Monday 23 February 2015

குழந்தை சுமந்த தாய்மையில்

பாவாடை இழுத்து சொருகி
பாண்டி ஆடிய

பக்கத்துவீட்டு அக்காவோடு
வாயாடி சண்டையிட்ட

குச்சி ஐஸ் ஒழுகவிட்டு
சிலுப்பி நடந்த

சத்தம் போட்டு சிரித்த
பால்யத்தை

பந்தலிட்ட ஒருநாள்
திருமண விளையாட்டில்

பங்கு போட
வந்துவிட்டான்

குழந்தை சுமந்த
தாய்மையில்
அம்மா என்றழைக்க மகன்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..