Tuesday 17 February 2015

அமைதி தரும் அன்னையே

அமைதி தரும் அன்னையே
ஆறுதல் தரும் தேவமே
தன்னம்பிக்கை தரும் ஒளியே
தளராத மனம் தரும் தேவியே
வெற்றிதரும் சுடரே
வேதனை நீக்கும் வரமே
கருணை அணைக்கும் மனமே
கனிவாய் வந்த பொக்கிஷமே
கதியென நாடுவோரை எதிர்கொண்டு துயர் நீக்கும் நீள்யோகமே
ஆனந்தமளிக்கும் அன்பு பூக்கடலே
என்றும் நிம்மதியாய் சூழும் தேவ மாத்ரேயே

சரணம் சரணம் பரிபூரணசரணம் தாய்மை மலரடியே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..