Sunday 14 May 2017

கருணையின் கதவுகள்




தட்டுங்கள் திறக்கப்படும் 
என்றனர்
தட்ட தட்ட
திறக்கப்பட்டது 
திறந்த வழியெங்கும் 
கருணை பரவி கிடந்தது 
செல்ல செல்ல நம்பிக்கை துளிரும் விட்டது
பரமபத கால விளையாட்டில்.........
முடிவடைந்த பாதையின் வாயிலில்
பழைய சாத்தான் நின்று 
கெக்கரித்துக் கொண்டிருந்தான் 
கை தந்த தேவனோ 
கழுமரத்தில்
கருணையின் எல்லா வழிகளும் 
எப்போதும் முடிவடைவதில்லை
சொர்க்கத்தில்