Monday 26 January 2015

வாழ்ந்த பெருமை சொல்லி



வாழ்ந்த பெருமை சொல்லி
வடியாத கண்ணீர் துடைத்து
ஊர் கூடி
ஒப்பாரி வைத்து

கொட்டு மேளத்துடன்
கோடிதுணிபோட்டு

ராட்டினப் பூ சப்பரம் கட்டி
தெருவெங்கும் மணக்க அனுப்பி
குழியேத்தி

பத்தாம் நாள் கறிச்சோறு போட்டு
கழுவித்துடைத்த திண்ணையில்

இன்னமும் அமர்ந்திருக்கிறாள்
கல்யாணச்சாவு அப்பத்தா

கடக்கும் போதெல்லாம்
வெத்தலை இடித்துக் கொண்டு


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..