Monday 26 January 2015

பாரத்மாதா ஹி...ஜே....


செங்கதிரோன் மண்ணுதிக்க
செழுமை வேள்வியாய்
குவிந்தோங்கிய பொன் பூமியில்
முடியாட்சி தலையெடுத்து
முதுமை தொன்மையாய்...முகிழ்வு ஆள

மானுட சுழற்சி கால அச்சேறி
மனிதப் பகை மேலோங்க
மன்னராட்சி ஆட்டம் கண்டு
மாற்றான் உள்நுழைந்து
அடிமைச்சங்கிலி கொண்டு எம் மனிதன் கையிறுக்க

தன் மக்கள் துயர் கண்டு தான் ஓலமிடும்
பாரத தாய்மையை...வெட்ட வந்தவன் வேள் தடுக்க
தீபகற்பமெங்கும் ..தீக்கனல் முளைத்து

செங்குருதி சாய்த்து தன் தாயவள் மானம் காக்க

இருள் விலகிய ஒரு நாளில்..இந்தா எனக் கொடுத்து
ஓடி...நரிக்கூட்டம் விலகித்தெறிக்க

செம்பவள முந்தானையில்..வெண் உப்புவியர்வை துடைத்து
கருநீல சக்கரத்துடன்...பசுமை சேலை கட்டி

பாங்காய் கொடியேறினாள் ..எம் அரங்கேற்றத்தாய்மை

நீயே மக்கள்..நீயே மன்னன்..இஃதே உன் இந்தியா
என..இடம் பிரித்தும் கொடுத்தாள்..
சட்டமாய் திட்டம் வகுத்து....

தாய் தந்த வழியை..பின்பற்றி மூத்த தலைமகனாம்
முதல் குடிமகனார்...........

இன்று முதலாய் அவளுக்கு அலங்காரஆடைகட்டி
வானுயரம் ஏற்ற...

நாடெங்கும்..பட்டொளி வீசி பறக்கிறது ஆனந்த சந்தோஷமாய்

ரத்தம் சிந்தைய பெருமகன்களின்..நிம்மதி சுவாசம்

எவரையும் எதிர்த்து கேள்வி கேட்கும்
கூன் நிமிர்த்திய சுதந்திரமாய்...

பொய்மை போட்டி பகைவிலக்கி...தாய்மையாய் அவளை
வேற்றுமை கையிணைத்து..ஒத்த மன சிந்தனையுடன்

மனிதம் மாட்சிமை சக்தியாய்..கொண்டாடி கூத்தாடி
சாத்வீகம் காப்போம்..வீரத் தோழமைகளே.....

பாரத்மாதா ஹி...ஜே...........ஜெய்ஹிந்த்...!!!!!!!!!!!!!!!!!!!! —

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..