Sunday 8 February 2015

எங்கள் மதுரை மீனாள்

கோல கொண்டையில்
நட்சத்திர சுட்டியிட்டு

கொத்தும் கிளி தோளேந்தி
வெற்றிலைமாலைவேள்வியுடன்
சித்திரை பவுர்ணமியில்
சிவன் அவன் சேர

இருகர தவேமேந்தி
திருத்திய விழிகளில்
தொடுத்த காதல் நிறைத்து
தச்சனின் மகளாம்
மரகதமாணிக்க பச்சைகற்பூரவல்லி

சுந்தரன் அவன்
குலசேகர பாண்டியன் கனவு வர
கடம்பவன காடழித்து
மாநகரமாக்கிய
ஆலவாய் திருநகராம்
நான் மாடக்கூடலில்
ஆடிவெளிவீதி உள்ளாடி
சித்திரை ஆவணி வெளிவீதிகள்
சித்திரமிட

பொற்றாமரைக் குள பொன்னாய்
செவ்வாடை செழிப்புடன்

இருக்கிநெருக்கிய ஊரில்
செழித்த பாசமக்கள்...நடமாடும்

தூங்காநகரில்...துடிப்புடன் விழித்து
மண்காத்து மக்கள்நேசித்து
மணம் கமழும்
தாழம்பூ தமிழாய்

அண்ணன் அழகர் கரமிணைத்த
சொக்கன் அவன் சுந்தரனோடு

வீற்றிருக்கிறாள் வெற்றியாடி

கைகுவிப்பரைஎல்லாம்
கரம் பிடித்து அணைத்து

மங்கையர் தம் மஞ்சள்நெற்றியில்
மங்கல குங்குமம் காக்கும்

எங்கள் மதுரை மீனாள்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..