Tuesday 17 February 2015

பசுமைக்கொலையாளிகள்

பணமிருக்கும் மனங்கள்
எளிதாய் நட்டுவிடலாம்
ஓர் பள்ளியையும்
ஆலயத்தையும்
ஊருக்கு பொதுவாய்

எங்கிருந்து வேரூன்ற முடியும்
அத்தியாவசிய தேவை தீர்த்து
உயிரினக் கசடுகளை
உல்லாசபயணம் அழைத்துச் செல்லும்
ஓர்
புண்ணிய நதியை

பசுமைக்கொலையாளிகள்
அறியுமா..

வறண்ட பூமி வெடிக்க
வரும்
தலைமுறைக்கு
தான் செய்யும் பாதகம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..