவளும்
மரண மணித்துளிகளில்

தலை கோதி
தயங்காதே ராசா

நானும்
என் கை
உழைப்புமிருக்க

விழி துடைக்கிறாள்

எது போனாலும்
எனைவிட்டு போகாத
அம்மா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..