Monday 19 January 2015

காவியத் தமிழே



கண்ணே மணியே
கனியமுதே
கட்டிக்கரும்பே
காவியத் தமிழே

மலர் தேன் சுவையே
மதுப்பூ மணமே

கையெடுத்து நெஞ்சமர்த்தி
கொஞ்ச கொஞ்ச
இன்னும் இன்னும்
இறைஆயுள் வேண்டும் வரமே

வேரோடு புதுபிக்கும்
பேரனெனும் பேரின்பமே

எட்டநின்று
கிட்ட பார்த்து
பெருமிதம் விம்முகிறேனடா

முதுமை பழுக்கும்
பருவவாசனை கனிக்காட்டில்

உன்னுடன் நானும்
இன்று
கிழவனாய் பிறந்து


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..