Monday 26 January 2015

பருவத் திண்ணையில்

எட்டுபுள்ளி கோலத்தை
தப்பில்லாம போட்டு

குழம்பு கொட்டிவைத்த உப்பை
சமாளிக்க சொல்லி கொடுத்து

அதிகாலைமுதல்
நடுசாமம் வரை....

வேலைகளூடே
வெட்டிகதையளந்து
உலகசெய்தி வாசிக்கும்
அம்சு அக்காவும்

மறுவீடு சென்ற பின்னும்
மறக்க முடியா
அங்கமாகிப்போகிறாள்

பவளக்கொடியின்
பருவத் திண்ணையில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..