Monday 26 January 2015

வெல்ல முடியா தாய்மை

வலியில்லை
பதறாதே

பசியில்லை
படுத்தாதே

தளரவில்லை
தவிக்காதே

சோர்வில்லை
தைரியமிருக்கிறேன்
பயப்படாதே

என

இல்லையென்று
பிள்ளை மொழிந்தாலும்

இமையணைத்து
கலங்கித் தான் துடிக்கிறது

சுற்றும் குழவி
கொட்டுமோ..எனும்
வேதனை நினைவை

வெல்ல முடியா தாய்மை


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..