Wednesday 21 January 2015

ஆனந்த அன்பாடும் அணில் பிள்ளையென

பிடித்தது எல்லாம்
பிடித்தமாய் செய்து
பிடித்த பித்தோடு
பிணை காத்திருந்தேன்

கருவோடு ஏந்தி
கண்ணோடு நிறைத்தவள்
காகமென வருவாளென

அமுதூட்டியவளுக்கு
அன்னமிட்டு

மென்மை ஏந்திய
மேன்மை பிறவியவள்

சின்ன நடை போட்டு
சிங்கார கண்சிமிட்டி
குடுகுடுவென வந்து
செல்லப் பிரியம் கொறித்தாள்

ஆனந்த அன்பாடும்
அணில் பிள்ளையென

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..