Friday 2 January 2015

கருநிறை வேதமே சரணம்

நினைவில் உண்மையும் நிகழ்வில் தூய்மையும்
தரும் கருநிறை வேதமே சரணம்

ஆன்ம பிரியமாய் வந்து ஆனந்த வெற்றிகள் தரும்
பொருள்நிறை சூட்சமமே சரணம்

என் தேவைகள் உணரும் தாயாய் .....
தீமைகள் உணர்த்தும் தீர்மாய்
நன்மைகள் அணைக்கும் நாதமாய்
எப்போதும் என்னைச் சுற்றிச் சூழும் பாதுக்காப்பு
பவித்ர பெட்டகமே.....

ஆண்டு தொடக்காமாய் நான் வந்து உன் சமாதி சரணடைய
வருடம் முழுவதும் வசந்தமாய் ஒளிசூழ உடன் அணைத்து
கவலை கண்ணீர் நீக்கும் அரணே.....
என் முன்னேற்ற முழுசக்தியே
சரணம் சரணம் என சமர்ப்பிக்கிறேன்

என் ஜீவ நன்றியை...என்றும் நின் மலர்பொற்பாதங்களில்....

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்தியமயி சரணம்..!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..