Wednesday 11 February 2015

சரிபாதி சகிர்தாமணியே

விடாமல் பேசி
விட்டு விட்டு அழுது

கேள்வியும் பதிலுமாகி
ஓயும்வரை குரலுயர்த்தி

குற்றம் நானென
பொங்கி நீ அடங்க

உன்
சலும்பல் சிதறல்களை
சத்தமில்லாமல்
வேடிக்கைபார்க்கும்
என்னின்
பக்குவபடர்நேசங்கள்

மூத்த குழந்தை நீயென்றே
இழுத்தணைத்து முத்த
முத்தாய்ப்பிடுகிறதடி

என்
சதிபதி...சரிபாதி
சகிர்தாமணியே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..