பேரனுக்கு நோட்டுபுத்தகம்
மருமக கேட்ட பொன்னி அரிசி
கிழவிக்கு வெத்தலை
வீணா போன மகன்
விரும்பி சாப்பிடுற அதிரசம்
பட்டியல் போட்டும்
பட்டிக்குள் அடங்காமல்
உசுரு நோக
உறிஞ்சி எடுத்த
உழைப்பு கூலியை
மிச்சமில்லாம
பாச மனுச காட்டில்
விதைச்சு
விழித்தெழ முடியாம
சாவியா போன
விதைநெல்லு பழனிச்சாமியை
உறவுக் குருடாக்கியுள்ளது
கையில் வந்து
பையில் தங்காம போன பணங்காசு
மருமக கேட்ட பொன்னி அரிசி
கிழவிக்கு வெத்தலை
வீணா போன மகன்
விரும்பி சாப்பிடுற அதிரசம்
பட்டியல் போட்டும்
பட்டிக்குள் அடங்காமல்
உசுரு நோக
உறிஞ்சி எடுத்த
உழைப்பு கூலியை
மிச்சமில்லாம
பாச மனுச காட்டில்
விதைச்சு
விழித்தெழ முடியாம
சாவியா போன
விதைநெல்லு பழனிச்சாமியை
உறவுக் குருடாக்கியுள்ளது
கையில் வந்து
பையில் தங்காம போன பணங்காசு
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..