Monday 19 January 2015

அனுபவ முதுமை மரங்கள்

துளிர்த்த இலை
காம்பு பழுத்து
கிளை உதறிய போதும்

ஆணிவேரின்
உறுதியிலேயே
ஆளுயர்ந்து நிற்கிறது

அயல்நாடு மகன் செல்ல
அவதானிப்பார் அற்ற
அனுபவ முதுமை மரங்கள்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..