Monday 26 January 2015

கண்ணாம்மூச்சாடும் முதுமையில்

தொட்ட போதெல்லாம்
தொட்டுத்தள்ளி

தொடுதல் வெட்கம் பூக்க
தொடாததூரம் எட்டி நின்று..விழி
தொட்டு விரதம் முடித்தவள்

தொட்டு தொட்டு
தொட்ட பிடி விடாமல்

இருக்கி பிடித்தே நடக்கிறாள்

நான் முந்தியா
அவள் முந்தியா...என
மூச்சு கண்ணாம்மூச்சாடும்
முதுமையில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..