Friday 20 February 2015

எட்டிநின்ற மயக்கமாய்

ஆலிங்கனம் முடிந்த
அந்திமா பொழுதுகளில்

அசதி கிறக்கமாய்
நான் சரிய

எட்டிநின்ற மயக்கமாய்
அவள் குளிர

பந்தி பரிமாறும்
ஆசைப் பார்வைகளும்
அர்த்தமில்லா சிரிப்புகளும்

முழுவெட்க
முரசு கொட்டுகிறது

அதுவரை கடந்த
ஆனந்த களப்போரை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..