Monday 23 February 2015

மொழியில்லா..ஒலி பந்தமாய்

அதுக்கு புரியுமா ....தெரியாது
தினம் ...அதுகிட்ட பேசுவான்

சலுகை மடியமர்ந்து
கொஞ்சலாய்
பார்க்கும்..

அதிகாரமாய் மிரட்டி
அடுத்த நிமிடம்
அணைப்பான்

இல்லாமல் அவனும்
இருக்க மாட்டான்

விரட்டினாலும் அதும் போகாது

பெயரிட்டு உணவிட்டு
குளிக்க உறங்க
வைத்து தாலாட்டும்

வாயில்லா ஜீவனுக்கும்
வளர்க்கும் பிள்ளைக்கும்
நடுவே

ஏதோ....ஓர்

தாய்மைத் தொடர்பு
இருக்கிறது

மொழியில்லா..ஒலி பந்தமாய்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..