Sunday 8 February 2015

பேரனுக்கு நோட்டுபுத்தகம்
மருமக கேட்ட பொன்னி அரிசி
கிழவிக்கு வெத்தலை
வீணா போன மகன்
விரும்பி சாப்பிடுற அதிரசம்

பட்டியல் போட்டும்
பட்டிக்குள் அடங்காமல்

உசுரு நோக
உறிஞ்சி எடுத்த
உழைப்பு கூலியை

மிச்சமில்லாம
பாச மனுச காட்டில்
விதைச்சு

விழித்தெழ முடியாம
சாவியா போன
விதைநெல்லு பழனிச்சாமியை

உறவுக் குருடாக்கியுள்ளது

கையில் வந்து
பையில் தங்காம போன பணங்காசு



No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..