Friday 2 January 2015

புதுயுக ..புத்தாண்டு வாழ்த்துக்கள்

புதுயுக ..புத்தாண்டு வாழ்த்துக்கள்
தோழமை பிரியங்களே.....

மாதச்சீராட..மங்கை பிறப்பெடுத்து
ஓய்ந்த வயது தந்து ஓடிக்கடல் கடக்கும்

இருபது நூற்றாண்டு கண்ட
14 வயது பேரிளம் பொதுமையை வாழ்த்தி விடைபெற்று

15 ம் வயது பச்சிளங்குழந்தையை
வசந்த மலர்தூவி வரவேற்போம் ..கனிவு மனங்களே

வந்துகடந்த ஆண்டுகளை மெல்ல திரும்பி
மாதமென நாளென..மணித்துளி நிமிட நொடிகளில்
சற்று உற்று நோக்க.....

சந்தோஷ பேரின்பத்தை விட
கவலை கண்ணீர் வழிந்த தருணத்திலேயே
வந்து வசித்துப் போகிறது.....உருவமில்லா மனசு

முயற்சிக்கள் தந்து..முழு உத்வேக போராட்டம் தந்து
முன்னேற்ற படிகட்டுகள் மீது...முடியாத சாத்தியங்களை
முழுவேகமாய் ஏற வைத்து....பாழ்வினை நிழலாட
பாம்பு இறக்கமும் தந்து..பரி வேகத்துடன் எழுந்து மீளும்
தன்னம்பிக்கைகளாய்..நமை நமக்கு அடையாளம் காட்டி

நம்மையறியாமல் ..நம்மில் இருந்து இளமை திருடிச்செல்லும்
களவாணி...வருடமே

அன்பு..பாச..நேசமென இமையணைத்து தலைகோதும் உயிர்களை
மனெமெனும் மாயையாய் உணர்வுகொண்டு ஆடவைத்து
மனிதர்களாய் முன்னிருத்தி ..சோதனையில் சாதனையாய்
தோழமை உயிர்களை...
புரிய வைத்த புது மண.. என் மடிப் பெண்ணே

உன்னை வணங்கி ...காலக்கணவன் கடல் சேர வழியனுப்புகிறோம்...கன்னக் கண்ணீர் வழிய தாய்மையாய்

மொட்டுப் பிரசவமேந்தி பன்னிருதிங்கள் தாங்கி
ஆங்கிலச்சீமாட்டியின் அன்புத்திரு மகளை

பூத்தூவி..வண்ணச்சரக்கொன்றை வாசமேந்தி
தாழம்பூ சிங்காரித்து முக்கனிப் சுவையேந்தி
கும்பக் கலசமேந்தி இறைப் பிரியமாய் வரவேற்கிறோம்
பெண்மையே

வருக வருக...வசந்ததிருப் பெண்மையே

தருக தருக.....தாளாத மனநிறைவு நிம்மதி ஆனந்த சந்தோஷங்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழமைகளே...!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..