Monday 26 January 2015
பாரத்மாதா ஹி...ஜே....
செங்கதிரோன் மண்ணுதிக்க
செழுமை வேள்வியாய்
குவிந்தோங்கிய பொன் பூமியில்
முடியாட்சி தலையெடுத்து
முதுமை தொன்மையாய்...முகிழ்வு ஆள
மானுட சுழற்சி கால அச்சேறி
மனிதப் பகை மேலோங்க
மன்னராட்சி ஆட்டம் கண்டு
மாற்றான் உள்நுழைந்து
அடிமைச்சங்கிலி கொண்டு எம் மனிதன் கையிறுக்க
தன் மக்கள் துயர் கண்டு தான் ஓலமிடும்
பாரத தாய்மையை...வெட்ட வந்தவன் வேள் தடுக்க
தீபகற்பமெங்கும் ..தீக்கனல் முளைத்து
செங்குருதி சாய்த்து தன் தாயவள் மானம் காக்க
இருள் விலகிய ஒரு நாளில்..இந்தா எனக் கொடுத்து
ஓடி...நரிக்கூட்டம் விலகித்தெறிக்க
செம்பவள முந்தானையில்..வெண் உப்புவியர்வை துடைத்து
கருநீல சக்கரத்துடன்...பசுமை சேலை கட்டி
பாங்காய் கொடியேறினாள் ..எம் அரங்கேற்றத்தாய்மை
நீயே மக்கள்..நீயே மன்னன்..இஃதே உன் இந்தியா
என..இடம் பிரித்தும் கொடுத்தாள்..
சட்டமாய் திட்டம் வகுத்து....
தாய் தந்த வழியை..பின்பற்றி மூத்த தலைமகனாம்
முதல் குடிமகனார்...........
இன்று முதலாய் அவளுக்கு அலங்காரஆடைகட்டி
வானுயரம் ஏற்ற...
நாடெங்கும்..பட்டொளி வீசி பறக்கிறது ஆனந்த சந்தோஷமாய்
ரத்தம் சிந்தைய பெருமகன்களின்..நிம்மதி சுவாசம்
எவரையும் எதிர்த்து கேள்வி கேட்கும்
கூன் நிமிர்த்திய சுதந்திரமாய்...
பொய்மை போட்டி பகைவிலக்கி...தாய்மையாய் அவளை
வேற்றுமை கையிணைத்து..ஒத்த மன சிந்தனையுடன்
மனிதம் மாட்சிமை சக்தியாய்..கொண்டாடி கூத்தாடி
சாத்வீகம் காப்போம்..வீரத் தோழமைகளே.....
பாரத்மாதா ஹி...ஜே...........ஜெய்ஹிந்த்...!!!!!!!!!!!!!!!!!!!! —
காத்திருக்கிறேன்.............வா
நினைத்து தவிப்பதாய்
உருகி துடிக்கும்
என் அணுச்செல்களில்
நீக்கமற நிறைந்த
என்னை விட எனக்கு
அதிமுக்கியமானவளே
வேள்வியென வந்த பின்
வெம்மை என ....இட்ட
கோடு தாண்டலாமா
அழுகை சிரிப்பு
முத்த அணைப்பெனும்
உணர்வெல்லைகளின்
வார்த்தையாடல்கள் களைந்து
உனக்கென துடிப்பவளிடம்
உள் மறைத்தல்கள் உதறி விரை
மாசற்ற அன்புவெளியில்
ஏகாந்த உயிர்ப்பேந்தி
காத்திருக்கிறேன்.............வா
உருகி துடிக்கும்
என் அணுச்செல்களில்
நீக்கமற நிறைந்த
என்னை விட எனக்கு
அதிமுக்கியமானவளே
வேள்வியென வந்த பின்
வெம்மை என ....இட்ட
கோடு தாண்டலாமா
அழுகை சிரிப்பு
முத்த அணைப்பெனும்
உணர்வெல்லைகளின்
வார்த்தையாடல்கள் களைந்து
உனக்கென துடிப்பவளிடம்
உள் மறைத்தல்கள் உதறி விரை
மாசற்ற அன்புவெளியில்
ஏகாந்த உயிர்ப்பேந்தி
காத்திருக்கிறேன்.............வா
தவமாய் வந்த வேதப் பிரியமே
பாச ஆட்சிமை செய்யும் பவித்ர நேசமே
சூட்சம வாழ்வளிக்கும் வசந்த ஆளுமையே
எதுவந்து எதுபோன போதும் சுற்றும் பாதுகாப்பாய்
உடன் சூழும் வேள்வியே
அன்னை என மடிகிடத்தி மனது ஆறுதளிக்கும்
நம்பிக்கைநலமே
சரணம் சரணம் என்றும் நின் திருவடி பரிபூரண சரணம் பரமமே
ஓம் மாத்ரேய நமஹ ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!
வாழ்ந்த பெருமை சொல்லி
வடியாத கண்ணீர் துடைத்து
ஊர் கூடி
ஒப்பாரி வைத்து
கொட்டு மேளத்துடன்
கோடிதுணிபோட்டு
ராட்டினப் பூ சப்பரம் கட்டி
தெருவெங்கும் மணக்க அனுப்பி
குழியேத்தி
பத்தாம் நாள் கறிச்சோறு போட்டு
கழுவித்துடைத்த திண்ணையில்
இன்னமும் அமர்ந்திருக்கிறாள்
கல்யாணச்சாவு அப்பத்தா
கடக்கும் போதெல்லாம்
வெத்தலை இடித்துக் கொண்டு
காப்பியங்களில் மட்டும் கற்பியல் வாழும்...
ஸ்ரீ ராமன் வருவான்
வில் ஒடித்து
மாலையிட்டு
சிந்தையெங்கும்
தனை மட்டுமே நிறைப்பான்
தன் சொல் நாயகன்
ஒருமவுன அமைதியில்
பழிச்சொல் தீண்ட
பாழ்மேனி எரிக்கும்
வரமேந்தும் சீதை தவங்களாய்
ஒழுக்க வேள்வியேந்தி
ஒருத்தி மட்டும் மனதிற்கொண்டு
அன்னைவார்த்தை மதித்து
அடர்ந்த காடுசென்று
அறுவரென குகனோடுஆகி
அணில்பிள்ளை கோடிட்ட
ராம வரங்களாய்
பிறவியெடுக்கும் மானுடம்
திரேதா யுகத்தோடு
தீர்ந்துவிட்டது.....
காப்பியங்களில் மட்டும்
கற்பியல் வாழும்
கலியுகத்தில்..........
வில் ஒடித்து
மாலையிட்டு
சிந்தையெங்கும்
தனை மட்டுமே நிறைப்பான்
தன் சொல் நாயகன்
ஒருமவுன அமைதியில்
பழிச்சொல் தீண்ட
பாழ்மேனி எரிக்கும்
வரமேந்தும் சீதை தவங்களாய்
ஒழுக்க வேள்வியேந்தி
ஒருத்தி மட்டும் மனதிற்கொண்டு
அன்னைவார்த்தை மதித்து
அடர்ந்த காடுசென்று
அறுவரென குகனோடுஆகி
அணில்பிள்ளை கோடிட்ட
ராம வரங்களாய்
பிறவியெடுக்கும் மானுடம்
திரேதா யுகத்தோடு
தீர்ந்துவிட்டது.....
காப்பியங்களில் மட்டும்
கற்பியல் வாழும்
கலியுகத்தில்..........
Wednesday 21 January 2015
Monday 19 January 2015
சத்திய மலரடியே சரணம்
நிதர்சன வாழ்வு தரும் தாயின் மலரடியே சரணம்
நிர்மல மனம் தரும் தேவியுன் மலரடியே சரணம்
நிம்மதி பிரியம் தரும் அன்னை மலரடியே சரணம்
கதியென்று வந்து உடன் சரணடைய
உயிர் காக்கும் வேதமே
கருவென வந்து நிறையும் கலைதேவ பிரியமே
சரணம் சரணம் நின் மலரடி பூரணசரணம் அம்மா..!!!!!!!
ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!
Subscribe to:
Posts (Atom)