Monday 26 January 2015

காத்திருக்கிறேன்.............வா

நினைத்து தவிப்பதாய்
உருகி துடிக்கும்

என் அணுச்செல்களில்
நீக்கமற நிறைந்த

என்னை விட எனக்கு
அதிமுக்கியமானவளே

வேள்வியென வந்த பின்
வெம்மை என ....இட்ட
கோடு தாண்டலாமா

அழுகை சிரிப்பு
முத்த அணைப்பெனும்
உணர்வெல்லைகளின்
வார்த்தையாடல்கள் களைந்து

உனக்கென துடிப்பவளிடம்
உள் மறைத்தல்கள் உதறி விரை

மாசற்ற அன்புவெளியில்
ஏகாந்த உயிர்ப்பேந்தி

காத்திருக்கிறேன்.............வா


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..