Thursday 15 January 2015

பாச உரமேறும் பிள்ளை பூமி

பேருவைச்சு
சோறு பிசைஞ்சு
ஊட்டி உருவி விட்டு
உறங்கவைத்த

பெரியாத்தா
சிரிக்குறா

அழகு சொக்கி
மயங்கி

சதையில்லா அவ
கன்னம் திருகி

ஆத்தா என்றழைத்து
செழித்து சிரிக்குது

பாச உரமேறும்
என் பிள்ளை பூமி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..