Friday 20 February 2015

குழைவுப் பெண்மை

என்ன சொல்ல
என்னைச் சொல்ல
என்னைத்தான் சொல்லப் போகிறேன்

என நீ எண்ணியிருந்தும்
என் எண்ணம் தெரிந்திருந்தும்

விடாத பார்வை
தொடாமல் பார்த்து

உன்னில் நான் மயங்கிய அழகுகேட்டு
போதையேற்றி கிறங்கிய பின்னே

விழி அகற்றுகிறாயே தலைவா

வார்த்தைகள் தந்தியடிக்க

தளும்பும் வெட்கம் தாங்குமோ
நெகிழ்ந்த குழைவுப் பெண்மை




No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..