Monday 26 January 2015

காப்பியங்களில் மட்டும் கற்பியல் வாழும்...

ஸ்ரீ ராமன் வருவான்
வில் ஒடித்து
மாலையிட்டு
சிந்தையெங்கும்
தனை மட்டுமே நிறைப்பான்

தன் சொல் நாயகன்
ஒருமவுன அமைதியில்
பழிச்சொல் தீண்ட
பாழ்மேனி எரிக்கும்

வரமேந்தும் சீதை தவங்களாய்

ஒழுக்க வேள்வியேந்தி
ஒருத்தி மட்டும் மனதிற்கொண்டு
அன்னைவார்த்தை மதித்து
அடர்ந்த காடுசென்று
அறுவரென குகனோடுஆகி
அணில்பிள்ளை கோடிட்ட
ராம வரங்களாய்

பிறவியெடுக்கும் மானுடம்

திரேதா யுகத்தோடு
தீர்ந்துவிட்டது.....

காப்பியங்களில் மட்டும்
கற்பியல் வாழும்

கலியுகத்தில்..........

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..