Monday 23 February 2015

என்னில் எழும் ஒரேகேள்வி



பொய்யென தெரியா
பொய்கள் சொல்லிவிட்டு

பிள்ளை விழி விழித்து
பிரியமாடி நிற்கிறாய்

நேசம் மன்னித்த போதும்
பந்தம் விலக்கி வைக்க
சொல்கிறது ....
உயிராடும் நேர்மை

உணர்வாய் எனக்குள் நீ
அணைவாய்
நிறையும் போதெல்லாம்

என்னில் எழும் ஒரேகேள்வி
உனக்கென துடித்து

உன்மேல் அடி
விழும் முன் தாங்கி
கேடயமாகும்
என்னிடம்

எப்படி ....
எப்படியடி உனக்கு
பொய் சொல்ல மனசு வருது??????????



No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..