Tuesday 30 June 2015
இனிய வாழ்த்துக்கள் ..இளம்குருத்துகளே
நேச விதைநெல்லெடுத்து
நெகிழ்ந்த பிரியங்கள் கோர்த்து
நெஞ்சுநிறை அன்பேந்தி
அன்றில்பறவை விருப்பங்களுடன்
காதல் மனமணைத்து
ஆனந்த மணநாள் கண்டு
மகிழ்வுறும் ...அன்பிற்கினிய மணமக்களே
அன்புத்தோழியர் Poomalai Haldoraiஅவர்தம்
இளைய மகன்&மருமகளே
அழகும் அழகும் ஆலிலையில் பிரியமேந்தி
ஆண்டவன் இட்ட உயிர்முடிச்சாய்
அமிர்தவாழ்வு காணும்..நீங்கள்
வாழ்வெனும் வசந்தவான் பிரியத்தில்
வண்ணமிகு வானவில்லாய்...ஒருவருக்கொரு வர்
வளைநாண் வளைந்து
விட்டுக் கொடுத்தலில் வீடுபேறு கண்டு
எண்ணம் செயல்சிந்தைகளில்
ஒத்த கருத்தினிமையாய் கைகோர்த்து
மங்கல செழுமைகளை மகிழம்பூ மணமாய்
வரும் வாழ்வுதடமெங்கும் தளிர்பூ பரப்பி
பதினாறுவகை பேறுடன்.....
வாழையடி வம்சக் குருத்துக்கள் கண்டு
வானத்து தெய்வங்கள் போட்டிபோட்டு ஆசீர்வதிக்க
தேவாதி தேவர்கள் பன்னீர் மழைத்தூவ
தேவதைக் கொஞ்சலுடன் ..தித்திக்கும் மனமேந்தி
தெவிட்டாத வசந்தவாழ்வு வாழ
நான் வணங்கும் அன்னை வணங்கி
அல்லிமலர்செண்டெடுத்து..
அறுவகை நறுமண மலர் நிறைத்து
ஆனந்த மனம் கொண்டு
கவிநிறை மொழி தொடுத்து வாழ்த்துகிறேன்
வாழ்க வாழிய மணமக்கள் வாழிய வாழிய
ஆயிரம் பிறைகண்ட ..அற்புத பெருவாழ்வு
இனிய வாழ்த்துக்கள் ..இளம்குருத்துகளே
— with Poomalai Haldorai.நெகிழ்ந்த பிரியங்கள் கோர்த்து
நெஞ்சுநிறை அன்பேந்தி
அன்றில்பறவை விருப்பங்களுடன்
காதல் மனமணைத்து
ஆனந்த மணநாள் கண்டு
மகிழ்வுறும் ...அன்பிற்கினிய மணமக்களே
அன்புத்தோழியர் Poomalai Haldoraiஅவர்தம்
இளைய மகன்&மருமகளே
அழகும் அழகும் ஆலிலையில் பிரியமேந்தி
ஆண்டவன் இட்ட உயிர்முடிச்சாய்
அமிர்தவாழ்வு காணும்..நீங்கள்
வாழ்வெனும் வசந்தவான் பிரியத்தில்
வண்ணமிகு வானவில்லாய்...ஒருவருக்கொரு
வளைநாண் வளைந்து
விட்டுக் கொடுத்தலில் வீடுபேறு கண்டு
எண்ணம் செயல்சிந்தைகளில்
ஒத்த கருத்தினிமையாய் கைகோர்த்து
மங்கல செழுமைகளை மகிழம்பூ மணமாய்
வரும் வாழ்வுதடமெங்கும் தளிர்பூ பரப்பி
பதினாறுவகை பேறுடன்.....
வாழையடி வம்சக் குருத்துக்கள் கண்டு
வானத்து தெய்வங்கள் போட்டிபோட்டு ஆசீர்வதிக்க
தேவாதி தேவர்கள் பன்னீர் மழைத்தூவ
தேவதைக் கொஞ்சலுடன் ..தித்திக்கும் மனமேந்தி
தெவிட்டாத வசந்தவாழ்வு வாழ
நான் வணங்கும் அன்னை வணங்கி
அல்லிமலர்செண்டெடுத்து..
அறுவகை நறுமண மலர் நிறைத்து
ஆனந்த மனம் கொண்டு
கவிநிறை மொழி தொடுத்து வாழ்த்துகிறேன்
வாழ்க வாழிய மணமக்கள் வாழிய வாழிய
ஆயிரம் பிறைகண்ட ..அற்புத பெருவாழ்வு
இனிய வாழ்த்துக்கள் ..இளம்குருத்துகளே
கலை மிகு குறள்கவியமுதம்
அற்புதம் அற்புதம்
அகர அற்புதத்தில் ஒரு
அமுத சொற்பதம்........
திருக்குறள் தழுவிய
கலை மிகு குறள்கவியமுதம்
வந்த துயர் விலக்கி
வாட்டிய துயர் தவிர்த்து
வசந்த முத்து மொழி தொடுத்து
வாசனை மாலையாய்
அய்யன் வள்ளுவனுகோர்
அடர்செறிவு சொல்கவி சிகரம் அமைத்து
எதுவும் தனதில்லை
எல்லாம் இறைக்கே
என்னுயிர் அய்யனுக்கே
என்னுயர்வும் அய்யனுக்கே
என்றேறி ...இன்று இளைப்பாறும்
அன்னையே .........அன்னைமொழியே
என்னே சொல்லி நின்னை நான் வணங்க....
திரும்பிப் பார்க்கிறேன்
தித்திக்க திகட்டாமல்
தாங்கள் செழுமை செய்தேறிய
சிகரப் பாதையை
முப்பத்தின் மூன்று ஆண்டுக் கனவாய்
மனதில் விதையேறிய விருட்சத்தை
மகிழ்வென பதியமிட....
மருந்தென அடைகாத்து
மா திரு காலம் வர
முளைகட்டிய சொல்லெடுத்து
காத்திருந்த கருநிறையே
எண்ணியசெயலை திண்ணியவாறே
முடித்து நிற்கும் திமிர் உரையே
சுற்றிப் பகை சுற்றமெனவே வந்து
சுற்றியபோதும்
வளர்த்த நன்றியின்றி
உதவிபெற்ற பைரவமே
எட்டி தூரோகம் இழைத்த போதும்
இனப்பிரிவு மாயை
இச்சாதாரியாய் மொழிக்கொடுக்கிட்டு
சீண்டிய போதும்
மனிதன் நெருங்கும்
முப்பெரும் தீமையை
மூவாசைக்கொடுமையை
எல்லாம் எதிர்த்து ...
ஏறி சிம்மாசனமிட்டு
என் அன்னை மொழியே
நீயின்றி எதுவும் என் உயிரில்லை
என்றே நேசித்து,....
உணர்ந்து உருகி
உள்சென்று தொழுது
உவகையாய் எழுந்து
உயர்திரு தருவாக்கிய
உயர்நிறை அறிவே
அண்ணனெனும் ஆசானே
கட்டமைத்த கட்டிடத்தை
எடுத்துரைத்து
தட்டிப் பார்த்து மொழி சொல்ல
சிறுபிள்ளை சொல்லெடுத்து
சித்தாள்கள் பலர் வந்த போதும்
சொல்லும் மொழியும்
சொல்லவந்தோர் கருத்தும்
எனக்கோர் ஆசானே
என்றினும் பொறுமையாய்
நின்றெனத் தாங்கி
நின் பெருமைவராது
நிலப் பொறுமை தாங்கிய தங்க மகனாரே
என்னே தவம் செய்தாள்
தமிழன்னை உன்னை தன் மகனாய் மடிதாங்க
உலகப் பொதுமறைக்கோர்
உவகை கவி மறை எழுதி
சிகரம் எழுந்த சீர் மொழியெ
முப்பாலை அமிழ்தென கரைத்து
ஆயுள்செழிக்க நீர் தர
சொட்டும் தேனை
சொட்டுவிடாமல் பருக முடியாமலே
கருத்து மொழியிடாமல்
திணறி ஆயுள் குறைத்தேன் நான்
ஈரடித் தமிழில்
வாழும் ஆறடித் தமிழாய்
சான்றோன் ....உம்மைக் கண்டேன்
சொல்லும் மொழியும்
உம்மையே கண்முன் நிறுத்தியது
அறம் பொருளென ..அமைச்சு குடிமக்கள்
காக்கும் மன்னன் வளமையில்
கொஞ்சும் மொழியும்
கொழுந்து கனிவும்
சிலேடை வம்பும்
சிணுங்கும் சொல்லும்
இன்னும் இளம் வயதே நீர் என
நின் மொழி
அடையாளமிட்டது
மொழி கண்டவர் வியப்பில் ஆள
மொழி ஆள முடியாதவர் பொறாமை துயில
பொல்லாங்கு செய்தவரையும் பொறுக்கும் நிலமாய்
நிகழ்தாங்கி உருஎழுந்து
உயரம் காட்டிய
உயர்பெருமைதிமிர் மலையே
என் தமையனெனும்
பிரமாண்டபெருந்தன்மையே
என்றும் நின் மொழி விரல் பிடித்து நடந்து
நின்மொழிக் குடை கீழ்
இளைபாறி பெருமிதம் கொள்கிறேன்
நெஞ்சார்ந்த மகிழ்வை
என் சொல் ..என்ன சொல்லெடுத்து
நான் சொல்லினும்
விழியோரம் துளிர்க்கும்
ஆனந்த கண்னீரையும்
மனமெங்கும் நிறையும்
மத்தாப்பு மகிழ்வு நிம்மதியையும்
சொல்ல எனக்கோர் மொழி இங்கேது
கல்வெட்டு சாதனை என் ஆசான் செய்து
காலம் வென்று
இதோ இவ்வள்ளுவர் சிலை இணையாய்
இந்த வள்ளலார் ..சொல் ஆள
ஈராயிரம் ஆண்டு கடந்தும் வாழும்
இன்பக் காட்சி விழி நிறைய
வழியும் கண்ணீர் ...வழிய விட்டு
வணங்குகிறேன் மொழிச் சிகரமே
வாழிய தமிழ் மகனார்...வாழும் உயிரகள் வாழ்வணைத்தும் தனதாக்கி
இனிய வணக்கங்கள் ஆசானே
அகர அற்புதத்தில் ஒரு
அமுத சொற்பதம்........
திருக்குறள் தழுவிய
கலை மிகு குறள்கவியமுதம்
வந்த துயர் விலக்கி
வாட்டிய துயர் தவிர்த்து
வசந்த முத்து மொழி தொடுத்து
வாசனை மாலையாய்
அய்யன் வள்ளுவனுகோர்
அடர்செறிவு சொல்கவி சிகரம் அமைத்து
எதுவும் தனதில்லை
எல்லாம் இறைக்கே
என்னுயிர் அய்யனுக்கே
என்னுயர்வும் அய்யனுக்கே
என்றேறி ...இன்று இளைப்பாறும்
அன்னையே .........அன்னைமொழியே
என்னே சொல்லி நின்னை நான் வணங்க....
திரும்பிப் பார்க்கிறேன்
தித்திக்க திகட்டாமல்
தாங்கள் செழுமை செய்தேறிய
சிகரப் பாதையை
முப்பத்தின் மூன்று ஆண்டுக் கனவாய்
மனதில் விதையேறிய விருட்சத்தை
மகிழ்வென பதியமிட....
மருந்தென அடைகாத்து
மா திரு காலம் வர
முளைகட்டிய சொல்லெடுத்து
காத்திருந்த கருநிறையே
எண்ணியசெயலை திண்ணியவாறே
முடித்து நிற்கும் திமிர் உரையே
சுற்றிப் பகை சுற்றமெனவே வந்து
சுற்றியபோதும்
வளர்த்த நன்றியின்றி
உதவிபெற்ற பைரவமே
எட்டி தூரோகம் இழைத்த போதும்
இனப்பிரிவு மாயை
இச்சாதாரியாய் மொழிக்கொடுக்கிட்டு
சீண்டிய போதும்
மனிதன் நெருங்கும்
முப்பெரும் தீமையை
மூவாசைக்கொடுமையை
எல்லாம் எதிர்த்து ...
ஏறி சிம்மாசனமிட்டு
என் அன்னை மொழியே
நீயின்றி எதுவும் என் உயிரில்லை
என்றே நேசித்து,....
உணர்ந்து உருகி
உள்சென்று தொழுது
உவகையாய் எழுந்து
உயர்திரு தருவாக்கிய
உயர்நிறை அறிவே
அண்ணனெனும் ஆசானே
கட்டமைத்த கட்டிடத்தை
எடுத்துரைத்து
தட்டிப் பார்த்து மொழி சொல்ல
சிறுபிள்ளை சொல்லெடுத்து
சித்தாள்கள் பலர் வந்த போதும்
சொல்லும் மொழியும்
சொல்லவந்தோர் கருத்தும்
எனக்கோர் ஆசானே
என்றினும் பொறுமையாய்
நின்றெனத் தாங்கி
நின் பெருமைவராது
நிலப் பொறுமை தாங்கிய தங்க மகனாரே
என்னே தவம் செய்தாள்
தமிழன்னை உன்னை தன் மகனாய் மடிதாங்க
உலகப் பொதுமறைக்கோர்
உவகை கவி மறை எழுதி
சிகரம் எழுந்த சீர் மொழியெ
முப்பாலை அமிழ்தென கரைத்து
ஆயுள்செழிக்க நீர் தர
சொட்டும் தேனை
சொட்டுவிடாமல் பருக முடியாமலே
கருத்து மொழியிடாமல்
திணறி ஆயுள் குறைத்தேன் நான்
ஈரடித் தமிழில்
வாழும் ஆறடித் தமிழாய்
சான்றோன் ....உம்மைக் கண்டேன்
சொல்லும் மொழியும்
உம்மையே கண்முன் நிறுத்தியது
அறம் பொருளென ..அமைச்சு குடிமக்கள்
காக்கும் மன்னன் வளமையில்
கொஞ்சும் மொழியும்
கொழுந்து கனிவும்
சிலேடை வம்பும்
சிணுங்கும் சொல்லும்
இன்னும் இளம் வயதே நீர் என
நின் மொழி
அடையாளமிட்டது
மொழி கண்டவர் வியப்பில் ஆள
மொழி ஆள முடியாதவர் பொறாமை துயில
பொல்லாங்கு செய்தவரையும் பொறுக்கும் நிலமாய்
நிகழ்தாங்கி உருஎழுந்து
உயரம் காட்டிய
உயர்பெருமைதிமிர் மலையே
என் தமையனெனும்
பிரமாண்டபெருந்தன்மையே
என்றும் நின் மொழி விரல் பிடித்து நடந்து
நின்மொழிக் குடை கீழ்
இளைபாறி பெருமிதம் கொள்கிறேன்
நெஞ்சார்ந்த மகிழ்வை
என் சொல் ..என்ன சொல்லெடுத்து
நான் சொல்லினும்
விழியோரம் துளிர்க்கும்
ஆனந்த கண்னீரையும்
மனமெங்கும் நிறையும்
மத்தாப்பு மகிழ்வு நிம்மதியையும்
சொல்ல எனக்கோர் மொழி இங்கேது
கல்வெட்டு சாதனை என் ஆசான் செய்து
காலம் வென்று
இதோ இவ்வள்ளுவர் சிலை இணையாய்
இந்த வள்ளலார் ..சொல் ஆள
ஈராயிரம் ஆண்டு கடந்தும் வாழும்
இன்பக் காட்சி விழி நிறைய
வழியும் கண்ணீர் ...வழிய விட்டு
வணங்குகிறேன் மொழிச் சிகரமே
வாழிய தமிழ் மகனார்...வாழும் உயிரகள் வாழ்வணைத்தும் தனதாக்கி
இனிய வணக்கங்கள் ஆசானே
கறுப்பி
மழைமேகம் தோரணமிட்ட
ஒரு அந்தி மாலையில்
அநாதையான
அவள் வீடு வந்தாள்
எலியாரை மடக்கி பிடிக்க
கண்ணிரெண்டிலும்
நிலா ஏந்தி ..இரவு மேனி
முடியாளுக்கு ...கறுப்பி என்பதே
நாமகரணமாக
மெது நடையிட்ட
அவளோசை கேட்டு
எலி நடமாட்டம் குறைய
ஆரம்பித்தது கறுப்பி அட்டகாசம்
வியப்பாய் பார்த்தவரையெல்லாம்
விழித்து பயமுறுத்தி
பக்கத்து வீடு சென்று
பாத்திரம் உருட்டி
சகுனம் பார்ப்பவர் வர
சட்டென முன் குதித்தோடி
வம்பிழுத்து வந்து
வாசல் பதுங்கினாள்
வாத்தியார்வீடு அடையாளம் போய்
அவள் பெயர் அடைகலமாக
விஷ ஜந்துமுதல்
வினை மனிதர் வரை
அவள் பார்வை கண்டு பயமுற
ஊர் பஞ்சாய்த்து கூடி
எல்லை தாண்டி விட்டுவிட்டு வரச்சொல்லி
ஒருமனதாய்...சிறுமனதாக
எது புரிந்ததோ..அன்று
மடிவிட்டு நகராமல்
இடுப்பிறங்கா குழந்தையாய்
இடித்தே வந்து படுத்திருந்தாள்
விரட்ட போகிறாயா..?????
ஏக்கம் தொனித்த
விழி தொக்கிய கேள்வி
மனதறைய........
ஒதுக்கினேன்
பரம்பரையாய் வாழ்ந்த
ஐந்தறிவு ஊரை
ஒரு அந்தி மாலையில்
அநாதையான
அவள் வீடு வந்தாள்
எலியாரை மடக்கி பிடிக்க
கண்ணிரெண்டிலும்
நிலா ஏந்தி ..இரவு மேனி
முடியாளுக்கு ...கறுப்பி என்பதே
நாமகரணமாக
மெது நடையிட்ட
அவளோசை கேட்டு
எலி நடமாட்டம் குறைய
ஆரம்பித்தது கறுப்பி அட்டகாசம்
வியப்பாய் பார்த்தவரையெல்லாம்
விழித்து பயமுறுத்தி
பக்கத்து வீடு சென்று
பாத்திரம் உருட்டி
சகுனம் பார்ப்பவர் வர
சட்டென முன் குதித்தோடி
வம்பிழுத்து வந்து
வாசல் பதுங்கினாள்
வாத்தியார்வீடு அடையாளம் போய்
அவள் பெயர் அடைகலமாக
விஷ ஜந்துமுதல்
வினை மனிதர் வரை
அவள் பார்வை கண்டு பயமுற
ஊர் பஞ்சாய்த்து கூடி
எல்லை தாண்டி விட்டுவிட்டு வரச்சொல்லி
ஒருமனதாய்...சிறுமனதாக
எது புரிந்ததோ..அன்று
மடிவிட்டு நகராமல்
இடுப்பிறங்கா குழந்தையாய்
இடித்தே வந்து படுத்திருந்தாள்
விரட்ட போகிறாயா..?????
ஏக்கம் தொனித்த
விழி தொக்கிய கேள்வி
மனதறைய........
ஒதுக்கினேன்
பரம்பரையாய் வாழ்ந்த
ஐந்தறிவு ஊரை
Thursday 25 June 2015
புஷ்பாஞ்சலி
தெய்வத்திரு குழந்தை மன தேவமேன்மைக்கு
செவ்வரளிமலர் மாலை சமர்ப்பணம்
பாச நிறை பவித்திர ஆளுமைக்கு
பன்னீர் புஷ்பங்கள் சமர்ப்பணம்
முன்னேற்றங்கள் வழங்கும் அன்பின் அன்னைக்கு
அல்மண்டா மலர்கள் சம்ர்ப்பணம்
சிந்தை ஒருநிலைப்படுத்தும் சிறப்புமிக்க தேவிக்கு
செவ்விதழ் செழுமை மலர்கள் சமர்ப்பணம்
ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!
செவ்வரளிமலர் மாலை சமர்ப்பணம்
பாச நிறை பவித்திர ஆளுமைக்கு
பன்னீர் புஷ்பங்கள் சமர்ப்பணம்
முன்னேற்றங்கள் வழங்கும் அன்பின் அன்னைக்கு
அல்மண்டா மலர்கள் சம்ர்ப்பணம்
சிந்தை ஒருநிலைப்படுத்தும் சிறப்புமிக்க தேவிக்கு
செவ்விதழ் செழுமை மலர்கள் சமர்ப்பணம்
ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!
ஆடல்குல மரபாய்
கால் கொண்டு தெரு இறங்கினால்
வீதி ஆண்மையெல்லாம்
வியர்த்துதவிக்கும்
அரசன் முதல் ஆண்டி வரை
உறங்கா அவளிரவு விரும்ப
ஆடல்குல மரபாய்
அனைவரிலும் துயில் துய்த்தாள்
அப்பெரும் அழகு கிழத்தி
பொன்னும் பொருளுமாய்
குவிந்த பொக்கிஷம்
இளமையோடு ..இரையாக
சுற்றிய வண்டுகள் ...
வற்றிய மதுகண்டு
மாற்று கேணி தேட
உளுத்து போன உடலில்
மிச்சமாய் தேங்கியது
பலர் கொஞ்சிய
சுருக்க உதட்டு மேல்மச்சமே
ஊரை உறங்க வைத்தவளின்
இமைமூடா இரவை
தாலாட்டி கையேந்த.இன்று
அம் மகனும் இல்லை
எம்மானும் இல்லை.....
மயானம் நோக்கியே
வழி காட்டுகிறது
பலர் நைத்து பரிசளித்த
மரண வழி தேகநோய் பாதைகள்..!!!
மரமென உயிரென
வந்தமர்ந்தவர்கள்
நேரம் முடிந்து கிளம்பி விட
தனித்துவிடப்பட்ட
மரமும் பலகையும்
நகராத நட்பு ஆகின
குருவிக்காதல் மரம் செப்ப
தேகமனித மோதலை சிலேடையாய்
பலகை சொல்ல
குலுங்கி சிரித்த மரத்திலிருந்து
குதித்து வந்தமர்ந்தன
ஆயுள் பழுத்த முதுமை இலைகள்
கிளையுதிர் இலை
உன்னில் பாலையெனில்
காலடி கரையான்
என்னின் உயிர்வதை
நிதர்சனம் செப்பியது
உளுத்துபோகும் கட்டை
அருகருகே இருப்பாதல்
தான் நட்பானோம் என்று
அவைகள் நம்ப..........
இருக்கிறது..நடுவாய்..இருவருக்கும்
எங்கோ ஒரு மரச்சீவலே பலகையாகும்
ஆதி அந்த சொந்தம்
சுயம்பென எவருமில்லாமல்
தொடர்போடு தொடர்பு வைத்தே
மரமென உயிரென
மதமென....மனிதமென ....
இங்கு
அணு பிரிக்கிறான்
ஆதிகாட்டுப் பிரம்மன்
நேரம் முடிந்து கிளம்பி விட
தனித்துவிடப்பட்ட
மரமும் பலகையும்
நகராத நட்பு ஆகின
குருவிக்காதல் மரம் செப்ப
தேகமனித மோதலை சிலேடையாய்
பலகை சொல்ல
குலுங்கி சிரித்த மரத்திலிருந்து
குதித்து வந்தமர்ந்தன
ஆயுள் பழுத்த முதுமை இலைகள்
கிளையுதிர் இலை
உன்னில் பாலையெனில்
காலடி கரையான்
என்னின் உயிர்வதை
நிதர்சனம் செப்பியது
உளுத்துபோகும் கட்டை
அருகருகே இருப்பாதல்
தான் நட்பானோம் என்று
அவைகள் நம்ப..........
இருக்கிறது..நடுவாய்..இருவருக்கும்
எங்கோ ஒரு மரச்சீவலே பலகையாகும்
ஆதி அந்த சொந்தம்
சுயம்பென எவருமில்லாமல்
தொடர்போடு தொடர்பு வைத்தே
மரமென உயிரென
மதமென....மனிதமென ....
இங்கு
அணு பிரிக்கிறான்
ஆதிகாட்டுப் பிரம்மன்
Subscribe to:
Posts (Atom)