Monday 23 February 2015

சுபிட்சத் திருநாள்.....பிப்ரவரி 21


சுபிட்சத் திருநாள்.....பிப்ரவரி 21
மலர்களின் தாய்.....மண்ணில் அவதரித்த அன்புப் பெருநாள்

ஆளுமைவேதமாய்...சூட்சம பிரியாமாய்
அன்பு எனும் நாதமாய் ஆனந்தஒளிரூபமாய்
மலர்பிறந்த மகத்துவமே
அன்னையென வந்து ஆளுமை செய்யும் தத்துவமே

கருணைவிழி கொண்டு
கனிவு பாதைகாட்டி
கவலை துயர் நீக்கி
எதுவந்தபோதும் நானிருக்கிறேன்
உன்னுடன் மகனே மகளே....
கலங்காதே ..தயங்காதே தடுமாறேதே ...என்று தாவி பிள்ளையென அணைக்கும் பேரின்பமே

பாரீஸ் பிறந்து பவித்ர யோகம் கற்று
பாங்குநிறை வாழ்வுயெந்தி....என் மண்ணில்
பாண்டி வந்து உறைந்த உயர்நிறை உயிரே

அகில் உலகையும் அன்பால் கட்டி ஆளும் அதிமனமே
ஆழ்நிறை பாசமே
மலர்..கனி காய் இலை...அனைத்திற்கும் உயிரும் பொருளும் தந்து....உண்மை ஆளும் சுகந்தமே...

அம்மா அம்மா என்றே கதறும் பிள்ளை மனதை
அமைதியென சூழ்ந்து உண்மை வழிகாட்டி வரம் தரும் நிம்மதி வசந்தமே

கதியென வரும் பிள்ளையை....காக்கும் மோட்சமே

நின் திருநாளில்...நின்பெரும் ஆளுமையில் மனம் கசிய..விழிநீர் வழிய ....நின்திருவடி சரணடைகிறோம் தாய்மையே.....

சுவாசமாய் சூழ்ந்துள்ள ஆவித்திரு ஆளுமையே
அணைத்துக் காத்து வழிக்காட்டு மா......வானவில் ஓவியமே

அன்னையே சரணம்...என்றும் நின் திருவடி ஆனந்த சரணம் பரமமே

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..